ETV Bharat / state

சாலையில் தறிகெட்டு ஓடிய கார்.. விபத்துக்கு பிறகு தப்ப முயன்றவர்களை பிடித்த மக்கள்!

சென்னை எழும்பூர் அருகே சொகுசு கார் ஒன்று, ஒரு கார், இரண்டு ஆட்டோ, இரண்டு இருசக்கர வாகனங்கள் என அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

விபத்தை ஏற்படுத்திய சொகுசு கார்
விபத்தை ஏற்படுத்திய சொகுசு கார் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து எழும்பூர் நோக்கி செல்லும் சாலையில் வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று நிலை தடுமாறி முன்னால் சென்ற ஒரு கார், இரண்டு ஆட்டோ, இரண்டு இருசக்கர வாகனங்கள் என அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பயணிகள் இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அருகில் இருந்த ஆட்டோ மூலம் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தின் சிசிடிவி காட்சி (Credit - ETV Bharat Tamil Nadu)

மேலும், இருவேறு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரும் மற்றும் சாலையில் நின்றிருந்த ஒருவரும் என மூன்று பேரும் ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே இந்த விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரை ஓட்டி வந்தவர்கள் ஒய்.எம்.சி.ஏ கல்லூரி அருகே உள்ள சாலையிலேயே காரை நிறுத்திவிட்டு காரை வேகமாக ஓட்டி வந்த தந்தையும் மகனும் தப்பி சென்றதாகவும், அந்த காரின் பின்னால் தொடர்ந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இருவரையும் விரட்டிச் சென்று பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.

விபத்தில் சிக்கிய கார் மற்றும் ஆட்டோ
விபத்தில் சிக்கிய கார் மற்றும் ஆட்டோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இதுமட்டும் அல்லாது, காவல் ஆணையர் அலுவலகம் அருகே காரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட இருவரையும் கைது செய்து வேப்பேரி காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்கள் யார் என்பது குறித்தும், மேலும் விபத்துகளை ஏற்படுத்திய காரில் உகாண்டா நாட்டின் தூதரகத்தின் சின்னம் பொறித்த போஸ்டர் உள்ளதால் விபத்து ஏற்படுத்தியவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனம்
விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனம் (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: திருப்பூர் அருகே நகைக்காக வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை!

இதற்கிடையே பிடிபட்ட தந்தை மற்றும் மகனிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தங்களது காரை இயக்கியது தங்களுடைய ஓட்டுநர் என்றும், விபத்தை ஏற்படுத்திவிட்டு அவர் தப்பித்துவிட்டதாகவும் கூறியதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போலீசார் விசாரணையில் தந்தை மற்றும் மகன் கூறியது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சென்னை: சென்னை - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து எழும்பூர் நோக்கி செல்லும் சாலையில் வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று நிலை தடுமாறி முன்னால் சென்ற ஒரு கார், இரண்டு ஆட்டோ, இரண்டு இருசக்கர வாகனங்கள் என அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பயணிகள் இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அருகில் இருந்த ஆட்டோ மூலம் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தின் சிசிடிவி காட்சி (Credit - ETV Bharat Tamil Nadu)

மேலும், இருவேறு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரும் மற்றும் சாலையில் நின்றிருந்த ஒருவரும் என மூன்று பேரும் ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே இந்த விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரை ஓட்டி வந்தவர்கள் ஒய்.எம்.சி.ஏ கல்லூரி அருகே உள்ள சாலையிலேயே காரை நிறுத்திவிட்டு காரை வேகமாக ஓட்டி வந்த தந்தையும் மகனும் தப்பி சென்றதாகவும், அந்த காரின் பின்னால் தொடர்ந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இருவரையும் விரட்டிச் சென்று பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.

விபத்தில் சிக்கிய கார் மற்றும் ஆட்டோ
விபத்தில் சிக்கிய கார் மற்றும் ஆட்டோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இதுமட்டும் அல்லாது, காவல் ஆணையர் அலுவலகம் அருகே காரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட இருவரையும் கைது செய்து வேப்பேரி காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்கள் யார் என்பது குறித்தும், மேலும் விபத்துகளை ஏற்படுத்திய காரில் உகாண்டா நாட்டின் தூதரகத்தின் சின்னம் பொறித்த போஸ்டர் உள்ளதால் விபத்து ஏற்படுத்தியவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனம்
விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனம் (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: திருப்பூர் அருகே நகைக்காக வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை!

இதற்கிடையே பிடிபட்ட தந்தை மற்றும் மகனிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தங்களது காரை இயக்கியது தங்களுடைய ஓட்டுநர் என்றும், விபத்தை ஏற்படுத்திவிட்டு அவர் தப்பித்துவிட்டதாகவும் கூறியதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போலீசார் விசாரணையில் தந்தை மற்றும் மகன் கூறியது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.