ETV Bharat / state

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான மான நஷ்ட வழக்கு: தோனிக்கு உத்தரவு போட்ட சென்னை ஐகோர்ட் - Dhoni contempt case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 5:18 PM IST

Dhoni defamation suit case: ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த மான நஷ்ட வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மகேந்திர சிங் தோனி (கோப்புப் படம்)
மகேந்திர சிங் தோனி (கோப்புப் படம்) (credit - Getty image)

சென்னை: ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் தொலைக்காட்சி விவாதத்தில் தனக்கு எதிராக அவதூறான கருத்துக்களை பரப்பியதாக, ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியா கார்ப்பரேஷன் உள்ளிட்டோருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, 2014 ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

அதில், 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக இனிமேல் பத்திரிகைகளில் பேட்டி அளிக்க கூடாது என ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம் அவ்வபோது உத்தரவை நீட்டித்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் தொலைக்காட்சி சார்பில், தங்களுக்கு எதிராகவும், இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதால், வழக்கில் தங்களை இணைத்து தோனி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தோனி தரப்பு வழக்கறிஞர், இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு வழக்கில் இணைத்து பதிலளிக்க கூறுவதை ஏற்க கூடாது. அது வழக்கு விசாரணையை பாதிக்கும். நேரடியாக ஜீ தொலைக்காட்சி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு அவர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என தெரிவிக்கப்பட்டது.

தோனி தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தோனி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதி தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: இரு குடும்பத்தினரிடையே குடுமிபிடி சண்டை.. ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் அடித்துக் கொள்ளும் வீடியோ வைரல்!

சென்னை: ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் தொலைக்காட்சி விவாதத்தில் தனக்கு எதிராக அவதூறான கருத்துக்களை பரப்பியதாக, ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியா கார்ப்பரேஷன் உள்ளிட்டோருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, 2014 ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

அதில், 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக இனிமேல் பத்திரிகைகளில் பேட்டி அளிக்க கூடாது என ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம் அவ்வபோது உத்தரவை நீட்டித்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் தொலைக்காட்சி சார்பில், தங்களுக்கு எதிராகவும், இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதால், வழக்கில் தங்களை இணைத்து தோனி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தோனி தரப்பு வழக்கறிஞர், இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு வழக்கில் இணைத்து பதிலளிக்க கூறுவதை ஏற்க கூடாது. அது வழக்கு விசாரணையை பாதிக்கும். நேரடியாக ஜீ தொலைக்காட்சி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு அவர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என தெரிவிக்கப்பட்டது.

தோனி தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தோனி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதி தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: இரு குடும்பத்தினரிடையே குடுமிபிடி சண்டை.. ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் அடித்துக் கொள்ளும் வீடியோ வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.