ETV Bharat / state

சென்னை: தனியார் மருத்துவமனை உரிமை பிரச்சனை.. பெண் பரபரப்பு புகார்.. மருத்துவர் அளித்த விளக்கம் என்ன? - hospital management issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

சென்னை அடுத்துள்ள மதுரவாயலில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. தற்போது இந்த மருத்துவமனைக்கு இரு தரப்பினர் உரிமை கோரியதால், அங்கு குழப்பமான சூழல் நிலவிவருகிறது.

மருத்துவமனைக்கு உரிமை கோரும் இருதரப்பினர்
மருத்துவமனைக்கு உரிமை கோரும் இருதரப்பினர் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை அடுத்துள்ள மதுரவாயலில் அமைந்துள்ளது 24 மணி நேர செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை. இந்த மருத்துவமனை அமைந்துள்ள கட்டிடத்தை நாகராஜன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தம் செய்து அங்கு மருத்துவம் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அவருடன் இணைந்து அரவிந்த் என்பவர் இயற்கை மருத்துவம் பார்த்து வந்ததாகத் தெரிகிறது. இந்தநிலையில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அரவிந்து இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அரவிந்தின் மனைவி நிவேதனா அரவிந்துக்கு பதிலாக அங்கு சென்று இயற்கை மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

புகார் அளித்தவர்கள் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

உரிமை கோரும் இருதரப்பு? இந்நிலையில் மருத்துவர் நாகராஜன் மற்றும் நிவேதனா இரு தரப்பிற்கும் இடையே யார் மருத்துவமனையை நிர்வாகம் செய்வது என்ற மோதல் போக்கு உருவாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிவேதனா கூறுகையில்,"கடந்த 10 ஆண்டுகளாக நாகராஜன் மருத்துவமனைக்கு வரவே இல்லை என்றும் அனைத்தையும் உருவாக்கியது தனது கணவர் அரவிந்த் தான். அத்துடன் கணவர் இறந்த பிறகு கடந்த ஏழு மாதங்களாக தான் அந்த பொறுப்பை எடுத்து நடத்தி வந்ததாகவும் தற்போது திடீரென தன்னை வெளியேறும்படி நாகராஜன் வற்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அதற்குள் நீதிமன்ற உத்தரவை மீறி மருத்துவமனை வளாகத்தை நாகராஜன் தரப்பு திறந்து விட்டதாகவும் தெரிவிக்கிறார். இது தொடர்பாக புகார் அளிக்க வந்த தன்னை நாகராஜன் தரப்பிற்கு ஆதரவாக போலீசார் தகாத முறையில் பேசி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனவே இந்த விவாகரத்தில் நீதிமன்ற உத்தரவு வரும் வரை மருத்துவமனை வளாகத்தை நாகராஜன் தரப்பு திறக்க அனுமதிக்கக் கூடாது எனவும் தன்னை அவமரியாதையாக பேசிய போலீசாரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனவும் நிவேதனா கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: குழந்தையில்லாத தம்பதியிடம் பாச உரையாடல்.. பணத்துக்காக கொலை செய்த 5 பேர் கைது!

அதேசமயம் நிவேதனாவின் இந்த குற்றச்சாட்டை போலீசார் மறுத்துள்ளனர். அதுமட்டுமின்றி நிவேதனா எந்தவித ஆதாரமும் இன்றி மருத்துவமனையை உரிமை கோருவதாகவும், ஆனால் நாகராஜன் தரப்பு அனைத்து ஆதாரங்களையும் கையில் வைத்துள்ளார் எனவும் தெரித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர் நாகராஜன் தரப்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "அரவிந்த் என்பவர் தங்கள் மருத்துவமனையில் பணிபுரிந்தவர். ஆனால் அவர் இறந்த பின்னர் தற்போது அவரது மனைவி மருத்துவமனையை தன் வசம் எடுத்துக் கொள்ளப் பார்க்கிறார். இங்கு பத்தாண்டுகளாகப் பணி புரியும் செவிலியர்களைத் தரக்குறைவாக பேசி அவமதித்து வேலையிலிருந்து வெளியேறுமாறு மிரட்டி உள்ளார்.

அதேசமயம் இயற்கை மருத்துவர் என பொய் சொல்லி ஏமாற்றுகிறார். அவருக்கும் இந்த மருத்துவமனைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எங்களிடம் ஆதாரங்கள் அனைத்தும் உள்ளன அவற்றை காவல் நிலையத்தில் கொடுத்துள்ளோம். அதுமட்டுமின்றி நீதிமன்ற தரப்பிலிருந்து எங்களுக்கு எந்தவித சம்மனோ அறிவிப்போ வரவில்லை. அதனால்தான் நாங்கள் மருத்துவமனையை திறந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். இந்த விவகாரத்தை காவல்துறையினர் சரியான முறையில் தான் அணுகி வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

சென்னை: சென்னை அடுத்துள்ள மதுரவாயலில் அமைந்துள்ளது 24 மணி நேர செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை. இந்த மருத்துவமனை அமைந்துள்ள கட்டிடத்தை நாகராஜன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தம் செய்து அங்கு மருத்துவம் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அவருடன் இணைந்து அரவிந்த் என்பவர் இயற்கை மருத்துவம் பார்த்து வந்ததாகத் தெரிகிறது. இந்தநிலையில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அரவிந்து இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அரவிந்தின் மனைவி நிவேதனா அரவிந்துக்கு பதிலாக அங்கு சென்று இயற்கை மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

புகார் அளித்தவர்கள் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

உரிமை கோரும் இருதரப்பு? இந்நிலையில் மருத்துவர் நாகராஜன் மற்றும் நிவேதனா இரு தரப்பிற்கும் இடையே யார் மருத்துவமனையை நிர்வாகம் செய்வது என்ற மோதல் போக்கு உருவாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிவேதனா கூறுகையில்,"கடந்த 10 ஆண்டுகளாக நாகராஜன் மருத்துவமனைக்கு வரவே இல்லை என்றும் அனைத்தையும் உருவாக்கியது தனது கணவர் அரவிந்த் தான். அத்துடன் கணவர் இறந்த பிறகு கடந்த ஏழு மாதங்களாக தான் அந்த பொறுப்பை எடுத்து நடத்தி வந்ததாகவும் தற்போது திடீரென தன்னை வெளியேறும்படி நாகராஜன் வற்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அதற்குள் நீதிமன்ற உத்தரவை மீறி மருத்துவமனை வளாகத்தை நாகராஜன் தரப்பு திறந்து விட்டதாகவும் தெரிவிக்கிறார். இது தொடர்பாக புகார் அளிக்க வந்த தன்னை நாகராஜன் தரப்பிற்கு ஆதரவாக போலீசார் தகாத முறையில் பேசி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனவே இந்த விவாகரத்தில் நீதிமன்ற உத்தரவு வரும் வரை மருத்துவமனை வளாகத்தை நாகராஜன் தரப்பு திறக்க அனுமதிக்கக் கூடாது எனவும் தன்னை அவமரியாதையாக பேசிய போலீசாரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனவும் நிவேதனா கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: குழந்தையில்லாத தம்பதியிடம் பாச உரையாடல்.. பணத்துக்காக கொலை செய்த 5 பேர் கைது!

அதேசமயம் நிவேதனாவின் இந்த குற்றச்சாட்டை போலீசார் மறுத்துள்ளனர். அதுமட்டுமின்றி நிவேதனா எந்தவித ஆதாரமும் இன்றி மருத்துவமனையை உரிமை கோருவதாகவும், ஆனால் நாகராஜன் தரப்பு அனைத்து ஆதாரங்களையும் கையில் வைத்துள்ளார் எனவும் தெரித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர் நாகராஜன் தரப்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "அரவிந்த் என்பவர் தங்கள் மருத்துவமனையில் பணிபுரிந்தவர். ஆனால் அவர் இறந்த பின்னர் தற்போது அவரது மனைவி மருத்துவமனையை தன் வசம் எடுத்துக் கொள்ளப் பார்க்கிறார். இங்கு பத்தாண்டுகளாகப் பணி புரியும் செவிலியர்களைத் தரக்குறைவாக பேசி அவமதித்து வேலையிலிருந்து வெளியேறுமாறு மிரட்டி உள்ளார்.

அதேசமயம் இயற்கை மருத்துவர் என பொய் சொல்லி ஏமாற்றுகிறார். அவருக்கும் இந்த மருத்துவமனைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எங்களிடம் ஆதாரங்கள் அனைத்தும் உள்ளன அவற்றை காவல் நிலையத்தில் கொடுத்துள்ளோம். அதுமட்டுமின்றி நீதிமன்ற தரப்பிலிருந்து எங்களுக்கு எந்தவித சம்மனோ அறிவிப்போ வரவில்லை. அதனால்தான் நாங்கள் மருத்துவமனையை திறந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். இந்த விவகாரத்தை காவல்துறையினர் சரியான முறையில் தான் அணுகி வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.