ETV Bharat / state

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 17 பேர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்த நிலையில், அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

ராமேஸ்வரம் மீனவர்கள்
ராமேஸ்வரம் மீனவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து, கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி, 17 மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அதிகாலையில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் வந்து, ராமேஸ்வரம் மீனவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி, 17 மீனவர்களையும் கைது செய்தனர்.

அதோடு படகுகள், மீன்பிடி வலைகளையும் பறிமுதல் செய்து, மீனவர்களை இலங்கைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 17 மீனவர்களையும் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதங்கள் எழுதி, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: "ஒரு கல்லூரி முதல்வரையே தனியாக வந்து பாருங்கள் எனக் கூறுவது அநாகரிகம்"- முன் ஜாமீன் மறுப்பு!

இதை அடுத்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இலங்கை நீதிமன்றம், ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரையும் விடுதலை செய்து, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அங்கிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்த மீனவர்களை, தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் அவர்களது சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சென்னை: தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து, கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி, 17 மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அதிகாலையில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் வந்து, ராமேஸ்வரம் மீனவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி, 17 மீனவர்களையும் கைது செய்தனர்.

அதோடு படகுகள், மீன்பிடி வலைகளையும் பறிமுதல் செய்து, மீனவர்களை இலங்கைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 17 மீனவர்களையும் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதங்கள் எழுதி, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: "ஒரு கல்லூரி முதல்வரையே தனியாக வந்து பாருங்கள் எனக் கூறுவது அநாகரிகம்"- முன் ஜாமீன் மறுப்பு!

இதை அடுத்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இலங்கை நீதிமன்றம், ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரையும் விடுதலை செய்து, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அங்கிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்த மீனவர்களை, தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் அவர்களது சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.