ETV Bharat / state

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி; 27 வங்கிக் கணக்குகள் முடக்கம்.. 8 கட்டடங்களுக்கு சீல்! - Devanathan Yadav Cheating Case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2024, 3:27 PM IST

Updated : Aug 24, 2024, 5:41 PM IST

Devanathan Yadav: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 27 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், 8 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

தேவநாதன் யாதவ்
தேவநாதன் யாதவ் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் தேவநாதன் யாதவ் என்ற நபர் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவராக இருந்து வரும் நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.

இவரது நிதி நிறுவனத்தில் வைப்புத் தொகையாக முதலீடு செய்யும் பணத்திற்கு 8 முதல் 12 சதவீதம் வரை வட்டி கொடுக்கப்படும் என கவர்ச்சியான விளம்பரம் செய்துள்ளார். இதனை நம்பி தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரம் பேர் நிரந்தர வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்தனர்.

இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்புத் தொகை உறுப்பினர்களாக உள்ளனர் என கூறப்படுகிறது. மயிலாப்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிதி நிறுவனத்திற்கு சென்னையில் மட்டும் 5 கிளைகள் உள்ளன.

பண மோசடி: இந்த நிதி நிறுவனத்தில் குறைந்தபட்ச நிரந்தர வைப்பு நிதி ரூ.1 லட்சம் எனவும், அதிகபட்சமாக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வைப்புத் தொகைக்கு ஏற்றார் போல் 8 முதல் 12 சதவீத வட்டி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நம்பி தமிழ்நாடு முழுவதும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலும் ஏராளமானோர் முதலீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வுத் தொகை மற்றும் வட்டிப் பணம் முறையாக வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

3 பேர் கைது: இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், கடந்த ஜூன் 6ஆம் தேதி, நிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரசாத் என்பவர் அளித்த புகார் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் 144 முதலீட்டாளர்களிடமிருந்து 24.5 கோடி ரூபாய் பெற்று ஏமாற்றியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, திருச்சியில் வைத்து நிதி நிறுவன உரிமையாளர் தேவநாதன் யாதவை போலீசார் கைது செய்தனர். மேலும், இதே மோசடி வழக்கு தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குனர்களான குணசீலன், மகிமைநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பல கோடி‌ ரூபாய் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

12 இடங்களில் சோதனை: மேலும், மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனம், தி.நகரில் உள்ள தேவநாதனின் வீடு, குற்றத்திற்கு உடந்தையாக இருந்த நபர்களின் வீடுகள் என 12 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 4 லட்சம் ரூபாய் பணம், இரண்டு கார்கள், ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் சில முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

27 வங்கிக் கணக்குகள் முடக்கம்: சோதனையின் முடிவில் நிதி நிறுவனத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்துச் சென்றனர். மயிலாப்பூர் நிதி நிறுவனத்தின் மீது 300க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ள நிலையில், தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிதி நிறுவனத்தின் பெயரில் உள்ள 18 வங்கிக் கணக்குகள், தேவநாதனின் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் செய்தியாளர் குணசீலன் மற்றும் ஒளிப்பதிவாளர் மகிமை நாதன் ஆகியோரின் இரண்டு வங்கிக் கணக்குகளையும் முடக்கி உள்ளனர். அதாவது, இதுவரை இந்த மோசடி விவகாரம் தொடர்பாக மொத்தம் 27 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சீல் வைக்கப்பட்ட கட்டடம்
சீல் வைக்கப்பட்ட கட்டடம் (Credits - ETV Bharat Tamil Nadu)

கட்டடங்களுக்கு சீல் : மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில், தேவநாதன் தொடர்புடைய மேலும் 2 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேவநாதன் தொடர்புடைய அடையாறு, வண்ணாரப்பேட்டை, சைதாப்பேட்டை, பெரம்பூர் நிதி நிறுவன கிளை அலுவலகங்கள் உட்பட 6 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் மேலும், மயிலாப்பூரில் உள்ள 2 கட்டடங்கள் உட்பட 8 கட்டடங்களுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: 'தற்காலிகமாக விலகுகிறேன்'.. நாதக-வினரின் தொடர் விமர்சனங்களால் எஸ்பி வருண்குமார் திடீர் முடிவு?

சென்னை: சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் தேவநாதன் யாதவ் என்ற நபர் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவராக இருந்து வரும் நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.

இவரது நிதி நிறுவனத்தில் வைப்புத் தொகையாக முதலீடு செய்யும் பணத்திற்கு 8 முதல் 12 சதவீதம் வரை வட்டி கொடுக்கப்படும் என கவர்ச்சியான விளம்பரம் செய்துள்ளார். இதனை நம்பி தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரம் பேர் நிரந்தர வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்தனர்.

இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்புத் தொகை உறுப்பினர்களாக உள்ளனர் என கூறப்படுகிறது. மயிலாப்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிதி நிறுவனத்திற்கு சென்னையில் மட்டும் 5 கிளைகள் உள்ளன.

பண மோசடி: இந்த நிதி நிறுவனத்தில் குறைந்தபட்ச நிரந்தர வைப்பு நிதி ரூ.1 லட்சம் எனவும், அதிகபட்சமாக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வைப்புத் தொகைக்கு ஏற்றார் போல் 8 முதல் 12 சதவீத வட்டி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நம்பி தமிழ்நாடு முழுவதும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலும் ஏராளமானோர் முதலீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வுத் தொகை மற்றும் வட்டிப் பணம் முறையாக வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

3 பேர் கைது: இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், கடந்த ஜூன் 6ஆம் தேதி, நிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரசாத் என்பவர் அளித்த புகார் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் 144 முதலீட்டாளர்களிடமிருந்து 24.5 கோடி ரூபாய் பெற்று ஏமாற்றியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, திருச்சியில் வைத்து நிதி நிறுவன உரிமையாளர் தேவநாதன் யாதவை போலீசார் கைது செய்தனர். மேலும், இதே மோசடி வழக்கு தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குனர்களான குணசீலன், மகிமைநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பல கோடி‌ ரூபாய் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

12 இடங்களில் சோதனை: மேலும், மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனம், தி.நகரில் உள்ள தேவநாதனின் வீடு, குற்றத்திற்கு உடந்தையாக இருந்த நபர்களின் வீடுகள் என 12 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 4 லட்சம் ரூபாய் பணம், இரண்டு கார்கள், ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் சில முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

27 வங்கிக் கணக்குகள் முடக்கம்: சோதனையின் முடிவில் நிதி நிறுவனத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்துச் சென்றனர். மயிலாப்பூர் நிதி நிறுவனத்தின் மீது 300க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ள நிலையில், தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிதி நிறுவனத்தின் பெயரில் உள்ள 18 வங்கிக் கணக்குகள், தேவநாதனின் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் செய்தியாளர் குணசீலன் மற்றும் ஒளிப்பதிவாளர் மகிமை நாதன் ஆகியோரின் இரண்டு வங்கிக் கணக்குகளையும் முடக்கி உள்ளனர். அதாவது, இதுவரை இந்த மோசடி விவகாரம் தொடர்பாக மொத்தம் 27 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சீல் வைக்கப்பட்ட கட்டடம்
சீல் வைக்கப்பட்ட கட்டடம் (Credits - ETV Bharat Tamil Nadu)

கட்டடங்களுக்கு சீல் : மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில், தேவநாதன் தொடர்புடைய மேலும் 2 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேவநாதன் தொடர்புடைய அடையாறு, வண்ணாரப்பேட்டை, சைதாப்பேட்டை, பெரம்பூர் நிதி நிறுவன கிளை அலுவலகங்கள் உட்பட 6 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் மேலும், மயிலாப்பூரில் உள்ள 2 கட்டடங்கள் உட்பட 8 கட்டடங்களுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: 'தற்காலிகமாக விலகுகிறேன்'.. நாதக-வினரின் தொடர் விமர்சனங்களால் எஸ்பி வருண்குமார் திடீர் முடிவு?

Last Updated : Aug 24, 2024, 5:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.