ETV Bharat / state

சாப்பாட்டுக்கு பணம் கேட்டது ஒரு குத்தமா? ஹோட்டல் ஓனரை ஷூவை கழட்டி அடிக்கச் சென்ற போலீஸ்! - police beat up hotel owner Issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2024, 10:46 PM IST

Police Beat Up Hotel Owner Issue: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிட்டதற்கு பணம் கேட்ட உரிமையாளரை, போலீசார் காலில் உள்ள ஷூவை கழட்டி அடிக்கச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

போலீசார் ஷூவை கழட்டி அடிக்கும் காட்சி
போலீசார் ஷூவை கழட்டி அடிக்கும் காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

தருமபுரி: தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் என தினந்தோறும் 2000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் காவலர்கள் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர்.

போலீஸ் ஷூவை கழட்டி அடிக்க முயலும் காட்சி (Video Credit - ETV Baharat Tamilnadu)

இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் காவலர் ஒருவர் தினமும் மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஹோட்டலில் உணவு சாப்பிடுவது வழக்கம். அவ்வாறு சாப்பிடும் உணவிற்கு கையில் உள்ள பணத்தை கொடுத்துவிட்டு மீதியை பின்பு தருகிறேன் என கோரிவிட்டு சென்று விடுவார் என கூறப்படுகிறது.

இதேபோன்று நேற்று சாப்பிட்ட உணவிற்கு பணம் கொடுக்காமல் பிறகு தருவதாக கூறி உள்ளார். அதேபோல் இன்று மாலையும் உணவு சாப்பிட்டுவிட்டு சென்றபோது கடை உரிமையாளர் வீரமணியின் மகன் முத்தமிழ் என்பவர் நேற்று சாப்பிட்ட உணவிற்கும் சேர்த்து பணம் கேட்டு உள்ளார். இதனால் கோபமடைந்த போலீசார், முத்தமிழை தகாத வார்த்தையில் பேசியுள்ளார். மேலும் பணத்தை தூக்கி வீசிவிட்டு கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி காலில் அணிந்திருந்த ஷூவை கழட்டி அடிக்கச் சென்ற சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது. இது குறித்து கடை உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசிய போது, "தினமும் காவலர் எங்களது ஹோட்டலில் உணவு சாப்பிட வருவது வழக்கம். இவர் உணவு சாப்பிட்டு விட்டு பாக்கி வைத்து விட்டு சென்று விடுவார்.

இந்நிலையில் நேற்றும், இன்றும் சாப்பிட்ட உணவிற்கு பணம் கேட்டதற்காக தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து, காலில் அணிந்திருந்த ஷூவை கழட்டி என்னை தாக்க வந்தார். இந்த சம்பவம் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக நாளை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்க உள்ளேன்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: "தேசிய நல்லாசிரியர் விருதுக்கு எனது மாணவர்களே காரணம்" - தெருவிளக்கு கோபிநாத் பெருமிதம்! - National Best Teachers Award 2024

தருமபுரி: தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் என தினந்தோறும் 2000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் காவலர்கள் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர்.

போலீஸ் ஷூவை கழட்டி அடிக்க முயலும் காட்சி (Video Credit - ETV Baharat Tamilnadu)

இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் காவலர் ஒருவர் தினமும் மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஹோட்டலில் உணவு சாப்பிடுவது வழக்கம். அவ்வாறு சாப்பிடும் உணவிற்கு கையில் உள்ள பணத்தை கொடுத்துவிட்டு மீதியை பின்பு தருகிறேன் என கோரிவிட்டு சென்று விடுவார் என கூறப்படுகிறது.

இதேபோன்று நேற்று சாப்பிட்ட உணவிற்கு பணம் கொடுக்காமல் பிறகு தருவதாக கூறி உள்ளார். அதேபோல் இன்று மாலையும் உணவு சாப்பிட்டுவிட்டு சென்றபோது கடை உரிமையாளர் வீரமணியின் மகன் முத்தமிழ் என்பவர் நேற்று சாப்பிட்ட உணவிற்கும் சேர்த்து பணம் கேட்டு உள்ளார். இதனால் கோபமடைந்த போலீசார், முத்தமிழை தகாத வார்த்தையில் பேசியுள்ளார். மேலும் பணத்தை தூக்கி வீசிவிட்டு கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி காலில் அணிந்திருந்த ஷூவை கழட்டி அடிக்கச் சென்ற சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது. இது குறித்து கடை உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசிய போது, "தினமும் காவலர் எங்களது ஹோட்டலில் உணவு சாப்பிட வருவது வழக்கம். இவர் உணவு சாப்பிட்டு விட்டு பாக்கி வைத்து விட்டு சென்று விடுவார்.

இந்நிலையில் நேற்றும், இன்றும் சாப்பிட்ட உணவிற்கு பணம் கேட்டதற்காக தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து, காலில் அணிந்திருந்த ஷூவை கழட்டி என்னை தாக்க வந்தார். இந்த சம்பவம் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக நாளை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்க உள்ளேன்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: "தேசிய நல்லாசிரியர் விருதுக்கு எனது மாணவர்களே காரணம்" - தெருவிளக்கு கோபிநாத் பெருமிதம்! - National Best Teachers Award 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.