ETV Bharat / state

பழனியில் நாளை கடையடைப்பு போராட்டம்.. காரணம் என்ன? - Protest in Palani

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 2:51 PM IST

Protest in Palani: பழனி தேவஸ்தானத்தைக் கண்டித்து பழனி மலை அடிவாரத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனியில் கடையடைப்பு போராட்டம்
பழனியில் கடையடைப்பு போராட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த பழனி நகர்மன்றம் வணிகர்களுக்கு அழைப்பு விடுத்தது. மலை அடிவாரத்தில் தேவஸ்தான நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் வணிகர்களுக்கு இடையூறு செய்வதாகவும், மேலும், கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்கள் செல்லாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதனால் பல ஆண்டுகளாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தற்போது பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்களும், வணிகர்களும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மேலும், மலை அடிவாரத்தில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் சாலைகளை தேவஸ்தான நிர்வாகம் நீதிமன்றம் மூலம் பராமரிப்பிற்கு கேட்டு வருகிறது.

இந்த நிலையில், தேவஸ்தான நிர்வாகத்தைக் கண்டிக்கும் வகையில், பழனி நகர்மன்ற உறுப்பினர்கள் நாளை கடையடைப்பு போராட்டத்திற்கு வணிகர்களிடம் அழைப்பு விடுத்தனர். கடையடைப்பு போராட்டத்திற்கு வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் உள்ளூர் வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: பழனிமலை அடிவாரத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு குடியிருப்புகள், கடைகள் அகற்றம்! - Demolished

அதன்படி, நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பழனி நகரில் உள்ள அனைத்து கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், ஆட்டோகள் அனைத்தையும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில், நகர்மன்ற உறுப்பினர்கள் வீதி வீதியாகச் சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து இதற்காக துண்டுப் பிரசுரம் வழங்கினர். ஆன்மீக சுற்றுலாத்தலமான பழனியில் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மத்திய அரசின் இலவச வீடு திட்டத்தில் மோசடி.. வங்கியில் பணம் எடுக்க சென்ற பெண் அதிர்ச்சி.. ஆம்பூரில் நடந்தது என்ன? - PM Awas Yojana house scam

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த பழனி நகர்மன்றம் வணிகர்களுக்கு அழைப்பு விடுத்தது. மலை அடிவாரத்தில் தேவஸ்தான நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் வணிகர்களுக்கு இடையூறு செய்வதாகவும், மேலும், கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்கள் செல்லாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதனால் பல ஆண்டுகளாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தற்போது பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்களும், வணிகர்களும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மேலும், மலை அடிவாரத்தில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் சாலைகளை தேவஸ்தான நிர்வாகம் நீதிமன்றம் மூலம் பராமரிப்பிற்கு கேட்டு வருகிறது.

இந்த நிலையில், தேவஸ்தான நிர்வாகத்தைக் கண்டிக்கும் வகையில், பழனி நகர்மன்ற உறுப்பினர்கள் நாளை கடையடைப்பு போராட்டத்திற்கு வணிகர்களிடம் அழைப்பு விடுத்தனர். கடையடைப்பு போராட்டத்திற்கு வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் உள்ளூர் வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: பழனிமலை அடிவாரத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு குடியிருப்புகள், கடைகள் அகற்றம்! - Demolished

அதன்படி, நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பழனி நகரில் உள்ள அனைத்து கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், ஆட்டோகள் அனைத்தையும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில், நகர்மன்ற உறுப்பினர்கள் வீதி வீதியாகச் சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து இதற்காக துண்டுப் பிரசுரம் வழங்கினர். ஆன்மீக சுற்றுலாத்தலமான பழனியில் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மத்திய அரசின் இலவச வீடு திட்டத்தில் மோசடி.. வங்கியில் பணம் எடுக்க சென்ற பெண் அதிர்ச்சி.. ஆம்பூரில் நடந்தது என்ன? - PM Awas Yojana house scam

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.