ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: இத்தனை லட்சம் பேர் ஆப்சென்ட்! - tnpsc group 4 exam latest update

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 7:58 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வை மொத்தம் 15 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் எழுதியுள்ளனர்.

போட்டி தேர்வு எழுதுவோர், டிஎன்பிஎஸ்சி அலுவலகம் (கோப்புப்படம்)
போட்டி தேர்வு எழுதுவோர், டிஎன்பிஎஸ்சி அலுவலகம் (கோப்புப்படம்) (Image Credit -ETV Bharat Tamilnadu)

சென்னை: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6,244 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 எழுத்து தேர்வு கடந்த 9 ந் தேதி நடைபெற்றது. இத்தேர்வை எழுத மொத்தம் 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 பேர் விண்ணப்பிருந்த நிலையில்,15 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் தேர்வெழுதி உள்ளனர் எனவும், 4 லட்சத்து 45 ஆயிரத்து 115 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 பதவிகளில் வரும் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், தனி செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 என மொத்தம் 6244 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 2024 ஜனவரி 30ம் தேதி வெளியிட்டது. இதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 28ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
அப்பதவி இடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு ஜூன் 9 ந் தேதி நடைபெற்றது.

38 மாவட்டங்களில் 7,247 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாநிலம் முழுவதும் மொத்தம் 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 விண்ணப்பதாரர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். சென்னை மாவட்டத்தை பொருத்தவரை 432 மையங்களில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 276 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் தேர்வர்கள் விடைத்தாளை முழுமையாக பூர்த்திச் செய்யாவிட்டால் அதற்கும் மதிப்பெண் குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குரூப் 4 பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்த 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 பேர்களில், 15 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் (78.15%) தேர்வினை எழுதினர் எனவும், 4 லட்சத்து 45 ஆயிரத்து 115 பேர் (21.85%) தேர்வு எழுதவில்லை என்றும் டிஎன்பிஎஸ்சி வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: நீட் தேர்வு விவகாரம்: தமிழக அரசு எடுத்த திடீர் முடிவு! - அமைச்சர் சொன்னது என்ன?

சென்னை: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6,244 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 எழுத்து தேர்வு கடந்த 9 ந் தேதி நடைபெற்றது. இத்தேர்வை எழுத மொத்தம் 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 பேர் விண்ணப்பிருந்த நிலையில்,15 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் தேர்வெழுதி உள்ளனர் எனவும், 4 லட்சத்து 45 ஆயிரத்து 115 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 பதவிகளில் வரும் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், தனி செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 என மொத்தம் 6244 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 2024 ஜனவரி 30ம் தேதி வெளியிட்டது. இதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 28ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
அப்பதவி இடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு ஜூன் 9 ந் தேதி நடைபெற்றது.

38 மாவட்டங்களில் 7,247 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாநிலம் முழுவதும் மொத்தம் 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 விண்ணப்பதாரர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். சென்னை மாவட்டத்தை பொருத்தவரை 432 மையங்களில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 276 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் தேர்வர்கள் விடைத்தாளை முழுமையாக பூர்த்திச் செய்யாவிட்டால் அதற்கும் மதிப்பெண் குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குரூப் 4 பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்த 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 பேர்களில், 15 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் (78.15%) தேர்வினை எழுதினர் எனவும், 4 லட்சத்து 45 ஆயிரத்து 115 பேர் (21.85%) தேர்வு எழுதவில்லை என்றும் டிஎன்பிஎஸ்சி வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: நீட் தேர்வு விவகாரம்: தமிழக அரசு எடுத்த திடீர் முடிவு! - அமைச்சர் சொன்னது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.