ETV Bharat / state

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் கசிவு! தனியார் கல்லூரிகளில் சேர வைக்க முயற்சியா? - TNEA Students data leaked

Students data leaked: பொறியியல் படிப்பில் சேர விரும்பிய மாணவர்களின் மொபைல் எண்களுடன் கூடிய முழுமையான விவரங்கள் தனியார் கல்லூரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், மாணவர்களை தொடர்பு கொண்டு தனியார் கல்லூரிகளில் சேர வைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 7, 2024, 8:13 PM IST

அண்ணா பல்கலைக்கழகம் கோப்புப்படம்
அண்ணா பல்கலைக்கழகம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழநாட்டில் பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கையை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு நடத்தி வருகிறது. 2024-25ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 433 கல்லூரிகளில் பிஇ , பிடெக் படிப்பில் இளங்கலையில் 2 லட்சத்து 33ஆயிரத்து 376 இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி வழங்கி உள்ளது.

அதில் ஒற்றை சாரள முறையிலான கலந்தாய்வில் தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மூலம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 6ஆம் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 12ஆம் தேதி வரை நடந்தது.

மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தரவரிசை பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிட்டப்பட்டன. பொதுப்பிரிவில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தேதி தொடங்கி, செப்டம்பர் 3ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

சிறப்புப்பிரிவு இட ஒதுக்கீட்டு கலந்தாய்வு முடிவடைந்து, முதல் சுற்று கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2, 3, 4 ஆகிய சுற்றுகளில் சேர உள்ள மாணவர்களின் விபரங்கள் மொபைல் எண்ணுடன் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விபரங்கள் குறைவாக சேரும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் கிடைத்திருக்கின்றன.

மாணவர்களின் மொபைல் எண்களுடன் கூடிய விவரங்கள், தனியார் கல்லூரிகளை சேர்ந்த புரோக்கர்கள் கைகளுக்கும், கல்லூரிகளுக்கும் சென்றது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. கலந்தாய்வை நடத்தக்கூடிய தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், கலந்தாய்வுக்கான இணையதளத்தில் மாணவர்களின் பல்வேறு விவரங்களை வெளியிடுகின்றன.

மாணவர்கள் பெற்ற தரவரிசை மதிப்பெண்கள், மாணவர்கள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் மட்டும் அதில் இடம்பெறும். மாணவர்களுடைய மொபைல் எண்கள் அந்த பட்டியலில் இடம்பெறுவது கிடையாது. ஆனால் மாணவர்களுடைய மொபைல் எண்களோடு கூடிய விவரங்கள், தனியார் கல்லூரிகளின் கைகளுக்கு கிடைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து தனியார் கல்லூரிகளை சேர்ந்த புரோக்கர்கள், மாணவர்களை தொடர்பு கொண்டு தனியார் கல்லூரியில் சேர்வதற்கு பல்வேறு வகைகளில் முயற்சித்து வரும் தகவலும் வெளியாகி உள்ளது. பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் வெளியே கசிந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே, 295 பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலையின் இணைவு அங்கீகாரம் பெறுவதற்காக, போலியாக பேராசிரியர்களை பணிபுரிவதாக கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது முறைகேடாக மாணவர்களின் விவரங்களை பெற்று, தனியார் கல்லூரிகளில் சேர்ப்பதற்கு முயற்சிப்பதும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து கலந்தாய்வை நடத்தக்கூடிய தொழில்நுட்ப கல்வி இயக்குனருக்கு வட்டாரம் கூறும் போது, தங்களது தரப்பிலிருந்து எந்த விபரங்களும் கசியவில்லை. அதே நேரத்தில் ஒரு லட்சம் மாணவர்களின் விவரங்கள் வெளியே சென்று உள்ளது. ஆனால் அதில் உள்ள 5 ஆயிரம் மாணவர்களின் விபரங்கள் சரியாக உள்ளது. சில செல்போன் எண்கள் தவறுதலாக இருக்கிறது. இது குறித்து ஆய்வு செய்யப்படும்" என தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "ஆவணங்கள் இருந்தும் அலைக்கழிக்கப்படுகிறோம்".. குடியிருப்புக்காக ஆண்டுக்கணக்கில் போராடும் நரிக்குறவர் இன மக்கள்!

சென்னை: தமிழநாட்டில் பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கையை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு நடத்தி வருகிறது. 2024-25ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 433 கல்லூரிகளில் பிஇ , பிடெக் படிப்பில் இளங்கலையில் 2 லட்சத்து 33ஆயிரத்து 376 இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி வழங்கி உள்ளது.

அதில் ஒற்றை சாரள முறையிலான கலந்தாய்வில் தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மூலம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 6ஆம் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 12ஆம் தேதி வரை நடந்தது.

மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தரவரிசை பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிட்டப்பட்டன. பொதுப்பிரிவில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தேதி தொடங்கி, செப்டம்பர் 3ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

சிறப்புப்பிரிவு இட ஒதுக்கீட்டு கலந்தாய்வு முடிவடைந்து, முதல் சுற்று கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2, 3, 4 ஆகிய சுற்றுகளில் சேர உள்ள மாணவர்களின் விபரங்கள் மொபைல் எண்ணுடன் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விபரங்கள் குறைவாக சேரும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் கிடைத்திருக்கின்றன.

மாணவர்களின் மொபைல் எண்களுடன் கூடிய விவரங்கள், தனியார் கல்லூரிகளை சேர்ந்த புரோக்கர்கள் கைகளுக்கும், கல்லூரிகளுக்கும் சென்றது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. கலந்தாய்வை நடத்தக்கூடிய தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், கலந்தாய்வுக்கான இணையதளத்தில் மாணவர்களின் பல்வேறு விவரங்களை வெளியிடுகின்றன.

மாணவர்கள் பெற்ற தரவரிசை மதிப்பெண்கள், மாணவர்கள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் மட்டும் அதில் இடம்பெறும். மாணவர்களுடைய மொபைல் எண்கள் அந்த பட்டியலில் இடம்பெறுவது கிடையாது. ஆனால் மாணவர்களுடைய மொபைல் எண்களோடு கூடிய விவரங்கள், தனியார் கல்லூரிகளின் கைகளுக்கு கிடைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து தனியார் கல்லூரிகளை சேர்ந்த புரோக்கர்கள், மாணவர்களை தொடர்பு கொண்டு தனியார் கல்லூரியில் சேர்வதற்கு பல்வேறு வகைகளில் முயற்சித்து வரும் தகவலும் வெளியாகி உள்ளது. பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் வெளியே கசிந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே, 295 பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலையின் இணைவு அங்கீகாரம் பெறுவதற்காக, போலியாக பேராசிரியர்களை பணிபுரிவதாக கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது முறைகேடாக மாணவர்களின் விவரங்களை பெற்று, தனியார் கல்லூரிகளில் சேர்ப்பதற்கு முயற்சிப்பதும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து கலந்தாய்வை நடத்தக்கூடிய தொழில்நுட்ப கல்வி இயக்குனருக்கு வட்டாரம் கூறும் போது, தங்களது தரப்பிலிருந்து எந்த விபரங்களும் கசியவில்லை. அதே நேரத்தில் ஒரு லட்சம் மாணவர்களின் விவரங்கள் வெளியே சென்று உள்ளது. ஆனால் அதில் உள்ள 5 ஆயிரம் மாணவர்களின் விபரங்கள் சரியாக உள்ளது. சில செல்போன் எண்கள் தவறுதலாக இருக்கிறது. இது குறித்து ஆய்வு செய்யப்படும்" என தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "ஆவணங்கள் இருந்தும் அலைக்கழிக்கப்படுகிறோம்".. குடியிருப்புக்காக ஆண்டுக்கணக்கில் போராடும் நரிக்குறவர் இன மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.