ETV Bharat / sports

கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம்! டெண்டர் கோரும் தமிழ்நாடு அரசு! - coimbatore cricket stadium

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 10, 2024, 10:07 AM IST

coimbatore cricket stadium: கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit -ETV Bharat)

கோயம்புத்தூர்: நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், "வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களில் பெரும்பாலானவர்கள் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்.

இதனால் கோவை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த வீரர்களின் திறமையை வெளிக் கொண்டு வரும் வகையில், தமிழகத்திற்கு மற்றொரு உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானம், அனைத்து வசதிகளுடன் கோவையில் அமைக்கப்பட வேண்டும்"என வலியுறுத்தியிருந்தார். இதனை வரவேற்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோயம்புத்தூரில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக கோவை ஒண்டிப்புதூர், எல்அண்ட்டி நெடுஞ்சாலை, பாரதியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள இடம், சிறை மைதானம் ஆகிய 4 இடங்கள் கண்டறியப்பட்டன.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் மைதானம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அந்த இடம் சேலம் - கொச்சி நெடுச்சாலையில் இருப்பதால், அப்பகுதியில் மைதானம் அமைப்பது சரியாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இதற்கிடையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் இந்தாண்டில் தொடங்கப்படும்" என்று அறிவித்தார். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது.

இதையும் படிங்க: திருச்செந்துறையும் வக்ஃப் வாரிய விவகாரமும்.. நிரந்தர தீர்வுக்காக காத்திருக்கும் கிராம மக்கள்!

கோயம்புத்தூர்: நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், "வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களில் பெரும்பாலானவர்கள் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்.

இதனால் கோவை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த வீரர்களின் திறமையை வெளிக் கொண்டு வரும் வகையில், தமிழகத்திற்கு மற்றொரு உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானம், அனைத்து வசதிகளுடன் கோவையில் அமைக்கப்பட வேண்டும்"என வலியுறுத்தியிருந்தார். இதனை வரவேற்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோயம்புத்தூரில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக கோவை ஒண்டிப்புதூர், எல்அண்ட்டி நெடுஞ்சாலை, பாரதியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள இடம், சிறை மைதானம் ஆகிய 4 இடங்கள் கண்டறியப்பட்டன.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் மைதானம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அந்த இடம் சேலம் - கொச்சி நெடுச்சாலையில் இருப்பதால், அப்பகுதியில் மைதானம் அமைப்பது சரியாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இதற்கிடையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் இந்தாண்டில் தொடங்கப்படும்" என்று அறிவித்தார். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது.

இதையும் படிங்க: திருச்செந்துறையும் வக்ஃப் வாரிய விவகாரமும்.. நிரந்தர தீர்வுக்காக காத்திருக்கும் கிராம மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.