ETV Bharat / health

30 நாட்களுக்கு சாதத்தை தவிர்ப்பதால் இவ்வளவு மாற்றங்களா? ஆய்வு சொல்வது என்ன? - what happens if you dont eat rice

author img

By ETV Bharat Health Team

Published : 17 hours ago

what happens if you don't eat rice: ஒரு மாதத்திற்கு அரிசி உணவை சாப்பிடாமல் இருப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty images)

'நமக்கு சோறு தான் முக்கியம்'..இந்த வரிகளை தங்களோடு பொருத்திக் கொள்ளாதவர்கள் யாரேனும் இருக்க முடியுமா? என்ன தான் வகை வகையாக சாப்பிட ஆசைப்பட்டாலும், ஒரு வேளை உணவில் சாதம் இல்லை என்றால் அவ்வளவு தான்..தலைவலி, பசி என அனைத்தும் படையெடுக்க ஆரம்பித்துவிடும். அப்படி, தமிழர்கள் வாழ்வில் இருந்து அகற்ற முடியாத உணவாக இருக்கும் சாதத்தை 30 நாட்களுக்கு சாப்பிடாமல் இருந்தால் என்னவாகும்? உங்களுக்குத் தெரியுமா?

எடை இழப்பு?: ஒரு மாதம் அரிசி உணவை நீங்கள் உட்கொள்ளாமல் இருந்தால், உடலில் கலோரிகள் குறைவதன் காரணமாக உடல் எடை குறைய வாய்ப்புகள் அதிகம். அதே போல், கார்போஹைட்ரேடுகள் குறைபாட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் வருகிறது. ஆனால், சமச்சீரான உணவிற்கு தினசரி சிறிதளவு அரிசி எடுத்துகொள்வது சிறந்தது.

ஆராய்ச்சி சொல்வது என்ன?: பருமனானவர்கள் ஒரு மாதம் அரிசி சாப்பிடாமல் இருந்தால் 2 முதல் 3 கிலோ குறைவதாக ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் அண்ட் மெட்டபாலிசம் 2018ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் 120 நபர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லதா?: ஒரு மாதம் சாதம் சாப்பிடாமல் இருந்த பின்னர், மீண்டும் வழக்கம் போல நாம் அரிசி உண்ணும் போது எடை மற்றும் இரத்தம் சர்க்கரை அளவில் மாற்றம் ஏற்படும். அதுமட்டுமல்லாமல், அரிசியை முழுமையாக விடும் பொழுது உடலுக்கு தேவைப்படும் நார்ச்சத்து கிடைக்காமல் போய்கிறது. இதனால், மலச்சிக்கல் போன்ற உபாதைகளும் ஏற்படுகின்றன.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit -ETV Bharat)

உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?: ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உணவில் இருந்து சாதத்தை மொத்தமாக நீக்க வேண்டுமா என்றால் கண்டிப்பாக இல்லை என்று தான் கூற வேண்டும். முற்றிலுமாக சாப்பிடாமல் இருப்பதற்கு பதிலாக தினசரி ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளலாம். உடல் வலிமையாக இருக்க அரிசியில் உள்ள கார்போஹைடிரேட் அடிப்படையானவை. இவற்றை உணவில் இருந்து நீக்கிவது பலவீனம் அடையச்செய்கிறது.

அதுமட்டுமல்லாமல், ஊட்டச்சத்து மற்றும் தாதுக்கள் குறைபாடு ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கைப்படுகிறது. உடல் எடை குறைப்பது என்பது கொழுப்பை குறைப்பதற்கான வழியாக இருக்க வேண்டுமே தவிர தசை இழப்பிற்கும் வழிவகுக்கக்கூடாது.

இதையும் படிங்க:

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

'நமக்கு சோறு தான் முக்கியம்'..இந்த வரிகளை தங்களோடு பொருத்திக் கொள்ளாதவர்கள் யாரேனும் இருக்க முடியுமா? என்ன தான் வகை வகையாக சாப்பிட ஆசைப்பட்டாலும், ஒரு வேளை உணவில் சாதம் இல்லை என்றால் அவ்வளவு தான்..தலைவலி, பசி என அனைத்தும் படையெடுக்க ஆரம்பித்துவிடும். அப்படி, தமிழர்கள் வாழ்வில் இருந்து அகற்ற முடியாத உணவாக இருக்கும் சாதத்தை 30 நாட்களுக்கு சாப்பிடாமல் இருந்தால் என்னவாகும்? உங்களுக்குத் தெரியுமா?

எடை இழப்பு?: ஒரு மாதம் அரிசி உணவை நீங்கள் உட்கொள்ளாமல் இருந்தால், உடலில் கலோரிகள் குறைவதன் காரணமாக உடல் எடை குறைய வாய்ப்புகள் அதிகம். அதே போல், கார்போஹைட்ரேடுகள் குறைபாட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் வருகிறது. ஆனால், சமச்சீரான உணவிற்கு தினசரி சிறிதளவு அரிசி எடுத்துகொள்வது சிறந்தது.

ஆராய்ச்சி சொல்வது என்ன?: பருமனானவர்கள் ஒரு மாதம் அரிசி சாப்பிடாமல் இருந்தால் 2 முதல் 3 கிலோ குறைவதாக ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் அண்ட் மெட்டபாலிசம் 2018ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் 120 நபர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லதா?: ஒரு மாதம் சாதம் சாப்பிடாமல் இருந்த பின்னர், மீண்டும் வழக்கம் போல நாம் அரிசி உண்ணும் போது எடை மற்றும் இரத்தம் சர்க்கரை அளவில் மாற்றம் ஏற்படும். அதுமட்டுமல்லாமல், அரிசியை முழுமையாக விடும் பொழுது உடலுக்கு தேவைப்படும் நார்ச்சத்து கிடைக்காமல் போய்கிறது. இதனால், மலச்சிக்கல் போன்ற உபாதைகளும் ஏற்படுகின்றன.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit -ETV Bharat)

உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?: ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உணவில் இருந்து சாதத்தை மொத்தமாக நீக்க வேண்டுமா என்றால் கண்டிப்பாக இல்லை என்று தான் கூற வேண்டும். முற்றிலுமாக சாப்பிடாமல் இருப்பதற்கு பதிலாக தினசரி ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளலாம். உடல் வலிமையாக இருக்க அரிசியில் உள்ள கார்போஹைடிரேட் அடிப்படையானவை. இவற்றை உணவில் இருந்து நீக்கிவது பலவீனம் அடையச்செய்கிறது.

அதுமட்டுமல்லாமல், ஊட்டச்சத்து மற்றும் தாதுக்கள் குறைபாடு ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கைப்படுகிறது. உடல் எடை குறைப்பது என்பது கொழுப்பை குறைப்பதற்கான வழியாக இருக்க வேண்டுமே தவிர தசை இழப்பிற்கும் வழிவகுக்கக்கூடாது.

இதையும் படிங்க:

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.