ETV Bharat / state

கோபிசெட்டிபாளையம் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு! - wild elephant died in erode

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 19, 2024, 10:22 AM IST

wild elephant died in erode: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அந்தியூர் வனச் சரகத்திற்குட்பட்ட கரும்பாறை என்ற இடத்தில் மின்சார வேலியில் சிக்கி 20 வயதுடைய ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

உயிரிழந்த யானை புகைப்படம்
உயிரிழந்த யானை புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அந்தியூர் வனச் சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான யானை, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காத நிலையில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வன எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

இதனால் யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தாமல் இருப்பதற்காக பெரும்பாலான விவசாய நிலங்கள் முழுவதும் மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மின்சார வேலியையும் உடைத்து விட்டு யானைகள் நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் ஒரு சில இடங்களில் விவசாயிகள் அந்த மின்வேலியில் உயர் அழுத்த மின்சார இணைப்பு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரும்பாறை பகுதியில் மட்டும் 3 காட்டு யானைகள் மாலை 5 மணி முதல் அதிகாலை வரை சுற்றித்திரிந்து பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளன. நேற்று இரவு இதே போன்று 20 வயதுடைய ஆண் யானை ஒன்று நிலத்திற்குள் புகுந்த போது கரும்பாறை பகுதியில் மழை நீர் ஓடையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அந்தியூர் வனத்துறையினர் கால்நடை மருத்துவர்களை கொண்டு யானைக்கு உடற்கூராய்வு செய்தனர்.

இதையும் படிங்க: அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆட்கள் தேர்வு தனியாருக்கு விடப்படுவது ஏன்? - அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அந்தியூர் வனச் சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான யானை, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காத நிலையில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வன எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

இதனால் யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தாமல் இருப்பதற்காக பெரும்பாலான விவசாய நிலங்கள் முழுவதும் மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மின்சார வேலியையும் உடைத்து விட்டு யானைகள் நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் ஒரு சில இடங்களில் விவசாயிகள் அந்த மின்வேலியில் உயர் அழுத்த மின்சார இணைப்பு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரும்பாறை பகுதியில் மட்டும் 3 காட்டு யானைகள் மாலை 5 மணி முதல் அதிகாலை வரை சுற்றித்திரிந்து பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளன. நேற்று இரவு இதே போன்று 20 வயதுடைய ஆண் யானை ஒன்று நிலத்திற்குள் புகுந்த போது கரும்பாறை பகுதியில் மழை நீர் ஓடையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அந்தியூர் வனத்துறையினர் கால்நடை மருத்துவர்களை கொண்டு யானைக்கு உடற்கூராய்வு செய்தனர்.

இதையும் படிங்க: அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆட்கள் தேர்வு தனியாருக்கு விடப்படுவது ஏன்? - அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.