ETV Bharat / opinion

சீன மறுசீரமைப்பு: இந்தியா, இந்தோ-பசிபிக் பிராந்தியம் எதிர்கொள்ளும் சிக்கல்கள், சவால்கள் என்ன? - Chinese restructuring

சீன மறுசீரமைப்பு குறித்தும் சீன ராணுவத்தை நவீனமயமாக்கும் அதிபர் ஜி ஜின்பிங்கின் திட்டத்தால் இந்தியா மற்றும் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் பாதிப்புகள் ஏற்படுமா என்பது குறித்து ஓய்வு பெற்ற இந்திய மேஜர் ஜெனரல் ஹர்ஷா கக்கர் விவரிக்கிறார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 2, 2024, 6:43 PM IST

Etv Bharat
Etv Bharat

ஐதராபாத்: சீன ராணுவத்தின் முக்கிய படைப்பிரிவுகளில் ஒன்றான Strategic Support Force-ஐ நீக்குவதாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி சீனா அறிவித்தது. கடந்த 2015ஆம் ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்கால் சீன ராணுவத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது தான் இந்த அமைப்பு.

விண்வெளி, சைபர், தகவல் மற்றும் மின்னணு தாக்குதல் ஆகிய துறைகளில் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த அமைப்பு இயங்கி வந்தது. இந்நிலையில், சீனா அரசால் இந்த அமைப்பு நீக்கப்பட்டதை அடுத்து அதன் பணிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தகவல் உதவிப் படை () சைபர்ஸ்பேஸ் படை, ஏரோஸ்பேஸ் படை என சுதந்திர அமைப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று அமைப்புகளும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையை கொண்ட மத்திய ராணுவ ஆணையத்தை கீழ் இயங்கும் என்றும் அதன்படி கட்டளைகள் மற்றும் தகவல்கள் நேரிடியாக பகிர மற்றும் பிறப்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீனா ராணுவம் ஆயுதங்கள், ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் ராக்கெட் படை ஆகிய நான்கு சுதந்திர இயக்கங்களை கொண்ட உள்ளடக்கியது.

சைபர், தகவல் மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் சீனா எவ்வளவு ஆர்வம் கொண்டு உள்ளது என்பதை இது மேலும் கோடிட்டு காட்டுகிறது. மேலும், கடந்த ஏப்ரல் மாதம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், மறுசீரமைப்பிற்கு முன்னதாக இந்த விஷயத்தில் தீவிர விவாதங்கள் நடந்திருக்கும் என்றும் அதேநேரம் சீனா என்பதால் அதில் இறுதி முடிவில் விவாதங்களுக்கான வாய்ப்புகள் அதிகம் தெரியப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

Chinese restructuring
Chinese restructuring

இதுகுறித்து சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர் சந்திப்பின் போது, சைபர்ஸ்பேஸ் படை தேசிய இணைய எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், நெட்வொர்க் ஊடுருவல்களை உடனடியாக கண்டறிந்து எதிர்த்தல் மற்றும் தேசிய இணைய இறையாண்மை மற்றும் தகவல் பாதுகாப்பை பேணுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சைபர் தாக்குதல் செயல்பாடுகள் என்பது மத்திய ராணுவ ஆணையத்தின் எதிரிகளிடம் இருந்து வரும் எந்தவிதமான சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் விண்வெளிப் படையானது சீன விண்வெளித்துறையின் தேவையான விண்வெளியில் பாதுகாப்பாக நுழைதல், வெளியேறுதல், மற்றும் வெளிப்படைத் தன்மை கொண்ட பயன்பாட்டுத் திறனை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

இந்தியா உள்பட பெரும்பாலான நவீன ஆயுதப் படைகளுக்கு தனி விண்வெளி அமைப்புகள் உள்ளன. அண்மையில், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், விண்வெளி என்பது வான், நீர்ப்பரப்பு மற்றும் நில பிரதேசங்களில் தனது ஆதிக்கங்களை செலுத்திக் கூடியது என்று தெரிவித்திருந்தார்.

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனாவின் தகவல் தொடர்பு தாக்குதலை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சீரான இடைவெளியில் பெயர் மாற்றுவதும், பல ஊடக தளங்களில் சீனக் கதைகளை முன்னிறுத்துவதும் இதில் அடங்கும். இந்த நடவடிக்கைகள் சீனாவின் மூன்று போர் கருத்தின் ஒரு பகுதியாகும், இது பொதுக் கருத்து, உளவியல் மற்றும் சட்டப் போர் ஆகியவற்றை உள்ளடக்கியது.

சீன ராணுவத்தின் மறுசீரமைப்புக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தற்போதைய SSF அமைப்பு குறிப்பிடத்தக்க வகையில் வெற்றியடையவில்லை மற்றும் விண்வெளி, சைபர் மற்றும் நெட்வொர்க் பாதுகாப்புப் படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

இரண்டாவதாக, கடந்த ஆண்டு சீனாவின் கண்காணிப்பு பலூன் அமெரிக்கா மீது சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் அந்நாட்டுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பிளவை அதிகரித்தது. உளவு பார்ப்பதற்காக பலூன் பயன்படுத்தப்பட்டது குறித்து அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு தெரிவிக்கப்படவில்லை என தகவல்கள் கூறப்படுகின்றன.

மூன்றாவதாக, சீன ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளுக்குள், முக்கியமாக ராக்கெட் படைகளுக்குள் உள்ள ஊழலுக்கு எதிரான ஒடுக்குமுறை, அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான மத்திய ராணுவ ஆணையம் விரும்புவதாக கூறப்படுகிறது. நான்காவது கட்டளை மற்றும் ஆதரவு அமைப்புகளுக்கு இடையே தடையற்ற ஒத்துழைப்பை செயல்படுத்துவதாகும்.

கூட்டுத் தளவாட உதவிப் படையின் வெற்றியானது, சீன மத்திய ஆணையத்தின் கீழ் அதன் நேரடிச் செயல்பாடு அனைத்து நடவடிகளைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்தியதை பார்க்க முடிகிறது. ஐந்தாவதாக, ரஷ்யா- உக்ரைன் மற்றும் இஸ்ரேல்- காசா- ஈரான் ஆகியவற்றில் இருந்து வரும் உலகளாவிய பிரச்சினைகள்.

இந்தியாவும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சொந்த விண்வெளி மற்றும் சைபர் கட்டளை அமைப்புகளை உருவாக்கியுள்ளது. இந்திய ராணுவத்தின் தலைமை பணியாளர் குழு கடந்த 2012ஆம் ஆண்டு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ உள்ளிட்ட தற்போதைய சிவில் நிறுவனங்களுடன் அவற்றின் செயல்பாட்டை ஒருங்கிணைக்க முடிகிறது. தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடலில் உள்ள தீவுகள் தொடர்பாக சீனாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதட்டங்கள் அதிகரித்து வரும் நேரத்தில் சீன மறுசீரமைப்பு கொண்டு வரப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடனான எல்லக் கட்டுப்பாட்டு கோடு பகுதியிலும் சீனா தொடர்ந்து மோதல்களை சந்தித்து வருகிறது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் தாக்குதல், ஆதிக்கம் மற்றும் ரஷ்யாவிற்கு அது வழங்கி வரும் ஆதரவு காரணமாக அமெரிக்கா - சீனா இடையிலான உறவு நிலையற்றதாகவே உள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் திட்டமிட்ட சைபர் தாக்குதல்களில் ஈடுபட்டதாக அண்மைக் காலமாக சீனா குற்றஞ்சாட்டி வருகிறது. அதேபோல் இஸ்ரோ மற்றும் டிஆர்டிஓ உள்ளிட்ட இந்திய கட்டளை தளங்கள் தினமும் நூற்றுக்கணக்கான சைபர் தாக்குதல்களை எதிர்கொள்கின்றன, அதில் பெரும்பாலும் சீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

சீனாவின் சமீபத்திய மறு சீரமைப்பு சீர்திருத்தங்களும், 2035ஆம் ஆண்டிற்குள் ராணுவத்தை நவீனமயமாக்க அதிபர் ஜி ஜின்பிங் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. சீனாவில் அதிபர் தேர்தல் வர நீண்ட காலம் உள்ள நிலையில், அதற்குள்ளாக ராணுவத்தை நவீன மயமாக்க ஜி ஜின்பிங் திட்டமிட்டுள்ளாதாக சொல்லப்படுகிறது.

இந்திய விமானப்படைத் தளபதி, மார்ஷல் வி.ஆர் சவுத்ரி, பாரம்பரிய எல்லைகளான நிலம், கடல், வான்பரப்பு, சைபர் மற்றும் விண்வெளிக் களங்கள் போர் பரப்புகள் காரணமாக குறுகிய வண்ணம் மாறிவருவதாகவும், சீனாவின் மறுசீரமைப்பு என்பது இந்த களங்களை சீன ராணுவத்தின் மூலம் ஒன்றிணைப்பதை நோக்கமாக கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தியா - மியான்மர் இடையேயான சுதந்திர இயக்க ஒப்பந்தம் - நன்மைகளும்.. சவால்களும்!

ஐதராபாத்: சீன ராணுவத்தின் முக்கிய படைப்பிரிவுகளில் ஒன்றான Strategic Support Force-ஐ நீக்குவதாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி சீனா அறிவித்தது. கடந்த 2015ஆம் ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்கால் சீன ராணுவத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது தான் இந்த அமைப்பு.

விண்வெளி, சைபர், தகவல் மற்றும் மின்னணு தாக்குதல் ஆகிய துறைகளில் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த அமைப்பு இயங்கி வந்தது. இந்நிலையில், சீனா அரசால் இந்த அமைப்பு நீக்கப்பட்டதை அடுத்து அதன் பணிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தகவல் உதவிப் படை () சைபர்ஸ்பேஸ் படை, ஏரோஸ்பேஸ் படை என சுதந்திர அமைப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று அமைப்புகளும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையை கொண்ட மத்திய ராணுவ ஆணையத்தை கீழ் இயங்கும் என்றும் அதன்படி கட்டளைகள் மற்றும் தகவல்கள் நேரிடியாக பகிர மற்றும் பிறப்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீனா ராணுவம் ஆயுதங்கள், ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் ராக்கெட் படை ஆகிய நான்கு சுதந்திர இயக்கங்களை கொண்ட உள்ளடக்கியது.

சைபர், தகவல் மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் சீனா எவ்வளவு ஆர்வம் கொண்டு உள்ளது என்பதை இது மேலும் கோடிட்டு காட்டுகிறது. மேலும், கடந்த ஏப்ரல் மாதம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், மறுசீரமைப்பிற்கு முன்னதாக இந்த விஷயத்தில் தீவிர விவாதங்கள் நடந்திருக்கும் என்றும் அதேநேரம் சீனா என்பதால் அதில் இறுதி முடிவில் விவாதங்களுக்கான வாய்ப்புகள் அதிகம் தெரியப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

Chinese restructuring
Chinese restructuring

இதுகுறித்து சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர் சந்திப்பின் போது, சைபர்ஸ்பேஸ் படை தேசிய இணைய எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், நெட்வொர்க் ஊடுருவல்களை உடனடியாக கண்டறிந்து எதிர்த்தல் மற்றும் தேசிய இணைய இறையாண்மை மற்றும் தகவல் பாதுகாப்பை பேணுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சைபர் தாக்குதல் செயல்பாடுகள் என்பது மத்திய ராணுவ ஆணையத்தின் எதிரிகளிடம் இருந்து வரும் எந்தவிதமான சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் விண்வெளிப் படையானது சீன விண்வெளித்துறையின் தேவையான விண்வெளியில் பாதுகாப்பாக நுழைதல், வெளியேறுதல், மற்றும் வெளிப்படைத் தன்மை கொண்ட பயன்பாட்டுத் திறனை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

இந்தியா உள்பட பெரும்பாலான நவீன ஆயுதப் படைகளுக்கு தனி விண்வெளி அமைப்புகள் உள்ளன. அண்மையில், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், விண்வெளி என்பது வான், நீர்ப்பரப்பு மற்றும் நில பிரதேசங்களில் தனது ஆதிக்கங்களை செலுத்திக் கூடியது என்று தெரிவித்திருந்தார்.

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனாவின் தகவல் தொடர்பு தாக்குதலை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சீரான இடைவெளியில் பெயர் மாற்றுவதும், பல ஊடக தளங்களில் சீனக் கதைகளை முன்னிறுத்துவதும் இதில் அடங்கும். இந்த நடவடிக்கைகள் சீனாவின் மூன்று போர் கருத்தின் ஒரு பகுதியாகும், இது பொதுக் கருத்து, உளவியல் மற்றும் சட்டப் போர் ஆகியவற்றை உள்ளடக்கியது.

சீன ராணுவத்தின் மறுசீரமைப்புக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தற்போதைய SSF அமைப்பு குறிப்பிடத்தக்க வகையில் வெற்றியடையவில்லை மற்றும் விண்வெளி, சைபர் மற்றும் நெட்வொர்க் பாதுகாப்புப் படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

இரண்டாவதாக, கடந்த ஆண்டு சீனாவின் கண்காணிப்பு பலூன் அமெரிக்கா மீது சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் அந்நாட்டுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பிளவை அதிகரித்தது. உளவு பார்ப்பதற்காக பலூன் பயன்படுத்தப்பட்டது குறித்து அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு தெரிவிக்கப்படவில்லை என தகவல்கள் கூறப்படுகின்றன.

மூன்றாவதாக, சீன ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளுக்குள், முக்கியமாக ராக்கெட் படைகளுக்குள் உள்ள ஊழலுக்கு எதிரான ஒடுக்குமுறை, அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான மத்திய ராணுவ ஆணையம் விரும்புவதாக கூறப்படுகிறது. நான்காவது கட்டளை மற்றும் ஆதரவு அமைப்புகளுக்கு இடையே தடையற்ற ஒத்துழைப்பை செயல்படுத்துவதாகும்.

கூட்டுத் தளவாட உதவிப் படையின் வெற்றியானது, சீன மத்திய ஆணையத்தின் கீழ் அதன் நேரடிச் செயல்பாடு அனைத்து நடவடிகளைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்தியதை பார்க்க முடிகிறது. ஐந்தாவதாக, ரஷ்யா- உக்ரைன் மற்றும் இஸ்ரேல்- காசா- ஈரான் ஆகியவற்றில் இருந்து வரும் உலகளாவிய பிரச்சினைகள்.

இந்தியாவும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சொந்த விண்வெளி மற்றும் சைபர் கட்டளை அமைப்புகளை உருவாக்கியுள்ளது. இந்திய ராணுவத்தின் தலைமை பணியாளர் குழு கடந்த 2012ஆம் ஆண்டு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ உள்ளிட்ட தற்போதைய சிவில் நிறுவனங்களுடன் அவற்றின் செயல்பாட்டை ஒருங்கிணைக்க முடிகிறது. தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடலில் உள்ள தீவுகள் தொடர்பாக சீனாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதட்டங்கள் அதிகரித்து வரும் நேரத்தில் சீன மறுசீரமைப்பு கொண்டு வரப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடனான எல்லக் கட்டுப்பாட்டு கோடு பகுதியிலும் சீனா தொடர்ந்து மோதல்களை சந்தித்து வருகிறது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் தாக்குதல், ஆதிக்கம் மற்றும் ரஷ்யாவிற்கு அது வழங்கி வரும் ஆதரவு காரணமாக அமெரிக்கா - சீனா இடையிலான உறவு நிலையற்றதாகவே உள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் திட்டமிட்ட சைபர் தாக்குதல்களில் ஈடுபட்டதாக அண்மைக் காலமாக சீனா குற்றஞ்சாட்டி வருகிறது. அதேபோல் இஸ்ரோ மற்றும் டிஆர்டிஓ உள்ளிட்ட இந்திய கட்டளை தளங்கள் தினமும் நூற்றுக்கணக்கான சைபர் தாக்குதல்களை எதிர்கொள்கின்றன, அதில் பெரும்பாலும் சீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

சீனாவின் சமீபத்திய மறு சீரமைப்பு சீர்திருத்தங்களும், 2035ஆம் ஆண்டிற்குள் ராணுவத்தை நவீனமயமாக்க அதிபர் ஜி ஜின்பிங் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. சீனாவில் அதிபர் தேர்தல் வர நீண்ட காலம் உள்ள நிலையில், அதற்குள்ளாக ராணுவத்தை நவீன மயமாக்க ஜி ஜின்பிங் திட்டமிட்டுள்ளாதாக சொல்லப்படுகிறது.

இந்திய விமானப்படைத் தளபதி, மார்ஷல் வி.ஆர் சவுத்ரி, பாரம்பரிய எல்லைகளான நிலம், கடல், வான்பரப்பு, சைபர் மற்றும் விண்வெளிக் களங்கள் போர் பரப்புகள் காரணமாக குறுகிய வண்ணம் மாறிவருவதாகவும், சீனாவின் மறுசீரமைப்பு என்பது இந்த களங்களை சீன ராணுவத்தின் மூலம் ஒன்றிணைப்பதை நோக்கமாக கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தியா - மியான்மர் இடையேயான சுதந்திர இயக்க ஒப்பந்தம் - நன்மைகளும்.. சவால்களும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.