ETV Bharat / state

கணவனை விட்டுச் சென்ற மனைவி.. மகளை கொன்று தந்தை தற்கொலை.. சென்னையில் சோகம்! - Father killed daughter and suicide

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 16, 2024, 4:06 PM IST

Updated : Jul 16, 2024, 4:15 PM IST

Father killed daughter in Poonamallee: சென்னை பூந்தமல்லி அருகே மனைவி வீட்டை விட்டுச் சென்ற நிலையில், 5 வயது மகளை கொலை செய்து விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி காவல் நிலையம்
பூந்தமல்லி காவல் நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பூந்தமல்லியை அடுத்த சென்னீர்க்குப்பம் வாணியர் தெருவைச் சேர்ந்தவர் மோகன் (32). கார்பென்டராக வேலை செய்து வரும் இவரது மனைவியின் பெயர் பரிமளா (28). இந்த தம்பதியிக்கு நட்சத்திரா (5) என்ற மகள் உள்ளார். மோகன் மற்றும் அவரது மகள் நட்சத்திராவும் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவர்கள் நீண்ட நேரமாக வெளியே வராதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மோகன் மற்றும் அவரது குழந்தை நட்சத்திரா இறந்த நிலையில் இருந்துள்ளனர்.

இதனையடுத்து, இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மோகனின் மனைவி பரிமளா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது உறவினர் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் ஏற்பட்டு, மகள் நட்சத்திராவை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றுள்ளது தெரியவந்தது.

மேலும், நேற்று (திங்கட்கிழமை) அவரது மனைவி இருக்கும் இடத்திற்குச் சென்ற மோகன், அவரது மனைவி பரிமளாவுடன் சண்டை போட்டு மகளை தன்னுடன் அழைத்து வந்துள்ளார். இதனிடையே, வேறொரு நபருடன் மனைவி வீட்டை விட்டு சென்ற மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் மோகன், அவரது குழந்தையைக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்கொலையைக் கைவிடு: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 என்கிற எண்ணுக்கு அழையுங்கள் அல்லது சிநேகா உதவி எண்ணுக்கு (044-24640050) அழையுங்கள். மேலும், இணைய வழித் தொடர்புக்கு (022-25521111) என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும், மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள help@snehaindia.org எனும் மின்னஞ்சல் முகவரியிலும், நேரில் தொடர்புகொள்ள சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம் சென்னை - 600028 என்கிற முகவரிக்கு நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க: பெட்ரோலால் நடந்த அசம்பாவிதம்..கோவையில் 3 பேர் தீயில் கருகி உயிரிழப்பு.. 4 பேருக்கு பயங்கர தீக்காயம்

சென்னை: பூந்தமல்லியை அடுத்த சென்னீர்க்குப்பம் வாணியர் தெருவைச் சேர்ந்தவர் மோகன் (32). கார்பென்டராக வேலை செய்து வரும் இவரது மனைவியின் பெயர் பரிமளா (28). இந்த தம்பதியிக்கு நட்சத்திரா (5) என்ற மகள் உள்ளார். மோகன் மற்றும் அவரது மகள் நட்சத்திராவும் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவர்கள் நீண்ட நேரமாக வெளியே வராதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மோகன் மற்றும் அவரது குழந்தை நட்சத்திரா இறந்த நிலையில் இருந்துள்ளனர்.

இதனையடுத்து, இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மோகனின் மனைவி பரிமளா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது உறவினர் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் ஏற்பட்டு, மகள் நட்சத்திராவை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றுள்ளது தெரியவந்தது.

மேலும், நேற்று (திங்கட்கிழமை) அவரது மனைவி இருக்கும் இடத்திற்குச் சென்ற மோகன், அவரது மனைவி பரிமளாவுடன் சண்டை போட்டு மகளை தன்னுடன் அழைத்து வந்துள்ளார். இதனிடையே, வேறொரு நபருடன் மனைவி வீட்டை விட்டு சென்ற மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் மோகன், அவரது குழந்தையைக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்கொலையைக் கைவிடு: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 என்கிற எண்ணுக்கு அழையுங்கள் அல்லது சிநேகா உதவி எண்ணுக்கு (044-24640050) அழையுங்கள். மேலும், இணைய வழித் தொடர்புக்கு (022-25521111) என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும், மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள help@snehaindia.org எனும் மின்னஞ்சல் முகவரியிலும், நேரில் தொடர்புகொள்ள சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம் சென்னை - 600028 என்கிற முகவரிக்கு நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க: பெட்ரோலால் நடந்த அசம்பாவிதம்..கோவையில் 3 பேர் தீயில் கருகி உயிரிழப்பு.. 4 பேருக்கு பயங்கர தீக்காயம்

Last Updated : Jul 16, 2024, 4:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.