இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிடுவது, உரையாடல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் பயனர்கள் தடங்கல்களுக்கு உள்ளாகினர். இந்நிலையில் தேசிய பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தானில் எக்ஸ் தளத்திற்கு தடை கடந்த பிப்ரவரி மாதம் முதல் இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் இடைப்பட்ட காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எக்ஸ் தளத்தில் பரவிய நிலையில், அது தொடர்பாக அரசு வழங்கிய எக்ஸ் கணக்குகளை முடக்குவது மற்றும் தளத்தில் இருந்து அகற்றுவது குறித்து எக்ஸ் தளத்துடன் முரண்பாடு ஏற்பட்டதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக நீதிமன்ற்த்தில் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. மேலும், எக்ஸ் தளத்தை தவறான முறையில் பயன்படுத்துவது மற்றும் அதனால் நாட்டின் பாதுகாப்பு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக தடை விதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பதற்றமான சூழல்களில் எக்ஸ் தளம் அரசுடன் இணைந்து பணியாற்றுவது மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் செய்திகள் பரவுவதை தடுக்க தவறியதாக உள்துறை அமைச்சகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. வழக்கை விசாரித்த சிந்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, நாட்டில் எக்ஸ் தளத்தை முடக்கியதன் மூலம் அரசு என்ன பலன் அடைந்தது, உலகமே பாகிஸ்தானை பார்த்து சிரிக்க வேண்டுமா என கடுமையாக கேள்வி எழுப்பினார்.
மேலும், எக்ஸ் தளத்தை நாட்டில் மீண்டும் ஒரு வார காலத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்றும் இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் பதிலளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி சம்மன் வழங்க உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் சரியாக பதிலளிக்க தவறும் பட்சத்தில் பிரதமருக்கு சம்மன் அனுப்பப்படும் என்றும் நீதிபதி கூறினார்.
முன்னதாக கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற கலவர சம்பவங்களை தொடர்ந்து நாடு முழுவதும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஐக்கிய அரபு அமீரகத்தில் வரலாறு காணாத கனமழை பெருவெள்ளம்! ஓமனில் 18 பேர் பலி! திகைத்துப் போன வளைகுடா நாடுகள்! - UAE Flood