ETV Bharat / state

“தமிழ்நாடு மீனவர்களும் இந்திய குடிமக்களே”.. ஐகோர்ட் மதுரைக்கிளை கருத்து! - TN fishermen issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 5:28 PM IST

Madurai Bench: இலங்கை சிறையில் இருக்கும் 26 மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கில், தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே. எனவே, மீனவர்களின் பாதுகாப்பு என்பது முக்கியமானது என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

ஐகோர்ட் மதுரை கிளை
ஐகோர்ட் மதுரைக்கிளை (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 26 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் முருகன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “தமிழக மீனவர்களுக்கும், இலங்கை கடற்படையினருக்குமான பிரச்னை அதிகரித்து வருகிறது. ஜூன் இரண்டாம் வாரத்தில் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ஜூன் 23ஆம் தேதி நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்களை கைது செய்தனர்.

இந்நிலையில், கடந்த ஜூலை 1ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி தொழில் செய்து வரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் குற்றவாளிகள் போல கைது செய்கின்றனர். மேலும், கிருமிநாசினியை அவர்கள் மீது தெளித்து மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2021-ல் குஜராத்தைச் சேர்ந்த மீனவர்கள், பாகிஸ்தான் கடற்படையினரால் தாக்கப்பட்ட போது மத்திய அரசு, பாகிஸ்தான் கடற்படையினருக்கு கடும் எச்சரிக்கையை விடுத்தது. ஆனால், தமிழக மீனவர்களின் விஷயத்தில் அது போன்ற நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 26 மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தமிழக மீனவர்களும், இந்திய குடிமக்களே. அவர்களின் பாதுகாப்பு என்பது முக்கியமானது” என்றனர். இதனையடுத்து, மத்திய அரசு தரப்பில், “மீனவர்களை விடுவித்து தமிழகம் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த பிரச்னை மற்றொரு நாடோடு தொடர்புடையது. ஆகவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை தமிழகம் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது” என்று கூறி வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க: நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம் தொகுதி தேர்தல் வெற்றிகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

மதுரை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 26 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் முருகன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “தமிழக மீனவர்களுக்கும், இலங்கை கடற்படையினருக்குமான பிரச்னை அதிகரித்து வருகிறது. ஜூன் இரண்டாம் வாரத்தில் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ஜூன் 23ஆம் தேதி நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்களை கைது செய்தனர்.

இந்நிலையில், கடந்த ஜூலை 1ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி தொழில் செய்து வரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் குற்றவாளிகள் போல கைது செய்கின்றனர். மேலும், கிருமிநாசினியை அவர்கள் மீது தெளித்து மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2021-ல் குஜராத்தைச் சேர்ந்த மீனவர்கள், பாகிஸ்தான் கடற்படையினரால் தாக்கப்பட்ட போது மத்திய அரசு, பாகிஸ்தான் கடற்படையினருக்கு கடும் எச்சரிக்கையை விடுத்தது. ஆனால், தமிழக மீனவர்களின் விஷயத்தில் அது போன்ற நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 26 மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தமிழக மீனவர்களும், இந்திய குடிமக்களே. அவர்களின் பாதுகாப்பு என்பது முக்கியமானது” என்றனர். இதனையடுத்து, மத்திய அரசு தரப்பில், “மீனவர்களை விடுவித்து தமிழகம் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த பிரச்னை மற்றொரு நாடோடு தொடர்புடையது. ஆகவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை தமிழகம் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது” என்று கூறி வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க: நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம் தொகுதி தேர்தல் வெற்றிகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.