ETV Bharat / state

நகைக்கு பாலிஷ் போடுபவர்களே உஷார்.. பீகார் இளைஞர்கள் கும்பகோணத்தில் கைது! - Jewelry Polish Cheating

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 3:51 PM IST

Jewelry Polish Cheating: கும்பகோணத்தில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு பாலிஷ் போடுவதாக கூறி ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

Arrest
கைது செய்யப்பட்டவர் (Credits - ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்: கும்பகோணம் துக்கம்பாளையம் தெருவில் வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு பாலிஷ் போடுவதாகக் கூறி, வீட்டில் உள்ள பெண்களிடம் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைப் பெற்று, அதனை பாலிஷ் போடும்போது, அதனைக் கரைத்து ஏமாற்றி மோசடியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சிவசெந்தில்குமார் தலைமையிலான போலீசார், சந்தேகத்திற்கு இடமாக அப்பகுதியில் சுற்றி வந்த மூன்று வட மாநில இளைஞர்களைப் பிடித்து விசாரித்தனர்.

இந்த விசாரணையில், அவர்கள் பீகார் மாநிலத்திலிருந்து வந்துள்ளதாகவும், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு பாலிஷ் போடும்போது அதை கரைத்து மோசடி செய்து எடுத்துச் செல்வதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில், இவர்கள் ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியிலும், திருச்சி உப்பிலியாபுரம் மற்றும் மணப்பாறை பகுதியிலும் இதுபோன்று பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்தது தெரியவந்தது.

இந்நிலையில், இவர்கள் பயன்படுத்திய பாலிஷ் பவுடர்கள் மற்றும் இதர பொருட்களை பறிமுதல் செய்ததுடன், பிபின்குமார் (30) என்பவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கும், பிபின்குமாருக்கு உடந்தையாக இருந்த சிறுவர்கள் இருவரையும் இளஞ்சிறார் காப்பகத்திற்கும் அனுப்பி வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: கோவில்பட்டியில் ஆடுகள் திருட்டு.. கைதான இளைஞர்கள் சொன்ன பகீர் காரணம்.. வைரலாகும் சிசிடிவி!

தஞ்சாவூர்: கும்பகோணம் துக்கம்பாளையம் தெருவில் வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு பாலிஷ் போடுவதாகக் கூறி, வீட்டில் உள்ள பெண்களிடம் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைப் பெற்று, அதனை பாலிஷ் போடும்போது, அதனைக் கரைத்து ஏமாற்றி மோசடியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சிவசெந்தில்குமார் தலைமையிலான போலீசார், சந்தேகத்திற்கு இடமாக அப்பகுதியில் சுற்றி வந்த மூன்று வட மாநில இளைஞர்களைப் பிடித்து விசாரித்தனர்.

இந்த விசாரணையில், அவர்கள் பீகார் மாநிலத்திலிருந்து வந்துள்ளதாகவும், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு பாலிஷ் போடும்போது அதை கரைத்து மோசடி செய்து எடுத்துச் செல்வதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில், இவர்கள் ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியிலும், திருச்சி உப்பிலியாபுரம் மற்றும் மணப்பாறை பகுதியிலும் இதுபோன்று பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்தது தெரியவந்தது.

இந்நிலையில், இவர்கள் பயன்படுத்திய பாலிஷ் பவுடர்கள் மற்றும் இதர பொருட்களை பறிமுதல் செய்ததுடன், பிபின்குமார் (30) என்பவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கும், பிபின்குமாருக்கு உடந்தையாக இருந்த சிறுவர்கள் இருவரையும் இளஞ்சிறார் காப்பகத்திற்கும் அனுப்பி வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: கோவில்பட்டியில் ஆடுகள் திருட்டு.. கைதான இளைஞர்கள் சொன்ன பகீர் காரணம்.. வைரலாகும் சிசிடிவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.