ETV Bharat / state

"இன்னும் 2 வாரங்களில் பாஜக கூட்டணி தானாக அமையும்" - அண்ணாமலை சூசகம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2024, 1:48 PM IST

Annamalai K about Alliance: பாஜக, கூட்டணி பற்றி கவலைப்படவில்லை என்றும், இன்னும் 2 அல்லது 3 வாரத்தில் கூட்டணி தானாகவே அமைந்துவிடும் எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

annamalai
அண்ணாமலை
இன்னும் 2 அல்லது 3 வாரத்தில் கூட்டணி தானாகவே அமைந்துவிடும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்த நிகழ்ச்சி நேற்று (பிப்.7) டெல்லியில் நடந்தது. அதனையடுத்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் இருந்து விமானம் முலம் சென்னை வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “டெல்லி பயணம் என்பது வழக்கம்போல் நடப்பதுதான். வருகின்ற பிப்ரவரி 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தேசிய செயற்குழு நடக்கிறது. தமிழக பாஜக தலைவர்கள் கடந்த 6 மாதங்களாக செய்து வரும் பணிகள் குறித்து பேசப்பட்டது. தமிழ்நாட்டில் பெரிய கட்சிகளை பின்னுக்குத் தள்ளி, பாஜக 21 சதவீதம் வாக்குகளை வாங்குவதாக கணிப்புகள் வெளி வருகின்றன.

பாஜக முன்னேறி இருக்கிறது. கட்சித் தொண்டர்கள் தங்களுடைய வேலைகளை அமைதியாக செய்து வருகின்றனர். வெளியில் இருந்து பார்த்தால் தெரிவதில்லை. மக்கள் பாஜகவை நோக்கி திரும்ப ஆரம்பித்து விட்டனர். ஏனெனில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடிதான் மீண்டும் வெற்றி பெறப் போகிறார்.

தற்போது வரை சுமார் 189 தொகுதிகளை யாத்திரை கடந்து விட்டது. கூட்டணியைப் பொறுத்தவரை, வண்டியை குதிரைதான் இழுக்க வேண்டும். குதிரையை வண்டி இழுக்க முடியாது. இது பாஜகவை பலப்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம். கூட்டணி வண்டி மாதிரி. கூட்டணி கட்சிகளை பாஜக இழுக்கும் என நினைக்ககூடாது. பாஜக முன்பை விட வளர்ந்துள்ளது.

இன்னும் முழுமையாக 4 வாரங்கள் உள்ளது. மார்ச் மாதம்கூட தேர்தல் வரலாம். ஒவ்வொரு கட்சியும் கூட்டம் போட்டு தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவிக்கிறார்கள். கட்சியைப் பலப்படுத்த முழு மூச்சாக உயிரைத் தந்து இறங்கியுள்ளோம். கூட்டணி உருவாகி அமைந்துவிடும். கூட்டணி கட்சிகளும் தெளிவாக இருக்கின்றனர். வலிமையான நாடு வேண்டும். அற்புதமான தமிழ்நாடு வேண்டும்.

தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மீது 70 சதவீதம் அதிருப்தி இருக்கிறது என எல்லா கருத்து கணிப்புகளும் கூறுகிறது. இதன் வெளிப்பாடு நாடாளுமன்றத் தேர்தலில் தெரிய வரும். கூட்டணி பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. திமுக கூட்டணி இருந்து என்ன பிரயோஜனம்? தொகுதி பங்கீடு முடிந்து, வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்களா? கூட்டணியில் கட்சிகள் இருப்பதால் பிரச்னை முடிந்துவிட்டது என்பது அல்ல. பாஜக, கூட்டணி பற்றி கவலைப்படவில்லை. 2 அல்லது 3 வாரத்தில் கூட்டணி தானாக அமைந்து விடும்.

என் மண் என் மக்கள் யாத்திரையின்போது, சென்னையில் பாஜகவால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம். நீட்டை எதிர்த்து திமுக பேரணி சென்றது. தலைவர்கள் பிறந்தநாளுக்காக ஊர்வலமாகச் செல்லும்போது போக்குவரத்து பாதிப்பை உருவாக்கும். பாஜக கட்சிக்கு ஒரு நியாயம், மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயம் என இருக்கக் கூடாது.

200-வது தொகுதிக்கு ஜே.பி.நட்டா வருகிறார். 234-வது தொகுதிக்கு பிரதமர் வர இருக்கிறார். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். சென்னையில் யாத்திரை செல்வது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். பிற கட்சிகள் குறித்து பேச விரும்பவில்லை. பாஜக வளர வேண்டிய நேரம். அடுத்தவர் வீட்டில் அமர்ந்து கொண்டு டீ, காபி போடச் சொல்ல உரிமை இல்லை. விருந்தினராக போகலாம். ஆனால், அடுத்தவர் வீட்டிற்கு உரிமையாளராகப் போக முடியாது.

மக்களிடம் சென்று கட்சியை வளர்க்க பாடுபடுகிறோம். மக்களிடத்தில் வரக்கூடிய கருத்து கணிப்புகளை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. வரலாறு காணாத வகையில், 2024ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக எம்.பிக்களைப் பெறும். அடுத்த கட்சி பற்றி குறை சொல்வதில்லை. முதலமைச்சருக்கு இந்தி தெரியுமா? இந்தி தெரியாது எனக் கூறுபவர் ஸ்பெயினுக்கு போய் இந்தி கற்றுக் கொண்டாரா? பிரதமர் லோக் சபா, ராஜ்ய சபா ஆகியவற்றில் இந்தியில் பேசியதை முதலமைச்சர் கேட்டு வந்து பேசி உள்ளார்.

பாஜக ஆட்சிக்கும், திமுக ஆட்சிக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. பிரதமர் மோடி கண்ணோட்டம் குறித்து பேசியுள்ளார். ஸ்பெயினுக்கு ரூ.3,440 கோடி முதலீடு கொண்டு வர முதலமைச்சர் செல்ல வேண்டுமா? உத்தரப் பிரதேசத்தில் இருந்து 5 அதிகாரிகள் தமிழகம் வந்து, ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டைக் கொண்டு சென்றார்கள். துபாய் சென்று ரூ.6 ஆயிரம் கோடி வந்ததாகக் கூறி 2 ஆண்டுகளில் ஒரு ரூபாய் வந்ததா?

இந்தியாவில் பொருளாதாரம் உயர்ந்து வருவதால், ஏற்கனவே முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் விரிவாக்கம் செய்துள்ளன. தமிழக மக்கள் பாஜகவிற்கு மிகப்பெரிய வெற்றியைத் தர உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணிக்கான கதவுகள், ஜன்னல்கள் திறந்து உள்ளது. மோடியை பிரதமராக ஏற்றுக் கொள்ள வேண்டும். இது பற்றி டெல்லியில் முற்றுப்புள்ளி வைத்து விட்டோம்.

ஒரு மனிதனுக்கு கெட்ட காலம் ஆரம்பிக்கும்போது, இது போன்ற பேச்சுகள் வரும். பாராளுமன்ற அவையில் அமைச்சரை மோசமான வார்த்தையில் பேசுவது. பல இடத்தில் திமுக மூத்த தலைவர்களின் சாதிய வன்மம் வெளிவருகிறது. அரசியல், சாமானிய மக்களை நோக்கிச் செல்வதை டி.ஆர்.பாலு புரிந்து கொள்ள வேண்டும். டி.ஆர்.பாலுவுக்கு இன்னும் 2 டேப் உள்ளது. பேசிவிட்டு தப்பிச் செல்ல முடியாது. டி.ஆர்.பாலு பேசியது ஆணவத்தின் உச்சம். வயது வேறு, ஆற்றல், திறமை வேறு.

டி.ஆர்.பாலு வயதினால் பெரிய அரசியல்வாதி என நினைத்தால் தவறு. இந்தியாவின் தேசியப் பறவையாக மயிலை வைத்து உள்ளோம். காக்கா நிறைய இருக்கிறது என்பதால் அதை வைக்கவில்லை. டி.ஆர்.பாலு எதை வேண்டுமானாலும் பேசினால் அண்ணாமலையோ, பாஜகவோ கைகட்டி கேட்க வேண்டும் என்றால், அவர் மிராசுதாரர் அல்ல. அவரிடம் வேலை பார்க்கும் கொத்தடிமை கூட்டம் அல்ல. வருகின்ற 2ஜி பைல் 9 டேப் முடிந்த பின், டி.ஆர்.பாலு அரசியலில் இருக்கிறாரா என்பதை பார்ப்போம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.50 லட்சம் மோசடி: கவுண்டம்பாளையம் விஏஒ மீது புகார்!

இன்னும் 2 அல்லது 3 வாரத்தில் கூட்டணி தானாகவே அமைந்துவிடும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்த நிகழ்ச்சி நேற்று (பிப்.7) டெல்லியில் நடந்தது. அதனையடுத்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் இருந்து விமானம் முலம் சென்னை வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “டெல்லி பயணம் என்பது வழக்கம்போல் நடப்பதுதான். வருகின்ற பிப்ரவரி 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தேசிய செயற்குழு நடக்கிறது. தமிழக பாஜக தலைவர்கள் கடந்த 6 மாதங்களாக செய்து வரும் பணிகள் குறித்து பேசப்பட்டது. தமிழ்நாட்டில் பெரிய கட்சிகளை பின்னுக்குத் தள்ளி, பாஜக 21 சதவீதம் வாக்குகளை வாங்குவதாக கணிப்புகள் வெளி வருகின்றன.

பாஜக முன்னேறி இருக்கிறது. கட்சித் தொண்டர்கள் தங்களுடைய வேலைகளை அமைதியாக செய்து வருகின்றனர். வெளியில் இருந்து பார்த்தால் தெரிவதில்லை. மக்கள் பாஜகவை நோக்கி திரும்ப ஆரம்பித்து விட்டனர். ஏனெனில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடிதான் மீண்டும் வெற்றி பெறப் போகிறார்.

தற்போது வரை சுமார் 189 தொகுதிகளை யாத்திரை கடந்து விட்டது. கூட்டணியைப் பொறுத்தவரை, வண்டியை குதிரைதான் இழுக்க வேண்டும். குதிரையை வண்டி இழுக்க முடியாது. இது பாஜகவை பலப்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம். கூட்டணி வண்டி மாதிரி. கூட்டணி கட்சிகளை பாஜக இழுக்கும் என நினைக்ககூடாது. பாஜக முன்பை விட வளர்ந்துள்ளது.

இன்னும் முழுமையாக 4 வாரங்கள் உள்ளது. மார்ச் மாதம்கூட தேர்தல் வரலாம். ஒவ்வொரு கட்சியும் கூட்டம் போட்டு தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவிக்கிறார்கள். கட்சியைப் பலப்படுத்த முழு மூச்சாக உயிரைத் தந்து இறங்கியுள்ளோம். கூட்டணி உருவாகி அமைந்துவிடும். கூட்டணி கட்சிகளும் தெளிவாக இருக்கின்றனர். வலிமையான நாடு வேண்டும். அற்புதமான தமிழ்நாடு வேண்டும்.

தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மீது 70 சதவீதம் அதிருப்தி இருக்கிறது என எல்லா கருத்து கணிப்புகளும் கூறுகிறது. இதன் வெளிப்பாடு நாடாளுமன்றத் தேர்தலில் தெரிய வரும். கூட்டணி பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. திமுக கூட்டணி இருந்து என்ன பிரயோஜனம்? தொகுதி பங்கீடு முடிந்து, வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்களா? கூட்டணியில் கட்சிகள் இருப்பதால் பிரச்னை முடிந்துவிட்டது என்பது அல்ல. பாஜக, கூட்டணி பற்றி கவலைப்படவில்லை. 2 அல்லது 3 வாரத்தில் கூட்டணி தானாக அமைந்து விடும்.

என் மண் என் மக்கள் யாத்திரையின்போது, சென்னையில் பாஜகவால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம். நீட்டை எதிர்த்து திமுக பேரணி சென்றது. தலைவர்கள் பிறந்தநாளுக்காக ஊர்வலமாகச் செல்லும்போது போக்குவரத்து பாதிப்பை உருவாக்கும். பாஜக கட்சிக்கு ஒரு நியாயம், மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயம் என இருக்கக் கூடாது.

200-வது தொகுதிக்கு ஜே.பி.நட்டா வருகிறார். 234-வது தொகுதிக்கு பிரதமர் வர இருக்கிறார். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். சென்னையில் யாத்திரை செல்வது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். பிற கட்சிகள் குறித்து பேச விரும்பவில்லை. பாஜக வளர வேண்டிய நேரம். அடுத்தவர் வீட்டில் அமர்ந்து கொண்டு டீ, காபி போடச் சொல்ல உரிமை இல்லை. விருந்தினராக போகலாம். ஆனால், அடுத்தவர் வீட்டிற்கு உரிமையாளராகப் போக முடியாது.

மக்களிடம் சென்று கட்சியை வளர்க்க பாடுபடுகிறோம். மக்களிடத்தில் வரக்கூடிய கருத்து கணிப்புகளை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. வரலாறு காணாத வகையில், 2024ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக எம்.பிக்களைப் பெறும். அடுத்த கட்சி பற்றி குறை சொல்வதில்லை. முதலமைச்சருக்கு இந்தி தெரியுமா? இந்தி தெரியாது எனக் கூறுபவர் ஸ்பெயினுக்கு போய் இந்தி கற்றுக் கொண்டாரா? பிரதமர் லோக் சபா, ராஜ்ய சபா ஆகியவற்றில் இந்தியில் பேசியதை முதலமைச்சர் கேட்டு வந்து பேசி உள்ளார்.

பாஜக ஆட்சிக்கும், திமுக ஆட்சிக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. பிரதமர் மோடி கண்ணோட்டம் குறித்து பேசியுள்ளார். ஸ்பெயினுக்கு ரூ.3,440 கோடி முதலீடு கொண்டு வர முதலமைச்சர் செல்ல வேண்டுமா? உத்தரப் பிரதேசத்தில் இருந்து 5 அதிகாரிகள் தமிழகம் வந்து, ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டைக் கொண்டு சென்றார்கள். துபாய் சென்று ரூ.6 ஆயிரம் கோடி வந்ததாகக் கூறி 2 ஆண்டுகளில் ஒரு ரூபாய் வந்ததா?

இந்தியாவில் பொருளாதாரம் உயர்ந்து வருவதால், ஏற்கனவே முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் விரிவாக்கம் செய்துள்ளன. தமிழக மக்கள் பாஜகவிற்கு மிகப்பெரிய வெற்றியைத் தர உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணிக்கான கதவுகள், ஜன்னல்கள் திறந்து உள்ளது. மோடியை பிரதமராக ஏற்றுக் கொள்ள வேண்டும். இது பற்றி டெல்லியில் முற்றுப்புள்ளி வைத்து விட்டோம்.

ஒரு மனிதனுக்கு கெட்ட காலம் ஆரம்பிக்கும்போது, இது போன்ற பேச்சுகள் வரும். பாராளுமன்ற அவையில் அமைச்சரை மோசமான வார்த்தையில் பேசுவது. பல இடத்தில் திமுக மூத்த தலைவர்களின் சாதிய வன்மம் வெளிவருகிறது. அரசியல், சாமானிய மக்களை நோக்கிச் செல்வதை டி.ஆர்.பாலு புரிந்து கொள்ள வேண்டும். டி.ஆர்.பாலுவுக்கு இன்னும் 2 டேப் உள்ளது. பேசிவிட்டு தப்பிச் செல்ல முடியாது. டி.ஆர்.பாலு பேசியது ஆணவத்தின் உச்சம். வயது வேறு, ஆற்றல், திறமை வேறு.

டி.ஆர்.பாலு வயதினால் பெரிய அரசியல்வாதி என நினைத்தால் தவறு. இந்தியாவின் தேசியப் பறவையாக மயிலை வைத்து உள்ளோம். காக்கா நிறைய இருக்கிறது என்பதால் அதை வைக்கவில்லை. டி.ஆர்.பாலு எதை வேண்டுமானாலும் பேசினால் அண்ணாமலையோ, பாஜகவோ கைகட்டி கேட்க வேண்டும் என்றால், அவர் மிராசுதாரர் அல்ல. அவரிடம் வேலை பார்க்கும் கொத்தடிமை கூட்டம் அல்ல. வருகின்ற 2ஜி பைல் 9 டேப் முடிந்த பின், டி.ஆர்.பாலு அரசியலில் இருக்கிறாரா என்பதை பார்ப்போம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.50 லட்சம் மோசடி: கவுண்டம்பாளையம் விஏஒ மீது புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.