ETV Bharat / international

நேபாளத்தில் மீண்டும் ஆட்சி கவிழ்ப்பு? 16 ஆண்டுகளில் 13 முறை ஆட்சி கவிழ்ப்பு! - Nepal Government Dissolve

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 3:29 PM IST

Updated : Jul 2, 2024, 9:31 PM IST

நேபாளத்தில் பிரதமர் பிரசந்தா தலைமையிலான கூட்டணி அரசு கவிழும் அபாயம் நிலவுகிறது.

Etv Bharat
Nepal PM Pushpa Kamal Dahal 'Prachanda (ANI photo)

காத்மண்டு: நேபாளத்தில் இரு பெரும் கட்சிகளான நேபாலி காங்கிரஸ் மற்றும் நேபாளம் கம்யூனிஸ்ட் - ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் மற்றும் லெனின்ஸ்ட் கட்சிகள் இணைந்து அரசு அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டதை அடுத்து பிரதமர் பிரசந்தா தலைமையிலான அரசு கவிழும் சூழல் நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேபாலி காங்கிரஸ் தலைவர் ஷேர் பஹதுர் தியுபா மற்றும் நேபாளம் கம்யூனிஸ்ட் - ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் மற்றும் லெனின்ஸ்ட் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் கேபி சர்மா ஒலி ஆகியோர் நேபாளத்தில் ஆட்சியை அமைப்பது தொடர்பாக நள்ளிரவில் ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல் கூறப்படுகிறது.

மேலும், கேபி சர்மா ஒலி பிரதமராக பதவியேற்று கூட்டணி ஆட்சியை வழிநடத்திச் செல்லவும், இரு கட்சிகளிடையே ஒருமித்த கருத்துக்கு உடன்பாடு ஏற்பட்டதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேபி சர்மா ஒலி விரைவில் பொது மக்களிடையே அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் கமல் தஹல் பிரசந்தா தமையிலான அரசுக்கு கடந்த நான்கு மாதங்களாக வழங்கி வந்த ஆதரவை நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சி திரும்பப் பெற்றுக் கொண்டதை அடுத்து அவர் விரைவில் பதவி விலகுவார் எனக் கூறப்படுகிறது. நேபாலி காங்கிரஸ் மற்றும் நேபாளம் கம்யூனிஸ்ட் - ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் மற்றும் லெனின்ஸ்ட் கட்சிகளிடையே போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் படி கேபி சர்மா ஒலி ஒன்றரை ஆண்டுக பிரதமராகவும் மீதமுள்ள பதவிக் காலத்தில் ஷேர் பஹதுர் தியுபா பிரதமராக பதவி வகிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.

அமைச்சரவையை பொறுத்தவரையில் கேபி சர்மா தலைமையிலான நேபாளம் கம்யூனிஸ்ட் - ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் மற்றும் லெனின்ஸ்ட் கட்சிக்கு பிரதமர், நிதி உள்ளிட்ட துறைகளும், தியுபா தலைமையிலான நேபாலி காங்கிரஸ் கட்சிக்கு உள்துறை உள்ளிட 10 அமைச்சரவை பதவிகளும் வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நேபாளத்தில் ஆட்சி கவிழ்ப்பு என்பது புதியது அல்ல. கடந்த 16 ஆண்டுகளில் 13 முறை அங்கு ஆட்சி கவிழ்ப்பு ஏற்பட்டு புதிய அரசு அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 275 உறுப்பினர்களை கொண்ட நேபாளம் நாடாளுமன்றத்தில் நேபாலி காங்கிரஸ் கடசிக்கு 89 உறுப்பினர்கள் உள்ளனர்.

நேபாளம் கம்யூனிஸ்ட் - ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் மற்றும் லெனின்ஸ்ட் கட்சிக்கு 78 உறுப்பினர்களும், பிரதமர் பிரசந்தா தலைமையிலான நேபாளம் காங்கிரஸ்- மாவோயிஸ்ட் கடிக்கு 32 உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இலங்கை தமிழர்களின் அரசியல் முகமான இரா.சம்பந்தன் காலமானார்.. பிரதமர் மோடி உள்ளிடோர் இரங்கல்! - SriLanka MP R Sampanthan

காத்மண்டு: நேபாளத்தில் இரு பெரும் கட்சிகளான நேபாலி காங்கிரஸ் மற்றும் நேபாளம் கம்யூனிஸ்ட் - ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் மற்றும் லெனின்ஸ்ட் கட்சிகள் இணைந்து அரசு அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டதை அடுத்து பிரதமர் பிரசந்தா தலைமையிலான அரசு கவிழும் சூழல் நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேபாலி காங்கிரஸ் தலைவர் ஷேர் பஹதுர் தியுபா மற்றும் நேபாளம் கம்யூனிஸ்ட் - ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் மற்றும் லெனின்ஸ்ட் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் கேபி சர்மா ஒலி ஆகியோர் நேபாளத்தில் ஆட்சியை அமைப்பது தொடர்பாக நள்ளிரவில் ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல் கூறப்படுகிறது.

மேலும், கேபி சர்மா ஒலி பிரதமராக பதவியேற்று கூட்டணி ஆட்சியை வழிநடத்திச் செல்லவும், இரு கட்சிகளிடையே ஒருமித்த கருத்துக்கு உடன்பாடு ஏற்பட்டதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேபி சர்மா ஒலி விரைவில் பொது மக்களிடையே அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் கமல் தஹல் பிரசந்தா தமையிலான அரசுக்கு கடந்த நான்கு மாதங்களாக வழங்கி வந்த ஆதரவை நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சி திரும்பப் பெற்றுக் கொண்டதை அடுத்து அவர் விரைவில் பதவி விலகுவார் எனக் கூறப்படுகிறது. நேபாலி காங்கிரஸ் மற்றும் நேபாளம் கம்யூனிஸ்ட் - ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் மற்றும் லெனின்ஸ்ட் கட்சிகளிடையே போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் படி கேபி சர்மா ஒலி ஒன்றரை ஆண்டுக பிரதமராகவும் மீதமுள்ள பதவிக் காலத்தில் ஷேர் பஹதுர் தியுபா பிரதமராக பதவி வகிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.

அமைச்சரவையை பொறுத்தவரையில் கேபி சர்மா தலைமையிலான நேபாளம் கம்யூனிஸ்ட் - ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் மற்றும் லெனின்ஸ்ட் கட்சிக்கு பிரதமர், நிதி உள்ளிட்ட துறைகளும், தியுபா தலைமையிலான நேபாலி காங்கிரஸ் கட்சிக்கு உள்துறை உள்ளிட 10 அமைச்சரவை பதவிகளும் வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நேபாளத்தில் ஆட்சி கவிழ்ப்பு என்பது புதியது அல்ல. கடந்த 16 ஆண்டுகளில் 13 முறை அங்கு ஆட்சி கவிழ்ப்பு ஏற்பட்டு புதிய அரசு அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 275 உறுப்பினர்களை கொண்ட நேபாளம் நாடாளுமன்றத்தில் நேபாலி காங்கிரஸ் கடசிக்கு 89 உறுப்பினர்கள் உள்ளனர்.

நேபாளம் கம்யூனிஸ்ட் - ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் மற்றும் லெனின்ஸ்ட் கட்சிக்கு 78 உறுப்பினர்களும், பிரதமர் பிரசந்தா தலைமையிலான நேபாளம் காங்கிரஸ்- மாவோயிஸ்ட் கடிக்கு 32 உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இலங்கை தமிழர்களின் அரசியல் முகமான இரா.சம்பந்தன் காலமானார்.. பிரதமர் மோடி உள்ளிடோர் இரங்கல்! - SriLanka MP R Sampanthan

Last Updated : Jul 2, 2024, 9:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.