ETV Bharat / state

“தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உள்ளது”.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்! - MA SUBRAMANIAN

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2024, 10:56 PM IST

Ma Subramanian in Medical Counseling: தமிழ்நாட்டின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 2024-2025 கல்வி ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது. இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்புப் பிரிவின் கீழ் 715 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “மருத்துவப் படிப்பு கலந்தாய்வு வழக்கமாக ஜுன் மாதம் முடிய வேண்டியது. நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகளால் மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து தேர்வாணையத் தலைவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இப்படி பல குளறுபடிகளுக்குப் பிறகு ஒரு மாதம் காலதாமதமாக இந்த கலந்தாய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த கலந்தாய்வில் அரசு உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் 496 எம்பிபிஎஸ் மாணவர்களுக்கும், 126 பல் மருத்துவப் படிப்பிற்கும் ஆணைகள் வழங்கப்படவுள்ளது. இந்தாண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவப் படிப்பிற்கு செல்கின்றனர்.

அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவக் கட்டமைப்பு குறித்த ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டு நாட்களில் அதற்கான விவர அறிக்கைகள் வெளியிடப்படும். மேலும், மருத்துவமனையின் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் இருக்கின்றது. தமிழ்நாட்டில் எந்த கவலையும் பட வேண்டாம். மருத்துவ மாணவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உள்ளது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 1,500 புறநோயாளிகள் தினந்தோறும் வருகிறார்கள். இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் மக்கள் அரசு மருத்துவமனைகளை பெரிதும் நாடி வருகின்றனர். காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கு வழிவகை செய்யப்படுகிறது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ஓய்வு பெறும் மருத்துவரின் எண்ணிக்கையும், கணக்கில் எடுத்து பணியாளர் தேர்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் ஆலந்தூர் மவுண்ட் தனியார் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் குழந்தையின் காலை மாற்று அறுவைசிகிச்சை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது குறித்து டிஎம்எஸ் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு செய்துள்ளதாக அந்த மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்ததையடுத்து, அதில் தொடர்புடைய மூன்று பேரை கைது செய்துள்ளோம். அதனைத் தொடர்ந்து, புளியந்தோப்பு மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: இதையும் படிங்க: மருத்துவப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது; ஆக.21 முதல் கலந்தாய்வு தொடக்கம்!

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 2024-2025 கல்வி ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது. இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்புப் பிரிவின் கீழ் 715 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “மருத்துவப் படிப்பு கலந்தாய்வு வழக்கமாக ஜுன் மாதம் முடிய வேண்டியது. நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகளால் மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து தேர்வாணையத் தலைவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இப்படி பல குளறுபடிகளுக்குப் பிறகு ஒரு மாதம் காலதாமதமாக இந்த கலந்தாய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த கலந்தாய்வில் அரசு உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் 496 எம்பிபிஎஸ் மாணவர்களுக்கும், 126 பல் மருத்துவப் படிப்பிற்கும் ஆணைகள் வழங்கப்படவுள்ளது. இந்தாண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவப் படிப்பிற்கு செல்கின்றனர்.

அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவக் கட்டமைப்பு குறித்த ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டு நாட்களில் அதற்கான விவர அறிக்கைகள் வெளியிடப்படும். மேலும், மருத்துவமனையின் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் இருக்கின்றது. தமிழ்நாட்டில் எந்த கவலையும் பட வேண்டாம். மருத்துவ மாணவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உள்ளது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 1,500 புறநோயாளிகள் தினந்தோறும் வருகிறார்கள். இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் மக்கள் அரசு மருத்துவமனைகளை பெரிதும் நாடி வருகின்றனர். காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கு வழிவகை செய்யப்படுகிறது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ஓய்வு பெறும் மருத்துவரின் எண்ணிக்கையும், கணக்கில் எடுத்து பணியாளர் தேர்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் ஆலந்தூர் மவுண்ட் தனியார் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் குழந்தையின் காலை மாற்று அறுவைசிகிச்சை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது குறித்து டிஎம்எஸ் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு செய்துள்ளதாக அந்த மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்ததையடுத்து, அதில் தொடர்புடைய மூன்று பேரை கைது செய்துள்ளோம். அதனைத் தொடர்ந்து, புளியந்தோப்பு மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: இதையும் படிங்க: மருத்துவப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது; ஆக.21 முதல் கலந்தாய்வு தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.