ETV Bharat / state

அயோத்தி ராமர் கோயில்; புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் உத்தரவாதத்தை நம்புவதாக உயர் நீதிமன்றம் தெரிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2024, 12:12 PM IST

Updated : Jan 21, 2024, 9:43 PM IST

Puducherry Jipmer: அயோத்தி ராமர் கோயில் திறப்பிற்காக நாளை மதியம் 2.30 மணி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், திட்டமிட்டபடி அனைத்து அறுவை சிகிச்சைகளும் செய்யப்படும் என புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா, ஜனவரி 22ஆம் தேதியான நாளை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, இந்தியா முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு, திறப்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜனவரி 19ஆம் தேதி புதுச்சேரியில் இயங்கி வரும் ஜிப்மர் மருத்துவமனை சார்பில், மருத்துவமனை மூத்த நிர்வாக அதிகாரி ஹவா சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராமர் கோயில் திறப்பு விழா காரணமாக புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 22ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி வரை மூடப்படும் எனவும், அவசரப் பிரிவுகள் வழக்கம் போல தொடர்ந்து செயல்படும் எனவும் அறிவித்துள்ளது.

மத்திய அரசு நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள், ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையின் இந்த அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், அவசரமாக பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அவசர மனுவானது, தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி பரதசக்ரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “நாளை (ஜன22) காலை 11 மணிக்கு அறுவை சிகிச்சை அளிக்க நேரம் ஒதுக்கியிருந்தால், மதியம் 2.30 மணிக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்வீர்களா?” என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்,சுந்தரேஷ், புறநோயாளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டாலும், அவசர சிகிச்சைப் பிரிவு எந்த தடையும் இல்லாமல் செயல்படும் என தெரிவித்தார். இதையடுத்து, நாளை அறுவை சிகிச்சை செய்ய நேரம் வழங்கப்பட்டுள்ளதா என மருத்துவமனை நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை 15 நிமிடங்களுக்குப் பின் வழக்கு மீண்டும் விசாரணை தொடங்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர், 15 நிமிடங்களுக்குப் பின் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில், “திங்கள்கிழமை எந்த அறுவை சிகிச்சைக்காகவும் நேரம் ஒதுக்கப்படவில்லை. அறுவை சிகிச்சைக்கு நேரம் வழங்கப்பட்டிருந்தால், குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சை வழங்கப்படும். ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளும் தொடர்ந்து இயங்கும். அதற்கு எந்த தடையும் இல்லை. விபத்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டால், சிகிச்சை வழங்குவதற்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதையடுத்து, “ராமர் கோயில் திறப்பிற்காக நாளை மதியம் 2.30 மணி வரை விடுமுறையாக அறிவித்தாலும், அவசர சிகிச்சைக்காக அனைத்து வசதிகளும் ஏற்படுத்தியிருப்பதாக மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. எனவே, சிகிச்சைகள் அளிப்பதில் எந்த தடங்களும் ஏற்படாது என நீதிமன்றம் நம்புகிறது” எனக் கூறி, வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: டீப் ஃபேக் வீடியோ விவகாரத்தில் இளைஞர் கைது! ராஷ்மிகாவின் அடுத்த நடவடிக்கை?

சென்னை: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா, ஜனவரி 22ஆம் தேதியான நாளை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, இந்தியா முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு, திறப்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜனவரி 19ஆம் தேதி புதுச்சேரியில் இயங்கி வரும் ஜிப்மர் மருத்துவமனை சார்பில், மருத்துவமனை மூத்த நிர்வாக அதிகாரி ஹவா சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராமர் கோயில் திறப்பு விழா காரணமாக புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 22ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி வரை மூடப்படும் எனவும், அவசரப் பிரிவுகள் வழக்கம் போல தொடர்ந்து செயல்படும் எனவும் அறிவித்துள்ளது.

மத்திய அரசு நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள், ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையின் இந்த அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், அவசரமாக பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அவசர மனுவானது, தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி பரதசக்ரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “நாளை (ஜன22) காலை 11 மணிக்கு அறுவை சிகிச்சை அளிக்க நேரம் ஒதுக்கியிருந்தால், மதியம் 2.30 மணிக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்வீர்களா?” என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்,சுந்தரேஷ், புறநோயாளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டாலும், அவசர சிகிச்சைப் பிரிவு எந்த தடையும் இல்லாமல் செயல்படும் என தெரிவித்தார். இதையடுத்து, நாளை அறுவை சிகிச்சை செய்ய நேரம் வழங்கப்பட்டுள்ளதா என மருத்துவமனை நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை 15 நிமிடங்களுக்குப் பின் வழக்கு மீண்டும் விசாரணை தொடங்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர், 15 நிமிடங்களுக்குப் பின் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில், “திங்கள்கிழமை எந்த அறுவை சிகிச்சைக்காகவும் நேரம் ஒதுக்கப்படவில்லை. அறுவை சிகிச்சைக்கு நேரம் வழங்கப்பட்டிருந்தால், குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சை வழங்கப்படும். ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளும் தொடர்ந்து இயங்கும். அதற்கு எந்த தடையும் இல்லை. விபத்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டால், சிகிச்சை வழங்குவதற்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதையடுத்து, “ராமர் கோயில் திறப்பிற்காக நாளை மதியம் 2.30 மணி வரை விடுமுறையாக அறிவித்தாலும், அவசர சிகிச்சைக்காக அனைத்து வசதிகளும் ஏற்படுத்தியிருப்பதாக மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. எனவே, சிகிச்சைகள் அளிப்பதில் எந்த தடங்களும் ஏற்படாது என நீதிமன்றம் நம்புகிறது” எனக் கூறி, வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: டீப் ஃபேக் வீடியோ விவகாரத்தில் இளைஞர் கைது! ராஷ்மிகாவின் அடுத்த நடவடிக்கை?

Last Updated : Jan 21, 2024, 9:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.