ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அஸ்வத்தாமனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு! - Armstrong Murder Case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 8, 2024, 7:32 AM IST

Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடியின் மகன் அஸ்வத்தாமனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அஸ்வத்தாமன், ஆம்ஸ்ட்ராங்
அஸ்வத்தாமன், ஆம்ஸ்ட்ராங் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னையில் கடந்த மாதம் 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைகார கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தற்போது வரை இந்த வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி திருவெங்கடம் என்பவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாகச் செயல்பட்ட முக்கிய குற்றவாளிகள் பொன்னை பாலு, அருள், ராமு உள்ளிட்ட 5 நபர்களை மூன்றாவது முறையாக போலீஸ் காவலில் எடுத்து செம்பியம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் முன்னாள் நிர்வாகியும், வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் என்பவரை நேற்று செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன் சிறையில் இருக்கும் பிரபல ரவுடி நாகேந்திரன் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், கடந்த 2 நாட்களாக அஸ்வத்தாமனிடம் செம்பியம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் பல கோடி ரூபாய் மதிப்புடைய நிலப்பிரச்சனையில் அஸ்வத்தாமன் ஈடுபட்ட போது, அவருக்கு எதிராக ஆம்ஸ்ட்ராங் இருந்ததால் அவரை கொலை செய்ய வேண்டுமெனத் திட்டமிட்டதாகவும், மேலும் இதுதொடர்பாக அருள் என்பவரை மூன்று முறை அஸ்வத்தாமன் தனியாக சந்தித்துப் பேசி, பண உதவிகள் செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி, ரவுடி சம்போ செந்திலுடனும் அஸ்வத்தாமன் தொடர்பில் இருந்ததும் அம்பலமாகியுள்ளது. இதற்கிடையே கட்சியில் இருந்து அஸ்வத்தாமனை காங்கிரஸ் நீக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது நீதிபதி வரும் 28ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட அஸ்வத்தாமன் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஸ்வத்தாமன் முக்கிய குற்றவாளியாக கருதப்படுவதால், அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 22 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: மாமூல் கேட்டு மிரட்டிய அஸ்வத்தாமன்..தட்டிக்கேட்ட ஆம்ஸ்ட்ராங்-க்கு ஸ்கெட்ச்? கொலைக்கான பின்னணி என்ன!

சென்னை: சென்னையில் கடந்த மாதம் 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைகார கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தற்போது வரை இந்த வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி திருவெங்கடம் என்பவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாகச் செயல்பட்ட முக்கிய குற்றவாளிகள் பொன்னை பாலு, அருள், ராமு உள்ளிட்ட 5 நபர்களை மூன்றாவது முறையாக போலீஸ் காவலில் எடுத்து செம்பியம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் முன்னாள் நிர்வாகியும், வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் என்பவரை நேற்று செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன் சிறையில் இருக்கும் பிரபல ரவுடி நாகேந்திரன் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், கடந்த 2 நாட்களாக அஸ்வத்தாமனிடம் செம்பியம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் பல கோடி ரூபாய் மதிப்புடைய நிலப்பிரச்சனையில் அஸ்வத்தாமன் ஈடுபட்ட போது, அவருக்கு எதிராக ஆம்ஸ்ட்ராங் இருந்ததால் அவரை கொலை செய்ய வேண்டுமெனத் திட்டமிட்டதாகவும், மேலும் இதுதொடர்பாக அருள் என்பவரை மூன்று முறை அஸ்வத்தாமன் தனியாக சந்தித்துப் பேசி, பண உதவிகள் செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி, ரவுடி சம்போ செந்திலுடனும் அஸ்வத்தாமன் தொடர்பில் இருந்ததும் அம்பலமாகியுள்ளது. இதற்கிடையே கட்சியில் இருந்து அஸ்வத்தாமனை காங்கிரஸ் நீக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது நீதிபதி வரும் 28ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட அஸ்வத்தாமன் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஸ்வத்தாமன் முக்கிய குற்றவாளியாக கருதப்படுவதால், அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 22 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: மாமூல் கேட்டு மிரட்டிய அஸ்வத்தாமன்..தட்டிக்கேட்ட ஆம்ஸ்ட்ராங்-க்கு ஸ்கெட்ச்? கொலைக்கான பின்னணி என்ன!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.