ETV Bharat / state

பொதுமக்களை அச்சுறுத்திய வளர்ப்பு நாய்.. உரிமையாளருக்கு மாநகராட்சி 50 ஆயிரம் அபராதம்! - Pet dog threatened people

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 7, 2024, 10:55 PM IST

German Shepherd dog atrocity in Tambaram: தாம்பரம் அருகே ஜெர்மன் ஷெப்பர்ட் இன நாய் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்பட்டதை அடுத்து, நாய் உரிமையாளருக்கு தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

கட்டுப்பாடு இன்றி திரிந்த வளர்ப்பு நாய்
கட்டுப்பாடு இன்றி திரிந்த வளர்ப்பு நாய் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் பீமேஸ்வரன் கோவில் தெரு மற்றும் திருவேங்கடம் நகர் தெருவை இணைக்க கூடிய பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் திவ்யா என்கின்ற பெண், தனது வீட்டில் விலை உயர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட் (German Shepherd) இன வெளிநாட்டு நாய் வளர்த்து வருகிறார்.

கட்டுப்பாடு இன்றி திரிந்த வளர்ப்பு நாய் (Credits - ETV Bharat Tamil Nadu)

அந்த வளர்ப்பு நாயை முறையாக நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்லாமல் அப்படியே உலாவ விட்டு விடுவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து திவ்யாவின் வீட்டின் கதவு திறந்து வைக்கப்படுவதால் அவர் வளர்க்கும் நாய் தெருவுக்கு வந்து அப்பகுதி மக்களை கடிக்க பாய்வதாகவும், துரத்தி சென்று கடிக்க முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாம்பரம் மாநகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களை கடிக்க வந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து நாயை வளர்க்கும் திவ்யாவிடம் அப்பகுதி மக்கள் கேட்ட போது உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள், நாய் இப்படித்தான் திரியும் என அடாவடித்தனமாக கூறியதாகவும் அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், ஆக்ரோஷமாக திரியும் இந்த நாய் சாலையில் திரியும் மாடுகளையும் நாய்களையும் கடிக்க முயற்சிப்பதாகவும், இந்த நாயால் குழந்தைகளை வெளியே விட அச்சமாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, அப்பகுதியில் உள்ள ஒரு மழலையர் பள்ளிக்கு குழந்தைகளை விட வரும் பெற்றோர்கள், அந்த நாயால் எந்த ஒரு ஆபத்தும் ஏற்பட்டு விட கூடாது என சாலையை சுற்றி அழைத்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

வீட்டில் வளர்ப்பு நாய் வைத்துள்ளவர்கள் முறையான பராமரிப்பு செய்து, நாயின் வாய்க்கு MOUTH Guard போட வேண்டும் என்றும், சாலையில் சுற்றி திரியும் போது நாயை சங்கிலியால் கட்டி நடைப்பயிற்சிக்கு கூட்டி செல்ல வேண்டும் என்றெல்லாம் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்டுப்பாடுகள் எதையும் பின்பற்றாமல் நாய் வளர்க்கும் நபர் மீது தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். மேலும், திவ்யா என்பவர் வளர்க்கும் நாய் மக்களை துரத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சி கால்நடை மருத்துவர், சுகாதாரத்துறை அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கட்டுப்பாடின்றி நாயை வளர்த்து வந்த திவ்யாவிடம் விசாரணை நடத்தி, நாயை வெளியில் விடக்கூடாது என எச்சரித்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "11 நாளா சுத்தமாக தண்ணி வரல" - காலி குடத்துடன் ரோட்டில் இறங்கிய மக்கள்!

சென்னை: சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் பீமேஸ்வரன் கோவில் தெரு மற்றும் திருவேங்கடம் நகர் தெருவை இணைக்க கூடிய பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் திவ்யா என்கின்ற பெண், தனது வீட்டில் விலை உயர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட் (German Shepherd) இன வெளிநாட்டு நாய் வளர்த்து வருகிறார்.

கட்டுப்பாடு இன்றி திரிந்த வளர்ப்பு நாய் (Credits - ETV Bharat Tamil Nadu)

அந்த வளர்ப்பு நாயை முறையாக நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்லாமல் அப்படியே உலாவ விட்டு விடுவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து திவ்யாவின் வீட்டின் கதவு திறந்து வைக்கப்படுவதால் அவர் வளர்க்கும் நாய் தெருவுக்கு வந்து அப்பகுதி மக்களை கடிக்க பாய்வதாகவும், துரத்தி சென்று கடிக்க முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாம்பரம் மாநகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களை கடிக்க வந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து நாயை வளர்க்கும் திவ்யாவிடம் அப்பகுதி மக்கள் கேட்ட போது உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள், நாய் இப்படித்தான் திரியும் என அடாவடித்தனமாக கூறியதாகவும் அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், ஆக்ரோஷமாக திரியும் இந்த நாய் சாலையில் திரியும் மாடுகளையும் நாய்களையும் கடிக்க முயற்சிப்பதாகவும், இந்த நாயால் குழந்தைகளை வெளியே விட அச்சமாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, அப்பகுதியில் உள்ள ஒரு மழலையர் பள்ளிக்கு குழந்தைகளை விட வரும் பெற்றோர்கள், அந்த நாயால் எந்த ஒரு ஆபத்தும் ஏற்பட்டு விட கூடாது என சாலையை சுற்றி அழைத்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

வீட்டில் வளர்ப்பு நாய் வைத்துள்ளவர்கள் முறையான பராமரிப்பு செய்து, நாயின் வாய்க்கு MOUTH Guard போட வேண்டும் என்றும், சாலையில் சுற்றி திரியும் போது நாயை சங்கிலியால் கட்டி நடைப்பயிற்சிக்கு கூட்டி செல்ல வேண்டும் என்றெல்லாம் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்டுப்பாடுகள் எதையும் பின்பற்றாமல் நாய் வளர்க்கும் நபர் மீது தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். மேலும், திவ்யா என்பவர் வளர்க்கும் நாய் மக்களை துரத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சி கால்நடை மருத்துவர், சுகாதாரத்துறை அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கட்டுப்பாடின்றி நாயை வளர்த்து வந்த திவ்யாவிடம் விசாரணை நடத்தி, நாயை வெளியில் விடக்கூடாது என எச்சரித்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "11 நாளா சுத்தமாக தண்ணி வரல" - காலி குடத்துடன் ரோட்டில் இறங்கிய மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.