ETV Bharat / state

மதுரவாயல் பறக்கும் பாலம் தடுப்பு சுவரால் விபரீதம்: கணவன், மனைவி உடல் நசுங்கி பலி! - Maduravoyal Accident

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 26, 2024, 7:31 AM IST

Maduravoyal Accident: மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதி மீது கனரக வாகனம் ஏறி ஏற்பட்ட விபத்தில், இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழப்பு தொடர்பான கோப்பு படம்
உயிரிழப்பு தொடர்பான கோப்பு படம் (credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: விருதுநகர் மாவட்டம் சேவல்பட்டியை சேர்ந்த பாண்டியன் (வயது 29) சென்னையில் கேமரா மேன் ஆக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (24). இந்த தம்பதி இரு சக்கர வாகனத்தில் நேற்று மதுரவாயலில் இருந்து திருவேற்காடு நோக்கி சென்று கொண்டிருந்த போது, சாலையில் வந்த கனரக கண்டெய்னர் வாகனத்திற்கும், மதுரவாயல் பறக்கும் பாலம் பணிக்காக சாலையின் நடுவில் இருந்த தடுப்பிற்கும் இடையே சிக்கி கீழே விழுந்துள்ளனர்.

இதையடுத்து கனரக வாகனத்தின் பின் சக்கரங்கள் இருவரின் மீதும் ஏறி இறங்கியது. இந்த கொடூர விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், கனரக வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் ராகுல் (30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: விருதுநகர் மாவட்டம் சேவல்பட்டியை சேர்ந்த பாண்டியன் (வயது 29) சென்னையில் கேமரா மேன் ஆக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (24). இந்த தம்பதி இரு சக்கர வாகனத்தில் நேற்று மதுரவாயலில் இருந்து திருவேற்காடு நோக்கி சென்று கொண்டிருந்த போது, சாலையில் வந்த கனரக கண்டெய்னர் வாகனத்திற்கும், மதுரவாயல் பறக்கும் பாலம் பணிக்காக சாலையின் நடுவில் இருந்த தடுப்பிற்கும் இடையே சிக்கி கீழே விழுந்துள்ளனர்.

இதையடுத்து கனரக வாகனத்தின் பின் சக்கரங்கள் இருவரின் மீதும் ஏறி இறங்கியது. இந்த கொடூர விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், கனரக வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் ராகுல் (30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை அறியும் கும்பல்.. பெரம்பலூரில் சுற்றிவளைத்த அதிகாரிகள்! - illegal gender reveal

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.