ETV Bharat / state

கடலூரில் பலத்த காற்றுடன் மழை.. அடியோடு சாய்ந்த வாழை மரங்களால் விவசாயிகள் வேதனை! - Cuddalore Rain

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 3:49 PM IST

Impact Of Cyclone In Cuddalore: கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்ததில் ஏராளமான வாழை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடியோடு சாய்ந்த வாழை மரங்கள்
அடியோடு சாய்ந்த வாழை மரங்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 5) முதல் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்று வீசியபடி மழை பெய்து வந்தது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 6) காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வந்த சூழலில், நேற்று (ஜூன் 6) இரவு பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

இந்தச் சூழலில், கடலூர் அடுத்த வழி சோதனை பாளையம், ராமாபுரம், புதுக்குப்பம், சின்னதானாங்குப்பம் புலியூர், சமுட்டிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டு, தற்போது வாழைத்தார்கள் அறுவடைக்குத் தயாராகி வந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்த காரணத்தினால், வழி சோதனை பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தில் சுமார் 1,500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அடியோடு முறிந்து சாய்ந்தது.

இதன் காரணமாக வாழை விவசாயிகள் கடும் வேதனைக்கு ஆளாகியுள்ளனர். மேலும், இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், "கடலூர் வழி சோதனை பாளையம், ராமாபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கரில் வாழை மரங்கள் கடந்த ஜூலை மாதம் பயிரிடப்பட்டு இருந்தன. இதனைத் தொடர்ந்து, கடந்த 10 மாதத்திற்கும் மேலாக தங்களது பிள்ளைகள் போல் வாழை மரங்களை பாதுகாத்து வளர்த்து வரப்பட்டன.

இந்த நிலையில், ஒரு ஏக்கருக்கு சுமார் 1.50 முதல் 2 லட்சம் வரை செலவு செய்து பராமரித்து வந்த வாழை மரங்கள் முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய மழையால் முறிந்த சாய்ந்தன. மேலும், தற்போது வாழைத்தார்கள் முழுவதும் அறுவடைக்குத் தயாராக இருந்து வந்த நிலையில் சாய்ந்துள்ளது.

இதன் காரணமாக ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூபாய் 1 லட்சம் முதல் 1.50 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டு எங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாக்கி உள்ளது. ஆகையால், தமிழக அரசு உரிய முறையில் தணிக்கை செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

இதுமட்டுமல்லாது, இந்த திடீர் காற்றால் சாய்ந்த வாழை மரங்களால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்கள்தோறும் உள்ள அனைத்து விவசாயிகளும் மிகுந்த சோகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழகத்தில் கனமழை தொடருமா? - வெதர் ரிப்போர்ட் சொல்வது என்ன?

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 5) முதல் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்று வீசியபடி மழை பெய்து வந்தது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 6) காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வந்த சூழலில், நேற்று (ஜூன் 6) இரவு பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

இந்தச் சூழலில், கடலூர் அடுத்த வழி சோதனை பாளையம், ராமாபுரம், புதுக்குப்பம், சின்னதானாங்குப்பம் புலியூர், சமுட்டிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டு, தற்போது வாழைத்தார்கள் அறுவடைக்குத் தயாராகி வந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்த காரணத்தினால், வழி சோதனை பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தில் சுமார் 1,500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அடியோடு முறிந்து சாய்ந்தது.

இதன் காரணமாக வாழை விவசாயிகள் கடும் வேதனைக்கு ஆளாகியுள்ளனர். மேலும், இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், "கடலூர் வழி சோதனை பாளையம், ராமாபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கரில் வாழை மரங்கள் கடந்த ஜூலை மாதம் பயிரிடப்பட்டு இருந்தன. இதனைத் தொடர்ந்து, கடந்த 10 மாதத்திற்கும் மேலாக தங்களது பிள்ளைகள் போல் வாழை மரங்களை பாதுகாத்து வளர்த்து வரப்பட்டன.

இந்த நிலையில், ஒரு ஏக்கருக்கு சுமார் 1.50 முதல் 2 லட்சம் வரை செலவு செய்து பராமரித்து வந்த வாழை மரங்கள் முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய மழையால் முறிந்த சாய்ந்தன. மேலும், தற்போது வாழைத்தார்கள் முழுவதும் அறுவடைக்குத் தயாராக இருந்து வந்த நிலையில் சாய்ந்துள்ளது.

இதன் காரணமாக ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூபாய் 1 லட்சம் முதல் 1.50 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டு எங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாக்கி உள்ளது. ஆகையால், தமிழக அரசு உரிய முறையில் தணிக்கை செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

இதுமட்டுமல்லாது, இந்த திடீர் காற்றால் சாய்ந்த வாழை மரங்களால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்கள்தோறும் உள்ள அனைத்து விவசாயிகளும் மிகுந்த சோகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழகத்தில் கனமழை தொடருமா? - வெதர் ரிப்போர்ட் சொல்வது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.