ETV Bharat / state

ஜாபர் சாதிக் மனைவி முன் ஜாமீன் மனு; அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு! - jaffer Sadiq case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 9:42 PM IST

Jaffer Sadiq Case: ஜாபர் சாதிக் மனைவி மற்றும் சகோதரர் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (CREDITS - ETV BHARAT TAMIL NADU)

சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இந்நிலையில், வழக்கில் தங்களுக்கு முன் ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மனைவி அமீனா பானு மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அதில், வழக்கு தொடர்பாக ஏற்கனவே இருமுறை அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்துள்ளதாகவும், இன்று ஆஜராகும்படி நேற்றிரவு 8.41 மணிக்கு மின்னஞ்சல் மூலம் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் வழக்கிலோ அல்லது அமலாக்கத்துறை வழக்கிலோ தங்களது பெயர் இடம் பெறாத நிலையில், உள்நோக்கத்துடன் தங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால், முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த மனு நீதிபதி தமிழ்செல்வி முன்பு இன்று (ஜூலை 23) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ரமேஷ், இந்த வழக்கில் அரசியல் சாயம் பூச அமலாக்கத்துறை நினைப்பதாக கூறினார்.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், "இந்த வழக்கில் தாங்கள் அரசியல் சாயம் பூச நினைப்பதாக ஜாபர் சாதிக்கே இதுவரை கூறவில்லை எனவும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டிலேயே ஜாபர் சாதிக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் ஒரு தொடர் குற்றவாளி என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்த மனு குறித்து விரிவாக பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென" கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, முன் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (CREDITS - ETV BHARAT TAMIL NADU)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: திருக்குறள், புறநானூறு இடம்பெறாத பட்ஜெட்; 'தமிழ்நாடு' என்ற வார்த்தைக்கும் இடமில்லை! - budget 2024

சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இந்நிலையில், வழக்கில் தங்களுக்கு முன் ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மனைவி அமீனா பானு மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அதில், வழக்கு தொடர்பாக ஏற்கனவே இருமுறை அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்துள்ளதாகவும், இன்று ஆஜராகும்படி நேற்றிரவு 8.41 மணிக்கு மின்னஞ்சல் மூலம் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் வழக்கிலோ அல்லது அமலாக்கத்துறை வழக்கிலோ தங்களது பெயர் இடம் பெறாத நிலையில், உள்நோக்கத்துடன் தங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால், முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த மனு நீதிபதி தமிழ்செல்வி முன்பு இன்று (ஜூலை 23) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ரமேஷ், இந்த வழக்கில் அரசியல் சாயம் பூச அமலாக்கத்துறை நினைப்பதாக கூறினார்.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், "இந்த வழக்கில் தாங்கள் அரசியல் சாயம் பூச நினைப்பதாக ஜாபர் சாதிக்கே இதுவரை கூறவில்லை எனவும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டிலேயே ஜாபர் சாதிக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் ஒரு தொடர் குற்றவாளி என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்த மனு குறித்து விரிவாக பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென" கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, முன் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (CREDITS - ETV BHARAT TAMIL NADU)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: திருக்குறள், புறநானூறு இடம்பெறாத பட்ஜெட்; 'தமிழ்நாடு' என்ற வார்த்தைக்கும் இடமில்லை! - budget 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.