ETV Bharat / state

குவைத் தீ விபத்து: தமிழர்கள் குறித்த தகவல்கள் அறிய உதவி எண்கள் அறிவிப்பு - kuwait fire accident latest update

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 12, 2024, 8:08 PM IST

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று ஏற்பட்ட பபங்கர தீ விபத்தில் தமிழர்கள் யாரேனும் சிக்கியிருந்தால் அவர்கள் குறித்த தகவல்கள் அறிய, உதவி எண்களை அயலகத் தமிழர் நலத்துறை அறிவித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின்,  குவைத்தில் தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பு
முதல்வர் ஸ்டாலின், குவைத்தில் தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பு (Image Credits - ETV Bharat Tamilnadu)

சென்னை:குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில், இன்று (12.06.2024) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, சுமார் 49 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வரப்பெற்றுள்ளது. அவர்களில் எவரேனும் தமிழர்கள் உள்ளனரா என்ற தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்கள் குவைத் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து தகவல் அறிந்ததும், விபத்தில் தமிழர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்தம் விவரங்களைப் பெற்று, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அவரது அறிவுறுத்தலின்படி அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்விபத்து தொடர்பான விவரங்களை அறிய, அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்தியாவில் உள்ளவர்கள்: +91 1800 309 3793

வெளிநாடுகளில் வசிப்பவர்கள்: +91 80 6900 9900, +91 80 6900 9901 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க: குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 41 பேர் பலி! தமிழர்கள் உயிரிழப்பு என அதிர்ச்சித் தகவல்!

சென்னை:குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில், இன்று (12.06.2024) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, சுமார் 49 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வரப்பெற்றுள்ளது. அவர்களில் எவரேனும் தமிழர்கள் உள்ளனரா என்ற தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்கள் குவைத் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து தகவல் அறிந்ததும், விபத்தில் தமிழர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்தம் விவரங்களைப் பெற்று, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அவரது அறிவுறுத்தலின்படி அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்விபத்து தொடர்பான விவரங்களை அறிய, அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்தியாவில் உள்ளவர்கள்: +91 1800 309 3793

வெளிநாடுகளில் வசிப்பவர்கள்: +91 80 6900 9900, +91 80 6900 9901 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க: குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 41 பேர் பலி! தமிழர்கள் உயிரிழப்பு என அதிர்ச்சித் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.