ETV Bharat / state

கபடி பார்க்கச் சென்ற இளைஞர் கோயில் வளாகத்தில் சடலமாக கிடந்ததால் பரபரப்பு! - young man hanged body recovered

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 2:26 PM IST

Youth hanged body recovered: சாத்தான் குளம் அருகே கபடி பார்க்க சென்ற இளைஞர், கோயில் வளாகத்தில் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இறந்த சுந்தர்
இறந்த சுந்தர் (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: சாத்தான் குளம் அருகே உள்ள கடாச்சபுரம் சண்முகபுரத்தை சேர்ந்தவர் இசக்கி பாண்டி மகன் சுந்தர் (30). இவர் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள அவரது உறவினர் கடையில் வேலை பார்த்து வந்த நிலையில், கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

கடந்த சனிக்கிழமை கபடி போட்டியை பார்ப்பதற்காக அருகில் உள்ள பன்னம்பாறை கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் பன்னம்பாறை சுப்பராயபுரம் இடையே உள்ள சாஸ்தா கோயில் வளாகத்தில் அவர் தூக்கிட்டு இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற சாத்தான்குளம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சுந்தர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை அடித்து கொலை செய்திருக்கலாம் எனவும் தெரிவித்து, அவரது உறவினர்கள் சாத்தான்குளம் பழைய பஸ் நிலையம் காமராஜ் சிலை முன்பு இறந்த உடலை வாங்க மறுத்து சாலை மறியல் செய்ய போவதாக கூறினர். இதனை அறிந்த சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் யேசு ராஜசேகரன் எஸ்.ஐ. எட்வின் அருள்ராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

உடற்கூறு ஆய்வின் அறிக்கை தரப்பட்ட பின்னர் தற்கொலையா? அல்லது வேறு காரணமா என்பது தெரியவரும் என தெரிவித்தனர். இருப்பினும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து போலீசார் உறவினர்களிடம் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். கபடி பார்க்க சென்றவர் கோயில் வளாகத்தில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "ஏன் நடுரோட்டில் நிக்குது" திமுக நிர்வாகியின் கார் கண்ணாடியை உடைத்த கவுன்சிலரின் கணவர்.. நத்தம் அருகே நடந்தது என்ன? - DMK executive car window broken

தூத்துக்குடி: சாத்தான் குளம் அருகே உள்ள கடாச்சபுரம் சண்முகபுரத்தை சேர்ந்தவர் இசக்கி பாண்டி மகன் சுந்தர் (30). இவர் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள அவரது உறவினர் கடையில் வேலை பார்த்து வந்த நிலையில், கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

கடந்த சனிக்கிழமை கபடி போட்டியை பார்ப்பதற்காக அருகில் உள்ள பன்னம்பாறை கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் பன்னம்பாறை சுப்பராயபுரம் இடையே உள்ள சாஸ்தா கோயில் வளாகத்தில் அவர் தூக்கிட்டு இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற சாத்தான்குளம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சுந்தர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை அடித்து கொலை செய்திருக்கலாம் எனவும் தெரிவித்து, அவரது உறவினர்கள் சாத்தான்குளம் பழைய பஸ் நிலையம் காமராஜ் சிலை முன்பு இறந்த உடலை வாங்க மறுத்து சாலை மறியல் செய்ய போவதாக கூறினர். இதனை அறிந்த சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் யேசு ராஜசேகரன் எஸ்.ஐ. எட்வின் அருள்ராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

உடற்கூறு ஆய்வின் அறிக்கை தரப்பட்ட பின்னர் தற்கொலையா? அல்லது வேறு காரணமா என்பது தெரியவரும் என தெரிவித்தனர். இருப்பினும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து போலீசார் உறவினர்களிடம் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். கபடி பார்க்க சென்றவர் கோயில் வளாகத்தில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "ஏன் நடுரோட்டில் நிக்குது" திமுக நிர்வாகியின் கார் கண்ணாடியை உடைத்த கவுன்சிலரின் கணவர்.. நத்தம் அருகே நடந்தது என்ன? - DMK executive car window broken

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.