ETV Bharat / state

கோயம்பேடு ஆம்னி பேருந்து தீ விபத்து: போலீசில் சிக்கிய நபர் சொன்ன திடுக் தகவல் - Koyambedu fire accident

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 6:13 PM IST

Koyambedu fire accident: கோயம்பேடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்து தீ பிடித்து எரிந்ததையடுத்து, பேருந்துக்கு தீ வைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

ஆம்னி பஸ் தீ விபத்து
ஆம்னி பஸ் தீ விபத்து (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை கோயம்பேடு பகுதியில் அங்காடி நிர்வாக குழுவிற்கு சொந்தமான வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தனியார் ஆம்னி பஸ், ஆட்டோ, வேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் நேற்று மாலை திடீரென ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து அதன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏழு ஆட்டோக்கள், வேன், கார் என அனைத்து வாகனங்களுக்கும் தீ வேகமாக பரவியது.

ஆம்னி பஸ் தீ விபத்து தொடர்பான வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனால் அனைத்து வாகனங்களும் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தன. இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். கோயம்பேடு ஜெ.ஜெ.நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.பின்னர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பஸ், ஆட்டோ உட்பட 10 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றச்செயலில் ஈடுபட்டவரை கைது செய்தனர். பின்னர் அவருடன் மேற்கொண்ட விசாரணையில் புகைப்பிடித்துவிட்டு பேருந்துக்கு தீ வைத்ததும், அவர் பெயர் பழனி முத்து என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: கோயம்பேட்டில் திடீரென தீ பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. விண்ணை முட்டிய புகை - சென்னையில் பரபரப்பு!

சென்னை: சென்னை கோயம்பேடு பகுதியில் அங்காடி நிர்வாக குழுவிற்கு சொந்தமான வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தனியார் ஆம்னி பஸ், ஆட்டோ, வேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் நேற்று மாலை திடீரென ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து அதன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏழு ஆட்டோக்கள், வேன், கார் என அனைத்து வாகனங்களுக்கும் தீ வேகமாக பரவியது.

ஆம்னி பஸ் தீ விபத்து தொடர்பான வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனால் அனைத்து வாகனங்களும் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தன. இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். கோயம்பேடு ஜெ.ஜெ.நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.பின்னர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பஸ், ஆட்டோ உட்பட 10 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றச்செயலில் ஈடுபட்டவரை கைது செய்தனர். பின்னர் அவருடன் மேற்கொண்ட விசாரணையில் புகைப்பிடித்துவிட்டு பேருந்துக்கு தீ வைத்ததும், அவர் பெயர் பழனி முத்து என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: கோயம்பேட்டில் திடீரென தீ பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. விண்ணை முட்டிய புகை - சென்னையில் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.