ETV Bharat / sports

ஜிம்பாப்வேயில் மகளிர் 20 ஓவர் உலக கோப்பை? 20ஆம் தேதி இறுதி முடிவு - Womens T20 World Cup 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 18, 2024, 3:41 PM IST

மகளிர் 20 ஓவர் உலக கோப்பையை நடத்த ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Representative image (Getty Images)

ஐதராபாத்: இந்த ஆண்டு அக்டோபர் மாதம் மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. முதலில் வங்கதேசத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த ஐசிசி திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில், வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவர் போராட்டம் மற்றும் நிலவும் வன்முறைச் சம்பவங்களை தொடர்ந்து அங்கு உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த ஐசிசி திட்டமிட்டது. ஆனால் அதற்கு பிசிசிஐ இசைந்து கொடுக்கவில்லை. அடுத்த ஆண்டு இந்தியாவில் ஒருநாள் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதால் அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகளில் ஐசிசி கோப்பைகளை நடத்துவது மற்றும் தற்போது இந்தியாவில் மழைக் காலம் என்பதை காரணம் காட்டி பிசிசிஐ தட்டிக் கழித்தது.

இதையடுத்து, மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ஐசிசி திட்டமிட்டது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடங்கியதாக அறிய முடிகிறது. இந்நிலையில், மகளிர் 20 ஓவர் உலக கோப்பை தொடரை நடத்த ஜிம்பாப்வே விருப்பம் தெரிவித்துள்ளது.

2018 மற்றும் 2023ஆம் ஆண்டு உலக கோப்பை தகுதிச் சுற்றை வெற்றிகரமாக நடத்திய நிலையில், நாட்டில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் விதமாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2003ஆம் ஆண்டு ஜிம்பாப்வே உலக கோப்பை தொடரை நடத்தி இருந்தது.

தென் ஆப்பிரிக்கா, கென்யா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து அப்போது ஜிம்பாப்வே உலக கோப்பை நடத்தியது. அதன் பின் நீண்ட நாட்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஜிம்பாப்வே விலகியே இருந்தது. சர்வதேச தொடர்களில் தகுதி பெற முடியாமல் போனது, அடுத்தடுத்து இரண்டு உலக கோப்பையில் தேர்வாகாதது உள்ளிட்ட காரணங்களால் உலக கிரிக்கெட்டில் இருந்து ஜிம்பாப்வே தனித்தே இருந்தது.

அதேநேரம், 2026ஆம் ஆண்டு நம்பீயாவுடன் சேர்ந்து ஜிம்பாப்வே 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையை நடத்துகிறது. மேலும், 2027ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா, நமீபியாவுடன் இணைந்து ஒருநாள் உலக கோப்பையை ஜிம்பாப்வே நடத்த உள்ளது. தற்போது வரை ஜிம்பாவேயில் இரண்டு சர்வதேச மைதானங்கள் உள்ளன.

மேலும் உள்ளூர் அரசுடன் இணைந்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் விக்டோரியா பால்ஸ் மற்றும் முடரே அகிய பகுதிகளில் பல்வேறு விளையாட்டுகளுக்கான மைதானங்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. தற்போது உள்ள ஹராரே மற்றும் குயின்ஸ் மைதானங்களில் மகளிர் உலக கோப்பையை நடத்த ஜிம்பாப்வே திட்டமிட்டுள்ளது.

ஜிம்பாப்வேயின் முடிவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இசைந்து கொடுக்குமா என்பது குறித்து வரும் செவ்வாய்க்கிழமை தெரியவரும். வரும் 20ஆம் தேதி மகளிர் 20 ஓவர் உலக கோப்பையை எங்கு நடத்துவது என்பது குறித்து ஐசிசி இறுதி முடிவு எடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:16ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட்டின் "தி கோட்"! ரோகித், கம்பீர் வாழ்த்து! - Virat Kohli

ஐதராபாத்: இந்த ஆண்டு அக்டோபர் மாதம் மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. முதலில் வங்கதேசத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த ஐசிசி திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில், வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவர் போராட்டம் மற்றும் நிலவும் வன்முறைச் சம்பவங்களை தொடர்ந்து அங்கு உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த ஐசிசி திட்டமிட்டது. ஆனால் அதற்கு பிசிசிஐ இசைந்து கொடுக்கவில்லை. அடுத்த ஆண்டு இந்தியாவில் ஒருநாள் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதால் அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகளில் ஐசிசி கோப்பைகளை நடத்துவது மற்றும் தற்போது இந்தியாவில் மழைக் காலம் என்பதை காரணம் காட்டி பிசிசிஐ தட்டிக் கழித்தது.

இதையடுத்து, மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ஐசிசி திட்டமிட்டது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடங்கியதாக அறிய முடிகிறது. இந்நிலையில், மகளிர் 20 ஓவர் உலக கோப்பை தொடரை நடத்த ஜிம்பாப்வே விருப்பம் தெரிவித்துள்ளது.

2018 மற்றும் 2023ஆம் ஆண்டு உலக கோப்பை தகுதிச் சுற்றை வெற்றிகரமாக நடத்திய நிலையில், நாட்டில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் விதமாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2003ஆம் ஆண்டு ஜிம்பாப்வே உலக கோப்பை தொடரை நடத்தி இருந்தது.

தென் ஆப்பிரிக்கா, கென்யா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து அப்போது ஜிம்பாப்வே உலக கோப்பை நடத்தியது. அதன் பின் நீண்ட நாட்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஜிம்பாப்வே விலகியே இருந்தது. சர்வதேச தொடர்களில் தகுதி பெற முடியாமல் போனது, அடுத்தடுத்து இரண்டு உலக கோப்பையில் தேர்வாகாதது உள்ளிட்ட காரணங்களால் உலக கிரிக்கெட்டில் இருந்து ஜிம்பாப்வே தனித்தே இருந்தது.

அதேநேரம், 2026ஆம் ஆண்டு நம்பீயாவுடன் சேர்ந்து ஜிம்பாப்வே 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையை நடத்துகிறது. மேலும், 2027ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா, நமீபியாவுடன் இணைந்து ஒருநாள் உலக கோப்பையை ஜிம்பாப்வே நடத்த உள்ளது. தற்போது வரை ஜிம்பாவேயில் இரண்டு சர்வதேச மைதானங்கள் உள்ளன.

மேலும் உள்ளூர் அரசுடன் இணைந்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் விக்டோரியா பால்ஸ் மற்றும் முடரே அகிய பகுதிகளில் பல்வேறு விளையாட்டுகளுக்கான மைதானங்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. தற்போது உள்ள ஹராரே மற்றும் குயின்ஸ் மைதானங்களில் மகளிர் உலக கோப்பையை நடத்த ஜிம்பாப்வே திட்டமிட்டுள்ளது.

ஜிம்பாப்வேயின் முடிவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இசைந்து கொடுக்குமா என்பது குறித்து வரும் செவ்வாய்க்கிழமை தெரியவரும். வரும் 20ஆம் தேதி மகளிர் 20 ஓவர் உலக கோப்பையை எங்கு நடத்துவது என்பது குறித்து ஐசிசி இறுதி முடிவு எடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:16ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட்டின் "தி கோட்"! ரோகித், கம்பீர் வாழ்த்து! - Virat Kohli

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.