ETV Bharat / state

ஈஷா மின் தகன மேடை விவகாரம்: ஈஷா ஆதரவாளர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு! - Isha Yoga Crematorium Issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 19, 2024, 7:03 AM IST

Isha Yoga Crematorium Issue: ஈஷா அறக்கட்டளை மின் தகன மேடை விவகாரத்தில் உண்மை கண்டறியும் குழுவைத் தாக்கிய, ஈஷா யோகா ஆதரவாளர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள ஆலாந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உண்மை கண்டறியும் குழுவுக்கும் ஈஷா ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட தகராறு
உண்மை கண்டறியும் குழுவுக்கும் ஈஷா ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட தகராறு (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், ஆலாந்துறை இக்கரை போளுவாம்பட்டி அருகே உள்ள முட்டத்துவயல் கிராமத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் கால பைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதே பகுதியைச் சேர்ந்த எஸ்.என்.சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், குடியிருப்பு மற்றும் நீர்நிலைகள் நிறைந்துள்ள இக்கரை போளுவாம்பட்டி முட்டத்துவயல் கிராமத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள மின் தகன மேடையை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரி இருந்தார்.

இதனையடுத்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், மனுதாரர் எஸ்.என்.சுப்பிரமணியன் மனுவில் குறிப்பிட்டது போல விதிமீறல் நடந்துள்ளதா எனவும், பழங்குடி கிராம மக்களுக்குப் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து கண்டறிய சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்பினரைத் தடுத்து நிறுத்தி, ஈஷா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

மேலும், முற்போக்கு அமைப்பினர் சென்ற வேன் கண்ணாடியை உடைத்தனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அளித்த புகாரின் அடிப்படையில், ஈஷா யோகா மைய ஆட்களுக்கு எதிராக பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், கொலை மிரட்டல், முறையற்று தடுத்தல் என IPC Sec 341, 506(1), 3 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் போல சம்பாதித்த பணத்தை மக்களுக்கு கொடுக்க நினைக்கிறார் விஜய் - செல்லூர் ராஜூ பேச்சு! - Former Minister Sellur Raju

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், ஆலாந்துறை இக்கரை போளுவாம்பட்டி அருகே உள்ள முட்டத்துவயல் கிராமத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் கால பைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதே பகுதியைச் சேர்ந்த எஸ்.என்.சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், குடியிருப்பு மற்றும் நீர்நிலைகள் நிறைந்துள்ள இக்கரை போளுவாம்பட்டி முட்டத்துவயல் கிராமத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள மின் தகன மேடையை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரி இருந்தார்.

இதனையடுத்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், மனுதாரர் எஸ்.என்.சுப்பிரமணியன் மனுவில் குறிப்பிட்டது போல விதிமீறல் நடந்துள்ளதா எனவும், பழங்குடி கிராம மக்களுக்குப் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து கண்டறிய சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்பினரைத் தடுத்து நிறுத்தி, ஈஷா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

மேலும், முற்போக்கு அமைப்பினர் சென்ற வேன் கண்ணாடியை உடைத்தனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அளித்த புகாரின் அடிப்படையில், ஈஷா யோகா மைய ஆட்களுக்கு எதிராக பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், கொலை மிரட்டல், முறையற்று தடுத்தல் என IPC Sec 341, 506(1), 3 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் போல சம்பாதித்த பணத்தை மக்களுக்கு கொடுக்க நினைக்கிறார் விஜய் - செல்லூர் ராஜூ பேச்சு! - Former Minister Sellur Raju

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.