ETV Bharat / state

கள்ளச்சாராய மரணத்திற்கு இழப்பீடு கொடுக்கக்கூடாது; இழப்பீடு வாங்க வேண்டும் - ஜவாஹிருல்லா பேச்சு! - M H Jawahirullah

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 7:12 PM IST

Jawahirullah: கள்ளச்சாராய மரணங்கள் ஏற்படும் போது மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடு கொடுக்கக் கூடாது என்றும், அதற்கு பதிலாக பொறுப்பில் இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அதிகாரிகள் மற்றும் கள்ளச்சாராயத்தை விற்றவர்களிடமிருந்து இழப்பீடு வசூலிக்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

பேட்டியளித்த ஜவாஹிருல்லா
பேட்டியளித்த ஜவாஹிருல்லா (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கை குறித்த விவாதம் ஜூன் 20 முதல் தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்தொடரில், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் விலக்கு, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி அரசுத் தீர்மானங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, இன்று (சனிக்கிழமை) மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவை கூட்டத்தொடரை தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த அதிமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட போராட்ட வழக்குகள், கரோனா காலத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள், இந்த வழக்குகள் எல்லாம் திமுக அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்து திரும்பப் பெற்றிருக்கிறது. திரும்ப பெற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் இருக்கக்கூடிய மின் பொருள்களில் இருந்து நீக்கப்படாததால் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் வேலைக்குச் செல்ல முடியாமல் கடவுச்சீட்டு எடுக்க முடியாத நிலை இருக்கிறது.

இதையும் படிங்க: திருப்பூர்: கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி; காவல்துறை விளக்கம் என்ன? - Illicit Liquor Issue in Tirupur

இதை மறுபரிசீலனை செய்து அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் மதுவிலக்கு சட்டத்தில் தண்டனைகளை கடுமையாக்க கூடிய பல்வேறு விதிமுறைகள் சேர்க்கப்பட்டிருக்கிறது. கள்ளச்சாராய மரணம் ஏற்படும் போது மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடு கொடுக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, பொறுப்பில் இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அதிகாரிகள் மற்றும் கள்ளச்சாராயத்தை விற்றவர்களிடமிருந்து இழப்பீடு வசூலிக்க வேண்டும்.

கள்ளச்சாராயம் மரணங்கள் ஏற்படும் போது, மாவட்ட அதிகாரிகள் பொறுப்பாக்கப்படுவார்கள் என்று சொன்னார், அது சட்டபூர்வமாக கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டினுடைய பொருளாதாரம் நாட்டிற்கே உதாரணமாக இருக்கிறது. அப்படிப்பட்ட தமிழ்நாட்டை மதுப்பழக்கமும், போதைப் பழக்கமும் முற்றிலும் இல்லாத ஒரு மாநிலமாக உருவாக்கப்பட வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மதுவிலக்கு திருத்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் - TN Assembly 2024

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கை குறித்த விவாதம் ஜூன் 20 முதல் தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்தொடரில், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் விலக்கு, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி அரசுத் தீர்மானங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, இன்று (சனிக்கிழமை) மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவை கூட்டத்தொடரை தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த அதிமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட போராட்ட வழக்குகள், கரோனா காலத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள், இந்த வழக்குகள் எல்லாம் திமுக அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்து திரும்பப் பெற்றிருக்கிறது. திரும்ப பெற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் இருக்கக்கூடிய மின் பொருள்களில் இருந்து நீக்கப்படாததால் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் வேலைக்குச் செல்ல முடியாமல் கடவுச்சீட்டு எடுக்க முடியாத நிலை இருக்கிறது.

இதையும் படிங்க: திருப்பூர்: கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி; காவல்துறை விளக்கம் என்ன? - Illicit Liquor Issue in Tirupur

இதை மறுபரிசீலனை செய்து அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் மதுவிலக்கு சட்டத்தில் தண்டனைகளை கடுமையாக்க கூடிய பல்வேறு விதிமுறைகள் சேர்க்கப்பட்டிருக்கிறது. கள்ளச்சாராய மரணம் ஏற்படும் போது மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடு கொடுக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, பொறுப்பில் இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அதிகாரிகள் மற்றும் கள்ளச்சாராயத்தை விற்றவர்களிடமிருந்து இழப்பீடு வசூலிக்க வேண்டும்.

கள்ளச்சாராயம் மரணங்கள் ஏற்படும் போது, மாவட்ட அதிகாரிகள் பொறுப்பாக்கப்படுவார்கள் என்று சொன்னார், அது சட்டபூர்வமாக கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டினுடைய பொருளாதாரம் நாட்டிற்கே உதாரணமாக இருக்கிறது. அப்படிப்பட்ட தமிழ்நாட்டை மதுப்பழக்கமும், போதைப் பழக்கமும் முற்றிலும் இல்லாத ஒரு மாநிலமாக உருவாக்கப்பட வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மதுவிலக்கு திருத்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் - TN Assembly 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.