ETV Bharat / state

பெண் கடத்தல் வழக்கு: “இதுபோன்ற கதையை சினிமாவில் கூட பார்த்ததில்லை”- நீதிபதிகள் அதிருப்தி

சென்னையை சேர்ந்த பெண் கடத்திக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட புகார் தவறானது என விசாரணையில் தெரியவந்ததை அடுத்து வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப் படம்
சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

சென்னை: சென்னை வடபழனியைச் சேர்ந்த காமாட்சி என்ற பெண், சில ரவுடிகளால் கடத்தப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் வைத்து கொலை செய்யப்பட்டதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர், கடந்த திங்கட்கிழமை (அக் 21) தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (அக் 23) விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, வழக்கறிஞரின் புகார் தொடர்பாக காவல்துறையால் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் இதுபோன்ற கொலை சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என்பது தெரிய வந்ததாகவும், வழக்கை முறையீடு செய்த வழக்கறிஞருக்கும், இந்த தகவலை கூறிய பெண்ணுக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை இருந்ததாகவும், அதனாலேயே வழக்கறிஞரிடம் இந்த தகவலை கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விவாகரத்து வழக்கு; தம்பதியை நேரில் ஆஜராக நிர்பந்திக்கக் கூடாது.. ஐகோர்ட் உத்தரவு!

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுபோன்ற கதைகளை சினிமாவில் கூட பார்த்ததில்லை என வேடிக்கையாக தெரிவித்த நிலையில் அந்த பெண் குறித்த தகவல்களை ஏன் முன்னரே நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை என வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து தாமாக முன்வந்து எடுத்த வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள்,இதுபோன்ற விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டுமென வழக்கறிஞருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சென்னை: சென்னை வடபழனியைச் சேர்ந்த காமாட்சி என்ற பெண், சில ரவுடிகளால் கடத்தப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் வைத்து கொலை செய்யப்பட்டதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர், கடந்த திங்கட்கிழமை (அக் 21) தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (அக் 23) விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, வழக்கறிஞரின் புகார் தொடர்பாக காவல்துறையால் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் இதுபோன்ற கொலை சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என்பது தெரிய வந்ததாகவும், வழக்கை முறையீடு செய்த வழக்கறிஞருக்கும், இந்த தகவலை கூறிய பெண்ணுக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை இருந்ததாகவும், அதனாலேயே வழக்கறிஞரிடம் இந்த தகவலை கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விவாகரத்து வழக்கு; தம்பதியை நேரில் ஆஜராக நிர்பந்திக்கக் கூடாது.. ஐகோர்ட் உத்தரவு!

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுபோன்ற கதைகளை சினிமாவில் கூட பார்த்ததில்லை என வேடிக்கையாக தெரிவித்த நிலையில் அந்த பெண் குறித்த தகவல்களை ஏன் முன்னரே நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை என வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து தாமாக முன்வந்து எடுத்த வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள்,இதுபோன்ற விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டுமென வழக்கறிஞருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.