ETV Bharat / state

"செந்தில் பாலாஜிக்கு கிடைத்துள்ளது காலதாமதமான நீதி" - டி.கே.எஸ்.இளங்கோவன் காட்டம் - TKS Elangovan

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 13 hours ago

Updated : 9 hours ago

செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் காலதாமதமாக வழங்கப்பட்ட நீதியாகவே பார்க்கிறேன் என திமுக செய்தி தொடர்பாளர் குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் கோப்புப்படம்
செந்தில் பாலாஜி மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனையடுத்து, அவருக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறை சார்பில் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நிறைவுற்ற நிலையில், இன்று (செப்.26) உச்ச நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளதை அடுத்து, சிறையில் இருந்து வெளியே வரவுள்ளார். இந்த நிலையில், இதுகுறித்து திமுக செய்தி தொடர்பாளர் குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது அவர், "குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் என்பது சட்டம் அளித்துள்ள உரிமையாகும். ஆனால், 15 மாதங்கள் தேவையில்லாமல், வழக்கில் எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல் செந்தில் பாலாஜியை சிறையில் வைத்திருந்துள்ளார்கள்.

செந்தில் பாலாஜி வழக்கில் இருந்து விடுதலை பெற்றுவிட்டால் 15 மாதம் சிறையில் இருந்தது அவரின் உரிமையை மீறிய செயலாக கருதப்படும். குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளிகள் என நிரூபிக்கும் வரையில் குற்றவாளிகள் என கருதமுடியாது.

இதையும் படிங்க: “ஸ்டாலினின் ஞாபக மறதி தமிழகத்துக்கு நல்லதல்ல”.. வானதி சீனிவாசன் திட்டவட்டம்!

அதேபோல இந்த வழக்கை பொறுத்தவரையில், அமலாக்கத்துறையினர் திட்டமிட்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கவிடாமல் தடுத்துள்ளனர். ஆகவே இந்த செயல்பாடு, மத்திய அரசு திட்டமிட்டு தங்களுக்கு கீழ் செயல்படும் துறைகளை எதிர்க்கட்சிகள் மீது தவறாக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை நிரூபணமாக்கும் வகையில் உள்ளது.

பாஜக வாசிங்மெஷின் போன்றது குற்றம்சாட்டப்படுபவர்கள் அவர்களுடன் இணைந்தால் தூய்மை அடைந்துவிடுவார்கள். இதுமட்டும் அல்லாது, செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் காலதாமதமாக வழங்கப்பட்ட நீதியாகவே பார்க்கிறேன்.

மேலும் இந்த வேலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் ஆவதற்கு எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளதால், இது குறித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்" என்று தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனையடுத்து, அவருக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறை சார்பில் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நிறைவுற்ற நிலையில், இன்று (செப்.26) உச்ச நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளதை அடுத்து, சிறையில் இருந்து வெளியே வரவுள்ளார். இந்த நிலையில், இதுகுறித்து திமுக செய்தி தொடர்பாளர் குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது அவர், "குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் என்பது சட்டம் அளித்துள்ள உரிமையாகும். ஆனால், 15 மாதங்கள் தேவையில்லாமல், வழக்கில் எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல் செந்தில் பாலாஜியை சிறையில் வைத்திருந்துள்ளார்கள்.

செந்தில் பாலாஜி வழக்கில் இருந்து விடுதலை பெற்றுவிட்டால் 15 மாதம் சிறையில் இருந்தது அவரின் உரிமையை மீறிய செயலாக கருதப்படும். குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளிகள் என நிரூபிக்கும் வரையில் குற்றவாளிகள் என கருதமுடியாது.

இதையும் படிங்க: “ஸ்டாலினின் ஞாபக மறதி தமிழகத்துக்கு நல்லதல்ல”.. வானதி சீனிவாசன் திட்டவட்டம்!

அதேபோல இந்த வழக்கை பொறுத்தவரையில், அமலாக்கத்துறையினர் திட்டமிட்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கவிடாமல் தடுத்துள்ளனர். ஆகவே இந்த செயல்பாடு, மத்திய அரசு திட்டமிட்டு தங்களுக்கு கீழ் செயல்படும் துறைகளை எதிர்க்கட்சிகள் மீது தவறாக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை நிரூபணமாக்கும் வகையில் உள்ளது.

பாஜக வாசிங்மெஷின் போன்றது குற்றம்சாட்டப்படுபவர்கள் அவர்களுடன் இணைந்தால் தூய்மை அடைந்துவிடுவார்கள். இதுமட்டும் அல்லாது, செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் காலதாமதமாக வழங்கப்பட்ட நீதியாகவே பார்க்கிறேன்.

மேலும் இந்த வேலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் ஆவதற்கு எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளதால், இது குறித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்" என்று தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : 9 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.