ETV Bharat / state

தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்! - Dhanush Aishwarya divorce

Dhanush - Aishwarya Rajinikanth: நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் பரஸ்பர விவாகரத்துக் கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 3:21 PM IST

Dhanush - Aishwarya Rajinikanth
Dhanush - Aishwarya Rajinikanth

சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக பரஸ்பர விவாகரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதில், கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நடிகர் தனுஷும், ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் சென்னையில் நடைபெற்றது. இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு திருமண வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இருவரும் தங்களது எக்ஸ் பக்கத்தில், தாங்கள் பிரிந்து உள்ளதாக பதிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் வருமான வரித்துறை சோதனை.. மூன்று நாட்களில் ரூ.5 கோடி பறிமுதல்! - IT Raid In TN

சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக பரஸ்பர விவாகரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதில், கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நடிகர் தனுஷும், ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் சென்னையில் நடைபெற்றது. இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு திருமண வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இருவரும் தங்களது எக்ஸ் பக்கத்தில், தாங்கள் பிரிந்து உள்ளதாக பதிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் வருமான வரித்துறை சோதனை.. மூன்று நாட்களில் ரூ.5 கோடி பறிமுதல்! - IT Raid In TN

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.