ETV Bharat / state

குடும்பத்துடன் சேர்த்து வைத்த கரோனா.. 15 ஆண்டுகளுக்குப் பின் கர்நாடக நபர் திருப்பத்தூரில் கிடைத்தது எப்படி? - Missing man Handover

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 10:05 PM IST

Missing man found: 15 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன கர்நாடகாவைச் சேர்ந்த நபர் அவரது குடும்பத்தாரிடம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Family
குடும்பத்துடன் ஒப்படைக்கப்பட்ட நபர் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பத்தூர்: கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டம், கந்தகல் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்முகமது (46) என்பவர், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காணவில்லை என அம்மாவட்ட காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், ராஜ்முகமது கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 6 அன்று கரோனா ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில், வாலாஜா அருகில் சுற்றித்திரிந்த போது, அவரை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, ராஜ் முகமது மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. பின்னர், உடனடியாக அவரை மருத்துவர்கள் திருப்பத்தூரில் உள்ள உதவும் உள்ளங்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சைகாக சேர்த்துள்ளனர்.

பின்னர், அங்கு ராஜ் முகமதுவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் சற்று மனநலம் தேறிய நிலையில், அவரிடம் அவரது சொந்த ஊர் குறித்து மனநல காப்பாளர்கள் விசாரித்துள்ளனர். அப்போது, அவர் கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம், கந்தகல் கிராமம் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அப்பகுதியில் காணாமல் போனவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அப்பகுதி வாக்காளர் ஆவணங்களில் உள்ள பெயர்களை சரிபார்த்ததில் ராஜ் முகமதுவின் முகவரி கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, ராஜ் முகமதுவின் குடும்பத்தினருக்கு கந்தகல் வாக்குச்சாவடி மைய அலுவலர் பிலகி என்பவர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ராஜ் முகமதுவின் குடும்பத்தினர் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வந்து, ராஜ்முகமது குறித்து உரிய ஆவணங்களை சமர்பித்த பின்னர், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் 15 வருடங்களாக தேடப்பட்டு வந்த ராஜ் முகமதுவை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.

இதையும் படிங்க: “கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு உரிமை உண்டு”

திருப்பத்தூர்: கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டம், கந்தகல் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்முகமது (46) என்பவர், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காணவில்லை என அம்மாவட்ட காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், ராஜ்முகமது கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 6 அன்று கரோனா ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில், வாலாஜா அருகில் சுற்றித்திரிந்த போது, அவரை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, ராஜ் முகமது மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. பின்னர், உடனடியாக அவரை மருத்துவர்கள் திருப்பத்தூரில் உள்ள உதவும் உள்ளங்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சைகாக சேர்த்துள்ளனர்.

பின்னர், அங்கு ராஜ் முகமதுவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் சற்று மனநலம் தேறிய நிலையில், அவரிடம் அவரது சொந்த ஊர் குறித்து மனநல காப்பாளர்கள் விசாரித்துள்ளனர். அப்போது, அவர் கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம், கந்தகல் கிராமம் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அப்பகுதியில் காணாமல் போனவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அப்பகுதி வாக்காளர் ஆவணங்களில் உள்ள பெயர்களை சரிபார்த்ததில் ராஜ் முகமதுவின் முகவரி கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, ராஜ் முகமதுவின் குடும்பத்தினருக்கு கந்தகல் வாக்குச்சாவடி மைய அலுவலர் பிலகி என்பவர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ராஜ் முகமதுவின் குடும்பத்தினர் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வந்து, ராஜ்முகமது குறித்து உரிய ஆவணங்களை சமர்பித்த பின்னர், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் 15 வருடங்களாக தேடப்பட்டு வந்த ராஜ் முகமதுவை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.

இதையும் படிங்க: “கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு உரிமை உண்டு”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.