ETV Bharat / state

பொறியியல் படிப்பில் சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நாளை தொடக்கம்! - ENGINEERING COUNSELING 2024

Counseling for engineering course: தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவில் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 25 முதல் 27ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 24, 2024, 8:02 PM IST

அண்ணா பல்கலைக்கழகம் கோப்பு படம்
அண்ணா பல்கலைக்கழகம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவில் சிறப்புப் பிரிவு மாணவர்களான மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 25 முதல் 27ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.

சிறப்புப் பிரிவில் உள்ள 9,547 இடங்களுக்கு 3,772 மாணவர்களுக்கு கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2024-25ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 433 கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் இளங்கலையில் 2,33,376 இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

அதில், ஒற்றைச் சாளர முறையிலான கலந்தாய்வில் தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மூலம் 1,79,938 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி தொடங்கி ஜூன் 12ஆம் தேதி வரை நடந்தது.

மொத்தம் 2,53,954 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 1,99,868 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தரவரிசை பட்டியல் கடந்த ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்பட்டன. பொதுப்பிரிவில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சிறப்புப் பிரிவினருக்கு ஜூலை 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில் விளையாட்டுப் பிரிவில் உள்ள 38 இடங்களுக்கு 282 விளையாட்டு வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான 11 இடங்களுக்கு 11 பேரும், மாற்றுத்திறனாளிகளுக்கான 664 இடங்களுக்கு 111 மாற்றுத் திறனாளிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 7 பேர் விரும்பும் கல்லூரியை பதிவு செய்தனர். அவர்களில் 6 பேர் கல்லூரிகளைத் தேர்வு செய்து இடங்களைப் பெற்றுள்ளனர்.

விளையாட்டு வீரர்கள் பிரிவில் 262 அரசுப் பள்ளி மாணவர்கள் விருப்பங்களை பதிவு செய்ததில், 233 வீரர்கள் இடங்களை உறுதி செய்தனர். அவர்களில் 38 பேருக்கு பொறியியல் படிப்பிற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிப் பிரிவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 661 இடங்கள் உள்ளது. அதில் 70 மாணவர்கள் கல்லூரியை பதிவு செய்தனர். அவர்களில் 58 பேர் இறுதி ஒதுக்கீட்டை உறுதி செய்ததில், 48 மாணவர்கள் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்களில் சிறப்புப் பிரிவினருக்கான 710 இடங்களில் 92 இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். 618 இடங்கள் காலியாக உள்ளது. பொதுப்பிரிவு கலந்தாய்வில் சிறப்புப் பிரிவினர்களுக்கு ஜூலை 25ஆம் தேதி (நாளை) முதல் 27ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.

இதில் மாற்றுத்திறனாளி பிரிவில் 8,948 இடங்களுக்கு 416 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 1,243 பேர் 143 இடங்களுக்கும், விளையாட்டு வீரர்கள் பிரிவில் 2,113 பேர் 456 இடங்களுக்கும் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: “மத்திய பட்ஜெட்டில் குப்பைதான் உள்ளது!”- அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விமர்சனம்..

சென்னை: தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவில் சிறப்புப் பிரிவு மாணவர்களான மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 25 முதல் 27ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.

சிறப்புப் பிரிவில் உள்ள 9,547 இடங்களுக்கு 3,772 மாணவர்களுக்கு கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2024-25ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 433 கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் இளங்கலையில் 2,33,376 இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

அதில், ஒற்றைச் சாளர முறையிலான கலந்தாய்வில் தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மூலம் 1,79,938 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி தொடங்கி ஜூன் 12ஆம் தேதி வரை நடந்தது.

மொத்தம் 2,53,954 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 1,99,868 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தரவரிசை பட்டியல் கடந்த ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்பட்டன. பொதுப்பிரிவில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சிறப்புப் பிரிவினருக்கு ஜூலை 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில் விளையாட்டுப் பிரிவில் உள்ள 38 இடங்களுக்கு 282 விளையாட்டு வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான 11 இடங்களுக்கு 11 பேரும், மாற்றுத்திறனாளிகளுக்கான 664 இடங்களுக்கு 111 மாற்றுத் திறனாளிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 7 பேர் விரும்பும் கல்லூரியை பதிவு செய்தனர். அவர்களில் 6 பேர் கல்லூரிகளைத் தேர்வு செய்து இடங்களைப் பெற்றுள்ளனர்.

விளையாட்டு வீரர்கள் பிரிவில் 262 அரசுப் பள்ளி மாணவர்கள் விருப்பங்களை பதிவு செய்ததில், 233 வீரர்கள் இடங்களை உறுதி செய்தனர். அவர்களில் 38 பேருக்கு பொறியியல் படிப்பிற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிப் பிரிவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 661 இடங்கள் உள்ளது. அதில் 70 மாணவர்கள் கல்லூரியை பதிவு செய்தனர். அவர்களில் 58 பேர் இறுதி ஒதுக்கீட்டை உறுதி செய்ததில், 48 மாணவர்கள் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்களில் சிறப்புப் பிரிவினருக்கான 710 இடங்களில் 92 இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். 618 இடங்கள் காலியாக உள்ளது. பொதுப்பிரிவு கலந்தாய்வில் சிறப்புப் பிரிவினர்களுக்கு ஜூலை 25ஆம் தேதி (நாளை) முதல் 27ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.

இதில் மாற்றுத்திறனாளி பிரிவில் 8,948 இடங்களுக்கு 416 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 1,243 பேர் 143 இடங்களுக்கும், விளையாட்டு வீரர்கள் பிரிவில் 2,113 பேர் 456 இடங்களுக்கும் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: “மத்திய பட்ஜெட்டில் குப்பைதான் உள்ளது!”- அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விமர்சனம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.