ETV Bharat / state

தெரு நாய்கள் தொல்லை: இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? - நீதிபதிகள் கேள்வி! - Street Dog Problems

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2024, 9:10 AM IST

Increased Stray Dog Problems: மதுரை மாநகராட்சியில் தெரு நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என விலங்குகள் நல வாரிய அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

High Court Madurai Bench and Dog
High Court Madurai Bench and Dog image (Credits- ETV Bharat Tamil Nadu)

மதுரை: மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. தெருநாய்கள் சாலைகள் குறுக்கே பாய்வதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது.

மேலும், நாய்கள் கடித்து பலருக்கு ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்" எனவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள், "இந்த வழக்கில் கால்நடைத் துறையின் விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் எதிர் மனுதாரராகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அதனால், அவர்கள் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: நஷ்டத்தில் இயங்கும் காதி கிராப்ட் கடைகள் எத்தனை? - அறிக்கை தாக்கல் செய்ய கதர் வாரியத்துக்கு மதுரைக் கிளை உத்தரவு!

மதுரை: மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. தெருநாய்கள் சாலைகள் குறுக்கே பாய்வதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது.

மேலும், நாய்கள் கடித்து பலருக்கு ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்" எனவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள், "இந்த வழக்கில் கால்நடைத் துறையின் விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் எதிர் மனுதாரராகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அதனால், அவர்கள் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: நஷ்டத்தில் இயங்கும் காதி கிராப்ட் கடைகள் எத்தனை? - அறிக்கை தாக்கல் செய்ய கதர் வாரியத்துக்கு மதுரைக் கிளை உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.