ETV Bharat / health

ஐதராபாத்தில் 3 மாத குழந்தையின் 15 சென்டி மீட்டர் வால் அகற்றம்! அரிதான நிகழ்வு எனக் கூற காரணம் என்ன? - Hyderabad 3 month baby Tail Remove

தெலங்கானாவில் 3 மாத குழந்தைக்கு 15 சென்டி மீட்டர் அளவுக்கு இருந்த வாலை அறுவை சிகிச்சை மூலம் எய்ம்ஸ் மருத்துவர்கள் அகற்றினர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 17, 2024, 11:20 AM IST

Etv Bharat
Representational image (ETV Bharat)

யாதாதிரி: தெலங்கானாவில் பெண்ணுக்கு அண்மையில் வாலுடன் ஆண் குழந்தை பிறந்து உள்ளது. வாலுடன் பிறந்த குழந்தையை முதலில் அதிசயமாக பார்த்த நிலையில் அதுவே பின்னாட்களில் குடும்பத்தினருக்கு தலைவலியாக மாறியது. மூன்று மாதத்தில் குழந்தையின் வால் 15 சென்டி மீட்டர் அளவுக்கு வளர்ந்துள்ளது.

இதனால் கலக்கம் அடைந்த பெற்றோர், யாதாதிரி புவனகிரி மாவட்டம் பிபிநகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் முதுகுத் தண்டில் உள்ள 5 முதுகெழும்புடன் இணைக்கப்பட்ட எலும்பு வால் போல் வெளியே வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து நரம்பு மண்டலத்துடன் வால் இணைக்கப்பட்டு இருந்ததால் அறுவை சிகிச்சை செய்வதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வால் போன்ற எலும்பு மூளை மற்றும் நரம்பு மண்டலத்துடன் இணைந்து இருந்ததால், அறுவை சிகிச்சைக்கு பின்னரும் நரம்பியல் குறைபாடுகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் மூன்று மாத குழந்தைக்கு கடந்த ஜனவரி மாதம் ஐதராபாத் எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. குழந்தைகள் அறுவை சிகிச்சை துறையின் தலைவர் மருத்துவர் ஷஷாங் பாண்டா தலைமையிலான மருத்துவர்கள் குழு குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டது.

தொடர்ந்து 5 நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்ட நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. அதன் பின் ஆறு மாதம் மருத்துவர்களின் கண்காணிப்பில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. முதுகு தண்டுவடத்தில் உள்ள 5 எலும்புகளுடன் இணைந்தும் நரம்பு மண்டலம் மற்றும் மூளையுடன் தொடர்பில் இருந்ததால் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், இது போன்ற அறுவை சிகிச்சையில் நோயாளிக்கு நரம்பியல் குறைபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படும் நிலையில் குழந்தை எந்தவித பாதிப்பும் இன்றி பூர்ண நலத்துடன் இருப்பதாக ஐதராபாத் எய்ம்ஸ் மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற சம்பவங்கள் மருத்துவ வரலாற்றில் நடப்பது மிகவும் அரிதானது என்றும் இதுவரை உலகளவில் வெறும் 40 பேருக்கு மட்டுமே பிறக்கும் போது வால் போன்று முளைத்து இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நோய்களை கண்டறிய இனி சிறுநீர் பரிசோதனை தேவையில்லை! இதிலும் புகுந்த செயற்கை நுண்ணறிவு! - AMRX Software

யாதாதிரி: தெலங்கானாவில் பெண்ணுக்கு அண்மையில் வாலுடன் ஆண் குழந்தை பிறந்து உள்ளது. வாலுடன் பிறந்த குழந்தையை முதலில் அதிசயமாக பார்த்த நிலையில் அதுவே பின்னாட்களில் குடும்பத்தினருக்கு தலைவலியாக மாறியது. மூன்று மாதத்தில் குழந்தையின் வால் 15 சென்டி மீட்டர் அளவுக்கு வளர்ந்துள்ளது.

இதனால் கலக்கம் அடைந்த பெற்றோர், யாதாதிரி புவனகிரி மாவட்டம் பிபிநகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் முதுகுத் தண்டில் உள்ள 5 முதுகெழும்புடன் இணைக்கப்பட்ட எலும்பு வால் போல் வெளியே வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து நரம்பு மண்டலத்துடன் வால் இணைக்கப்பட்டு இருந்ததால் அறுவை சிகிச்சை செய்வதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வால் போன்ற எலும்பு மூளை மற்றும் நரம்பு மண்டலத்துடன் இணைந்து இருந்ததால், அறுவை சிகிச்சைக்கு பின்னரும் நரம்பியல் குறைபாடுகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் மூன்று மாத குழந்தைக்கு கடந்த ஜனவரி மாதம் ஐதராபாத் எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. குழந்தைகள் அறுவை சிகிச்சை துறையின் தலைவர் மருத்துவர் ஷஷாங் பாண்டா தலைமையிலான மருத்துவர்கள் குழு குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டது.

தொடர்ந்து 5 நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்ட நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. அதன் பின் ஆறு மாதம் மருத்துவர்களின் கண்காணிப்பில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. முதுகு தண்டுவடத்தில் உள்ள 5 எலும்புகளுடன் இணைந்தும் நரம்பு மண்டலம் மற்றும் மூளையுடன் தொடர்பில் இருந்ததால் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், இது போன்ற அறுவை சிகிச்சையில் நோயாளிக்கு நரம்பியல் குறைபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படும் நிலையில் குழந்தை எந்தவித பாதிப்பும் இன்றி பூர்ண நலத்துடன் இருப்பதாக ஐதராபாத் எய்ம்ஸ் மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற சம்பவங்கள் மருத்துவ வரலாற்றில் நடப்பது மிகவும் அரிதானது என்றும் இதுவரை உலகளவில் வெறும் 40 பேருக்கு மட்டுமே பிறக்கும் போது வால் போன்று முளைத்து இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நோய்களை கண்டறிய இனி சிறுநீர் பரிசோதனை தேவையில்லை! இதிலும் புகுந்த செயற்கை நுண்ணறிவு! - AMRX Software

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.