ETV Bharat / state

நியூட்ரினோ ஆய்வுக்கு எதிரான வழக்கு: எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என ஒத்திவைப்பு - காரணம் என்ன? - Neutrino Project case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2024, 11:17 AM IST

Neutrino Research Center Issue: தேனி பொட்டிபுரம் பகுதியில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை ரத்து செய்யக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் இதே கோரிக்கையுள்ள வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக் கூறி வழக்கு விசாரணையை மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, வைகோ
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, வைகோ (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நியூட்ரினோ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி 2015ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நியூட்ரினோ திட்டத்துக்காக தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் ஆயிரம் மீட்டர் ஆழத்துக்குச் சுரங்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தால் தேனி பகுதியில் நில வளம் அழியும். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பசுமைத் தொடர்களுக்கு பேரழிவு ஏற்படும். விவசாயம், தண்ணீர், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும். மனித உயிர்களுக்கு ஆபத்து நேரிடும். மேலும், ஆய்வு மையம் அமைய உள்ள பகுதியில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் முல்லை பெரியாறு அணையும், 60 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் இடுக்கி அணையும் அமைந்து உள்ளன.

மக்களை பாதிக்கச் செய்யும் இத்திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு எப்போதும் தமிழகத்தை தேர்வு செய்கிறது. எனவே, நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று இவ்வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் இதே கோரிக்கையுடன் உள்ள வழக்கு நிலுவையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தில் இதே கோரிக்கையுடன் உள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக் கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன்.. நெட்டிசன்களுக்கு செக் வைத்த நீதிமன்றம்!

மதுரை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நியூட்ரினோ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி 2015ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நியூட்ரினோ திட்டத்துக்காக தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் ஆயிரம் மீட்டர் ஆழத்துக்குச் சுரங்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தால் தேனி பகுதியில் நில வளம் அழியும். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பசுமைத் தொடர்களுக்கு பேரழிவு ஏற்படும். விவசாயம், தண்ணீர், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும். மனித உயிர்களுக்கு ஆபத்து நேரிடும். மேலும், ஆய்வு மையம் அமைய உள்ள பகுதியில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் முல்லை பெரியாறு அணையும், 60 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் இடுக்கி அணையும் அமைந்து உள்ளன.

மக்களை பாதிக்கச் செய்யும் இத்திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு எப்போதும் தமிழகத்தை தேர்வு செய்கிறது. எனவே, நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று இவ்வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் இதே கோரிக்கையுடன் உள்ள வழக்கு நிலுவையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தில் இதே கோரிக்கையுடன் உள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக் கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன்.. நெட்டிசன்களுக்கு செக் வைத்த நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.