ETV Bharat / state

29வது நாளாக சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம்.. எலக்ட்ரானிக் விற்பனை பாதிக்கப்படுமா?

29வது நாளாக சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் பணிக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம், அமைச்சர் டி.ஆர்.பி ராஜா
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம், அமைச்சர் டி.ஆர்.பி ராஜா (Credits - ETV Bharat Tamil Nadu, TRB RAJAA X PAGE)

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் 'சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்' தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்னணு சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. 1,500க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் சுமார் 900 பேர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர் போராட்டம் : 'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்' (சிஐடியு) எனும் பெயரில் கடந்த ஜூன் மாதம் தொழிற்சங்கத்தைத் தொடங்கி, தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு, 8 மணி நேரம் வேலை உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை தொழிற்சாலை நிர்வாகத்திடம் முன்வைத்துள்ளனர். ஆனால், நிர்வாகம் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அடிபொடியாக ஒரு சங்கத்தை உருவாக்கி அதில் சிஐடியு சங்க உறுப்பினர்களை இணைய வலியுறுத்திவதாகக் கூறி கடந்த 9ம் தேதி முதல் 29 நாட்களாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

உற்பத்தி பாதிப்பு : தொழிலாளர் சங்க அனுமதி, ஊதிய உயர்வு, உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாம்சங் நிறுவனத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையே 6 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சாம்சங் தொழிற்சாலையில் உற்பத்தி பெருமளவு பாதிப்படைந்துள்ளது. பண்டிகை காலம் என்பதால் புதிய மின்சாதன விற்பனையும் பாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

7 கட்ட பேச்சுவார்த்தை : 29 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களிடம் போராட்டத்தை கைவிட வேண்டும் என 6 முறை பல்வேறு கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் தோல்வியில் முடிந்தது. அ

தனைத்தொடர்ந்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பெயரில், சிறு, குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அமைச்சர்கள் குழு நேற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அலுவலகத்தில், தொழிற்சங்கத்தினர், நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களிடம் 7ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

இதையும் படிங்க: "சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடரும்.. முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு இல்லை.." - சிஐடியு அறிவிப்பு!

இழுபறிக்கான காரணம் : அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு, தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தொழிலாளர்களின் தொழிற்சங்கம் அமைப்பது தொடர்பான கோரிக்கை தவிர்த்து மற்ற அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற தயாராக உள்ளது. இருப்பினும் தொழிலாளர்கள் சார்பில் சிஐடியு தொழிற்சங்கம் அமைக்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிஐடியு மறுப்பு : இது தொடர்பாக சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துக்குமார் கூறுகையில், "சாம்சங் போராட்டம் தொடர்கிறது. அமைச்சர் முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

தொலைக்காட்சியில் வரக்கூடிய உடன்பாடு ஏற்பட்டது என்கிற செய்தி உண்மைக்கு மாறானது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். சாம்சங் நிறுவனத்தின் அறிவிப்பு பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு எதிரானது என்பது மட்டுமல்ல. திசை திருப்பும் இந்த நடவடிக்கைகளை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கிறது" என தெரிவித்துள்ளார்.

தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா சொல்வதென்ன? : சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் 7 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், எந்த ஒரு உடன்பாடும் ஏற்படவில்லை.

முதலில் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை, சிஐடியு, அதன் பிறகு தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், சிஐடியு தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பதே தொழிலாளர்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.

சங்கத்தின் பதிவினை நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின்படி நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என நிறுவனம் அறிவித்துள்ளனர். இந்தக் கோரிக்கைக்காக தொழிலாளர்கள் தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசாங்கம் நடக்கிறது. அதன் காரணமாக தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் 'சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்' தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்னணு சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. 1,500க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் சுமார் 900 பேர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர் போராட்டம் : 'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்' (சிஐடியு) எனும் பெயரில் கடந்த ஜூன் மாதம் தொழிற்சங்கத்தைத் தொடங்கி, தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு, 8 மணி நேரம் வேலை உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை தொழிற்சாலை நிர்வாகத்திடம் முன்வைத்துள்ளனர். ஆனால், நிர்வாகம் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அடிபொடியாக ஒரு சங்கத்தை உருவாக்கி அதில் சிஐடியு சங்க உறுப்பினர்களை இணைய வலியுறுத்திவதாகக் கூறி கடந்த 9ம் தேதி முதல் 29 நாட்களாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

உற்பத்தி பாதிப்பு : தொழிலாளர் சங்க அனுமதி, ஊதிய உயர்வு, உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாம்சங் நிறுவனத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையே 6 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சாம்சங் தொழிற்சாலையில் உற்பத்தி பெருமளவு பாதிப்படைந்துள்ளது. பண்டிகை காலம் என்பதால் புதிய மின்சாதன விற்பனையும் பாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

7 கட்ட பேச்சுவார்த்தை : 29 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களிடம் போராட்டத்தை கைவிட வேண்டும் என 6 முறை பல்வேறு கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் தோல்வியில் முடிந்தது. அ

தனைத்தொடர்ந்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பெயரில், சிறு, குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அமைச்சர்கள் குழு நேற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அலுவலகத்தில், தொழிற்சங்கத்தினர், நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களிடம் 7ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

இதையும் படிங்க: "சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடரும்.. முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு இல்லை.." - சிஐடியு அறிவிப்பு!

இழுபறிக்கான காரணம் : அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு, தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தொழிலாளர்களின் தொழிற்சங்கம் அமைப்பது தொடர்பான கோரிக்கை தவிர்த்து மற்ற அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற தயாராக உள்ளது. இருப்பினும் தொழிலாளர்கள் சார்பில் சிஐடியு தொழிற்சங்கம் அமைக்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிஐடியு மறுப்பு : இது தொடர்பாக சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துக்குமார் கூறுகையில், "சாம்சங் போராட்டம் தொடர்கிறது. அமைச்சர் முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

தொலைக்காட்சியில் வரக்கூடிய உடன்பாடு ஏற்பட்டது என்கிற செய்தி உண்மைக்கு மாறானது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். சாம்சங் நிறுவனத்தின் அறிவிப்பு பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு எதிரானது என்பது மட்டுமல்ல. திசை திருப்பும் இந்த நடவடிக்கைகளை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கிறது" என தெரிவித்துள்ளார்.

தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா சொல்வதென்ன? : சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் 7 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், எந்த ஒரு உடன்பாடும் ஏற்படவில்லை.

முதலில் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை, சிஐடியு, அதன் பிறகு தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், சிஐடியு தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பதே தொழிலாளர்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.

சங்கத்தின் பதிவினை நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின்படி நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என நிறுவனம் அறிவித்துள்ளனர். இந்தக் கோரிக்கைக்காக தொழிலாளர்கள் தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசாங்கம் நடக்கிறது. அதன் காரணமாக தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.