ETV Bharat / state

காவிரி - குண்டாறு இணைப்பு திட்ட பணிகள் எந்த நிலையில் உள்ளது?.. நீர்வளத்துறை அறிக்கை சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவு - Cauvery Gundar link project issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 7:47 AM IST

Cauvery - Vaigai - Gundar link project: காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் முதல் கட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, 3 மாதங்களுக்கு ஒரு முறை நீர்வளத்துறையின் தலைமை பொறியாளர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

High court madurai bench
High court madurai bench (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தாது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்த உள்ளதாக அரசு அறிவித்தது. இதன் மூலம் விவசாயிகள் மட்டுமல்லாது, பொதுமக்களும் பயனடைவர். ஆனால், இந்த திட்டத்தை இதுவரை செயல்படுத்த அரசு தரப்பில் எந்த முனைப்பும் காட்டவில்லை. எனவே காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீர்வளத்துறையின் தலைமை பொறியாளர் சென்னையிலிருந்து வீடியோ கான்பரன்சில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 3 கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டு முதல் கட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் 9 கிலோ மீட்டர் கட்டுமான பணிகள் தொடங்கி விட்டது. 3 கட்டங்களுக்கும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அதில் அதிக இழப்பீடு கேட்டு மனுத் தாக்கல் செய்து உள்ளனர்.

தற்போது இதுதொடர்பான வழக்குகள் தனிநீதிபதியிடம் நிலுவையில் உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் தொடங்கி பல ஆண்டுகள் கடந்து விட்டது. ஆகையால், இத்திட்டத்தை வேகப்படுத்த வேண்டும். இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒரே அமர்வில் விசாரிக்க வேண்டும்.

மேலும், இந்த திட்டப் பணிகள் எந்த அளவுக்கு நடந்து உள்ளது? எவ்வளவு முன்னேற்றம் கண்டுள்ளது என்பது குறித்து பொதுப்பணித்துறையின் நீர்வளத்துறைத் தலைமை பொறியாளர் 3 மாதங்களுக்கு ஒரு முறை பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிட்ட உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள், இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "முதல்வர் சொல்வது வேடிக்கையாக உள்ளது" - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

மதுரை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தாது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்த உள்ளதாக அரசு அறிவித்தது. இதன் மூலம் விவசாயிகள் மட்டுமல்லாது, பொதுமக்களும் பயனடைவர். ஆனால், இந்த திட்டத்தை இதுவரை செயல்படுத்த அரசு தரப்பில் எந்த முனைப்பும் காட்டவில்லை. எனவே காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீர்வளத்துறையின் தலைமை பொறியாளர் சென்னையிலிருந்து வீடியோ கான்பரன்சில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 3 கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டு முதல் கட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் 9 கிலோ மீட்டர் கட்டுமான பணிகள் தொடங்கி விட்டது. 3 கட்டங்களுக்கும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அதில் அதிக இழப்பீடு கேட்டு மனுத் தாக்கல் செய்து உள்ளனர்.

தற்போது இதுதொடர்பான வழக்குகள் தனிநீதிபதியிடம் நிலுவையில் உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் தொடங்கி பல ஆண்டுகள் கடந்து விட்டது. ஆகையால், இத்திட்டத்தை வேகப்படுத்த வேண்டும். இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒரே அமர்வில் விசாரிக்க வேண்டும்.

மேலும், இந்த திட்டப் பணிகள் எந்த அளவுக்கு நடந்து உள்ளது? எவ்வளவு முன்னேற்றம் கண்டுள்ளது என்பது குறித்து பொதுப்பணித்துறையின் நீர்வளத்துறைத் தலைமை பொறியாளர் 3 மாதங்களுக்கு ஒரு முறை பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிட்ட உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள், இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "முதல்வர் சொல்வது வேடிக்கையாக உள்ளது" - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.