ETV Bharat / state

பாதாளச் சாக்கடைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தி திண்டிவனத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 11, 2024, 3:05 PM IST

Updated : Feb 13, 2024, 2:02 PM IST

AIADMK Protest: பாதாளச் சாக்கடைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிடவும், பழுதடைந்துள்ள சாலைகளைச் சீரமைத்து, குப்பைகளை அகற்றி சுகாதாரம் நிலவிட வலியுறுத்தி அதிமுக சார்பில், வருகிற 16ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர்
எடப்பாடி பழனிசாமி

சென்னை: பாதாளச் சாக்கடைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிட வலியுறுத்தி, வருகிற பிப்ரவரி 16ஆம் தேதி, வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், திண்டிவனம் R.S.பிள்ளை வீதி, வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், அதிமுக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம், மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே மிகுந்த சிரமப்பட்டு அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை நிலவுவது வாடிக்கையான ஒன்றாகும். அதேபோல், மக்கள் நலன் கருதி அதிமுக ஆட்சிக் காலங்களில் கொண்டு வரப்பட்ட பல்வேறு முத்தான திட்டங்களை முடக்குவதும், நீர்த்துப்போகச் செய்வதும் தொடர்கதை.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனவும், ஜெயலலிதாவின் நல்லாசியோடு செயல்பட்ட அதிமுக ஆட்சியில், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டத்தை முறையாக செயல்படுத்தாத காரணத்தால், நகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் சேதமடைந்துள்ளது.

மேலும், சாலைகள் முறையாக மறுசீரமைப்பு செய்யப்படாததன் காரணமாக ஏற்படும் புழுதியால், பொதுமக்கள் மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற நோய்களால் அவதிக்கு உள்ளாவதாகவும், சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் விபத்துகள் ஏற்படுவதாகவும், நகராட்சி முழுவதும் குப்பைகள் சேகரிக்கப்படாமல் அந்தந்த சாலையிலேயே எரிக்கப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு மற்றும் நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும், அப்பகுதிவாழ் மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

திமுக அரசு பொதுமக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் இருந்து வருவதால், ஒவ்வொரு நாளும் மக்கள் மிகுந்த வேதனையைச் சந்தித்து வருகின்றனர். நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியாளர்களின் இத்தகைய மெத்தனப் போக்கு மற்றும் காழ்ப்புணர்ச்சிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிலையில், பொதுமக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத, கோமா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள திண்டிவனம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிடவும், பல்வேறு சீரமைப்புப் பணிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அதிமுக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், வருகிற பிப்ரவரி 16ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், திண்டிவனம் R.S.பிள்ளை வீதி, வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம், அதிமுக அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம் தலைமையில் நடைபெறும். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், அதிமுக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: டெல்லியில் தொடங்கிய எம்.எஸ்.சுவாமிநாதனின் பயணம் - நெஞ்சை சிலிர்க்கும் விவசாயத்தின் மீட்பு..!

சென்னை: பாதாளச் சாக்கடைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிட வலியுறுத்தி, வருகிற பிப்ரவரி 16ஆம் தேதி, வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், திண்டிவனம் R.S.பிள்ளை வீதி, வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், அதிமுக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம், மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே மிகுந்த சிரமப்பட்டு அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை நிலவுவது வாடிக்கையான ஒன்றாகும். அதேபோல், மக்கள் நலன் கருதி அதிமுக ஆட்சிக் காலங்களில் கொண்டு வரப்பட்ட பல்வேறு முத்தான திட்டங்களை முடக்குவதும், நீர்த்துப்போகச் செய்வதும் தொடர்கதை.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனவும், ஜெயலலிதாவின் நல்லாசியோடு செயல்பட்ட அதிமுக ஆட்சியில், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டத்தை முறையாக செயல்படுத்தாத காரணத்தால், நகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் சேதமடைந்துள்ளது.

மேலும், சாலைகள் முறையாக மறுசீரமைப்பு செய்யப்படாததன் காரணமாக ஏற்படும் புழுதியால், பொதுமக்கள் மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற நோய்களால் அவதிக்கு உள்ளாவதாகவும், சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் விபத்துகள் ஏற்படுவதாகவும், நகராட்சி முழுவதும் குப்பைகள் சேகரிக்கப்படாமல் அந்தந்த சாலையிலேயே எரிக்கப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு மற்றும் நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும், அப்பகுதிவாழ் மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

திமுக அரசு பொதுமக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் இருந்து வருவதால், ஒவ்வொரு நாளும் மக்கள் மிகுந்த வேதனையைச் சந்தித்து வருகின்றனர். நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியாளர்களின் இத்தகைய மெத்தனப் போக்கு மற்றும் காழ்ப்புணர்ச்சிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிலையில், பொதுமக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத, கோமா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள திண்டிவனம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிடவும், பல்வேறு சீரமைப்புப் பணிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அதிமுக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், வருகிற பிப்ரவரி 16ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், திண்டிவனம் R.S.பிள்ளை வீதி, வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம், அதிமுக அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம் தலைமையில் நடைபெறும். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், அதிமுக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: டெல்லியில் தொடங்கிய எம்.எஸ்.சுவாமிநாதனின் பயணம் - நெஞ்சை சிலிர்க்கும் விவசாயத்தின் மீட்பு..!

Last Updated : Feb 13, 2024, 2:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.