ETV Bharat / international

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அனுரா குமார திசநாயக - Anura Kumara swearing in ceremony

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

தேசிய மக்கள் சக்தி (என்பிபி) தலைவரான அனுரா குமார திசநாயக, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் தனது நெருங்கிய போட்டியாளரும், முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான சமகி ஜன பலவேகயா கட்சியின் (எஸ்ஜேபி) சஜித் பிரேமதாசவை தோற்கடித்தார்.

இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயக
இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயக (Image Credits - AP)

கொழும்பு: இலங்கையின் 9-வது அதிபராக அனுரகுமார திசநாயக இன்று பதவியேற்றார். 56 வயதான திசநாயகவுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் அந்நாட்டின் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரியா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் சக்தி (என்பிபி) தலைவரான அனுரா குமார திசநாயக, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் தனது நெருங்கிய போட்டியாளரும், முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான சமகி ஜன பலவேகயா கட்சியின் (எஸ்ஜேபி) சஜித் பிரேமதாசவை தோற்கடித்தார்.

இத்தேர்தலில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் அனுரா குமார திசநாயத, சஜித் பிரேமதசா மற்றும் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய மூவரிடையே பலத்த போட்டி நிலவியது. எனினும் வாக்கு எண்ணிக்கையில் ரணில் விக்கிரமசிங் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், வெற்றிக்குத் தேவையான 50 சதவீதத்துக்கும் மேலான வாக்குகள் யாருக்கும் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: ஈரானில் நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 30 பேர் உயிரிழப்பு!

இதையடுத்து இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக இரண்டாவது சுற்று விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் அனுரா குமார மொத்தம் 57,40,179 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சஜித் பிரேமதாச 4,530,902 வாக்குகள் பெற்றார்.

இலங்கை பிரதமர் ராஜினாமா:

அனுரா குமார திசநாயக பதவியேற்பதற்கு சற்று முன்னர், அதிபர் தேர்தலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அதிகார மாற்றத்தின் ஒரு பகுதியாக இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தன, தனது பதவியை ராஜிநாமா செய்தார். 75 வயதான குணவர்தன, 2022ம் ஆண்டு ஜூலை முதல் பிரதமராக இருந்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, ஊழலை ஒழிப்பது ஆகிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அனுரா திசநாயக புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.

கொழும்பு: இலங்கையின் 9-வது அதிபராக அனுரகுமார திசநாயக இன்று பதவியேற்றார். 56 வயதான திசநாயகவுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் அந்நாட்டின் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரியா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் சக்தி (என்பிபி) தலைவரான அனுரா குமார திசநாயக, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் தனது நெருங்கிய போட்டியாளரும், முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான சமகி ஜன பலவேகயா கட்சியின் (எஸ்ஜேபி) சஜித் பிரேமதாசவை தோற்கடித்தார்.

இத்தேர்தலில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் அனுரா குமார திசநாயத, சஜித் பிரேமதசா மற்றும் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய மூவரிடையே பலத்த போட்டி நிலவியது. எனினும் வாக்கு எண்ணிக்கையில் ரணில் விக்கிரமசிங் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், வெற்றிக்குத் தேவையான 50 சதவீதத்துக்கும் மேலான வாக்குகள் யாருக்கும் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: ஈரானில் நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 30 பேர் உயிரிழப்பு!

இதையடுத்து இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக இரண்டாவது சுற்று விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் அனுரா குமார மொத்தம் 57,40,179 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சஜித் பிரேமதாச 4,530,902 வாக்குகள் பெற்றார்.

இலங்கை பிரதமர் ராஜினாமா:

அனுரா குமார திசநாயக பதவியேற்பதற்கு சற்று முன்னர், அதிபர் தேர்தலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அதிகார மாற்றத்தின் ஒரு பகுதியாக இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தன, தனது பதவியை ராஜிநாமா செய்தார். 75 வயதான குணவர்தன, 2022ம் ஆண்டு ஜூலை முதல் பிரதமராக இருந்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, ஊழலை ஒழிப்பது ஆகிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அனுரா திசநாயக புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.