ETV Bharat / state

கும்பகோணம் மாநகராட்சி கூட்டம்; மேயருக்கு எதிராக பனிப்போர் தொடங்கிய திமுக கவுன்சிலர்கள்! - kumbakonam Mayor Review Meeting

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 9, 2024, 3:36 PM IST

Mayor Review Meeting: கும்பகோணம் மாநகராட்சியில் மேயர் கே.சரவணன் தலைமையிலான மாமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தை, மொத்தமுள்ள 48 மாமன்ற உறுப்பினர்களில், துணை மேயர் சு.ப. தமிழழகன் உள்ளிட்ட திமுக மற்றும் அதன் தோழமை கட்சி மாமன்ற உறுப்பினர்கள் 43 பேர் ஒட்டு மொத்தமாக புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கும்பகோணம் மாநகராட்சி கூட்டம்
கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகராட்சியில் திமுக பெரும்பான்மை பலம் பெற்றிருந்த போதும், திமுக தலைமை கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேண்டுகோளின் படி, 2 மாமன்ற உறுப்பினர்கள் இருந்த போதும் காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மேயர் பதவியை அளித்ததால், 17வது வட்ட மாமன்ற உறுப்பினர் க சரவணன் (காங்) மேயராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் சமீபகாலமாக இவர்கள் இருவர் இடையிலான மோதல் வலுத்து வருவதாக கூறப்படுகிறது.

கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)

கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி புதன் கிழமை நடைபெற்ற கும்பகோணம் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ரூபாய் 2 கோடியே 2 லட்சத்து 68 ஆயிரத்து 435 மதிப்பிலான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 11 தீர்மானங்களை கூட்டத்தில் மேயர் விவாத பொருளாக வைக்காத நிலையில், இதனை வைக்காததன் காரணத்தை கேட்டும், அதனை நிறைவேற்றிட துணை மேயர் மற்றும் திமுக உறுப்பினர்கள் பலர் எழுந்து ஆவேசமாக பேசிய நிர்பந்தித்துள்ளனர்.

அப்போது இந்த பொருள்கள் குறித்து ஆய்வு செய்த பின்பு தான் கூட்டத்தில் வைக்க முடியும் என்று கூறிவிட்டு, கூட்டம் நிறைவு பெற்றதாக அறிவித்து மேயர் சரவணன் எழுந்து சென்றார். இந்த நிலையில் இன்று காங்கிரஸ் மேயர் கே.சரவணன் தலைமையிலான மாமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டத்திற்கு ஆணையர் லட்சுமணன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த பத்ம குமரேசன், ஆதிலட்சுமி ராமமூர்த்தி மற்றும் கௌசல்யா ஆகிய 3 மாமன்ற உறுப்பினர்களும், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியை சார்ந்த ஒரே உறுப்பினரான செல்வம் ஆகிய 4 மாமன்ற உறுப்பினர்கள் மட்டும் இதில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதில் துணை மேயர் (திமுக) சு.ப. தமிழழகன் உள்ளிட்ட காங்கிரஸ், திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காமல் இக்கூட்டத்தினை ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர். மேயர் சார்ந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினர் ஐயப்பன் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த நிலையில், அவரும் கூட்டத்தில் பங்கேற்காமல் சென்றுவிட்டார்.

திமுக 39, அதிமுக 3, காங்கிரஸ் 2, மதிமுக 1, விடுதலை சிறுத்தை 1, கம்யூனிஸ்ட் 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 என கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தம் 48 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில், இன்று நடைபெற்ற மேயர் தலைமையிலான கூட்டத்தில் மேயர் உட்பட ஐந்து மாமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

மேயர், துணை மேயர் பனிப்போர் தொடர்வதால், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தலைமை விரைவில் இவர்களது பிரச்சினைகள் குறித்து பேசி தீர்வு காண வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் கோவை மற்றும் நெல்லையில் மேயர் மறைமுக தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆட்சியரிடம் சென்ற வரதட்சணை புகார்! மணமகன் குடும்பத்திடம் மகளிர் போலீஸ் விசாரணை! - Dowry harassment Petition

தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகராட்சியில் திமுக பெரும்பான்மை பலம் பெற்றிருந்த போதும், திமுக தலைமை கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேண்டுகோளின் படி, 2 மாமன்ற உறுப்பினர்கள் இருந்த போதும் காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மேயர் பதவியை அளித்ததால், 17வது வட்ட மாமன்ற உறுப்பினர் க சரவணன் (காங்) மேயராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் சமீபகாலமாக இவர்கள் இருவர் இடையிலான மோதல் வலுத்து வருவதாக கூறப்படுகிறது.

கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)

கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி புதன் கிழமை நடைபெற்ற கும்பகோணம் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ரூபாய் 2 கோடியே 2 லட்சத்து 68 ஆயிரத்து 435 மதிப்பிலான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 11 தீர்மானங்களை கூட்டத்தில் மேயர் விவாத பொருளாக வைக்காத நிலையில், இதனை வைக்காததன் காரணத்தை கேட்டும், அதனை நிறைவேற்றிட துணை மேயர் மற்றும் திமுக உறுப்பினர்கள் பலர் எழுந்து ஆவேசமாக பேசிய நிர்பந்தித்துள்ளனர்.

அப்போது இந்த பொருள்கள் குறித்து ஆய்வு செய்த பின்பு தான் கூட்டத்தில் வைக்க முடியும் என்று கூறிவிட்டு, கூட்டம் நிறைவு பெற்றதாக அறிவித்து மேயர் சரவணன் எழுந்து சென்றார். இந்த நிலையில் இன்று காங்கிரஸ் மேயர் கே.சரவணன் தலைமையிலான மாமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டத்திற்கு ஆணையர் லட்சுமணன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த பத்ம குமரேசன், ஆதிலட்சுமி ராமமூர்த்தி மற்றும் கௌசல்யா ஆகிய 3 மாமன்ற உறுப்பினர்களும், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியை சார்ந்த ஒரே உறுப்பினரான செல்வம் ஆகிய 4 மாமன்ற உறுப்பினர்கள் மட்டும் இதில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதில் துணை மேயர் (திமுக) சு.ப. தமிழழகன் உள்ளிட்ட காங்கிரஸ், திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காமல் இக்கூட்டத்தினை ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர். மேயர் சார்ந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினர் ஐயப்பன் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த நிலையில், அவரும் கூட்டத்தில் பங்கேற்காமல் சென்றுவிட்டார்.

திமுக 39, அதிமுக 3, காங்கிரஸ் 2, மதிமுக 1, விடுதலை சிறுத்தை 1, கம்யூனிஸ்ட் 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 என கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தம் 48 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில், இன்று நடைபெற்ற மேயர் தலைமையிலான கூட்டத்தில் மேயர் உட்பட ஐந்து மாமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

மேயர், துணை மேயர் பனிப்போர் தொடர்வதால், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தலைமை விரைவில் இவர்களது பிரச்சினைகள் குறித்து பேசி தீர்வு காண வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் கோவை மற்றும் நெல்லையில் மேயர் மறைமுக தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆட்சியரிடம் சென்ற வரதட்சணை புகார்! மணமகன் குடும்பத்திடம் மகளிர் போலீஸ் விசாரணை! - Dowry harassment Petition

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.