ETV Bharat / state

ஆம்பூரில் பழைய துணிகள் குடோனில் திடீர் தீ விபத்து.. லட்சக்கணக்கில் பொருட்கள் சேதம்! - Ambur fire accident - AMBUR FIRE ACCIDENT

Ambur fire accident: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பழைய துணிகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

தீ விபத்தில் பற்றி எரியும் குடோன்
தீ விபத்தில் பற்றி எரியும் குடோன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 6, 2024, 4:52 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர் இம்ரான் பாஷா. இவர் அதே பகுதியில் பழைய துணிகளை புதுப்பித்து மறுவிற்பனை செய்யும் குடோன் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) பழைய துணிகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில், குடோனில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் தீயில் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆம்பூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை அடுத்து, இரண்டு தீயணைப்பு வாகனத்தில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனிடையே, விபத்து நடந்த கட்டிடத்தின் மேல்மாடியில் சிக்கி இருந்த இரண்டு நபர்களை ஏணி மூலம் பத்திரமாக மீட்டனர். மேலும், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் நகர காவல்துறையினர், இந்த விபத்து மின்கசிவினால் ஏற்பட்டதா அல்லது மர்ம நபர்களின் விரோதச் செயலா என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 1.5 டன் சந்தனக் கட்டைகள் கடத்தல்.. ஈரோட்டில் கேரளா கும்பல் கைது!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர் இம்ரான் பாஷா. இவர் அதே பகுதியில் பழைய துணிகளை புதுப்பித்து மறுவிற்பனை செய்யும் குடோன் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) பழைய துணிகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில், குடோனில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் தீயில் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆம்பூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை அடுத்து, இரண்டு தீயணைப்பு வாகனத்தில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனிடையே, விபத்து நடந்த கட்டிடத்தின் மேல்மாடியில் சிக்கி இருந்த இரண்டு நபர்களை ஏணி மூலம் பத்திரமாக மீட்டனர். மேலும், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் நகர காவல்துறையினர், இந்த விபத்து மின்கசிவினால் ஏற்பட்டதா அல்லது மர்ம நபர்களின் விரோதச் செயலா என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 1.5 டன் சந்தனக் கட்டைகள் கடத்தல்.. ஈரோட்டில் கேரளா கும்பல் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.