ETV Bharat / entertainment

"ரஜினி பட FDFS விஜய், அஜித் படங்களை விட மாஸா இருக்கு"... திருச்சியில் ’வேட்டையன்’ ரிலீஸ் கொண்டாட்டம்!

Vettaiyan release celebration: திருச்சியில் வேட்டையன் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு, ரஜினி ரசிகர்கள் கட் அவுட்டிற்கு ஒரு டன் மலர்களை தூவி பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 10, 2024, 12:45 PM IST

திருச்சி வேட்டையன் ரிலீஸ் கொண்டாட்டம்
திருச்சி வேட்டையன் ரிலீஸ் கொண்டாட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ’வேட்டையன்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், திருச்சியில் இன்று காலை வேட்டையன் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' பட வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடித்துள்ள 170வது திரைப்படம் 'வேட்டையன்’. இந்த படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குநர் ஞானவேல் இயக்கியுள்ளார். எனவே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

வேட்டையன் திரைப்படத்தில் என்கவுண்டர் செய்யும் காவல் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்துள்ளார். அதேபோல் 32 ஆண்டுகளுக்கு பிறகு, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ரஜின்காந்துடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மிக பிரமாண்டமாக ’வேட்டையன்’ திரைப்படம் இன்று வெளியானது.

திருச்சி வேட்டையன் ரிலீஸ் கொண்டாட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஜோடியாகவும், மலையாள நடிகர் பகத் பாசில், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, மற்றும் துசாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். திருச்சி எல்.ஏ திரையரங்கில் வேட்டையன் திரைப்பட வெளியீட்டை ரசிகர்கள் கொண்டாடினர்.

அப்போது திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றம் மாவட்ட துணை தலைவர் சுதர்சன் தலைமையில், மாவட்ட செயலாளர் கலீல் முன்னிலையில் ரஜினி ரசிகர்கள் வேட்டையன் திரைப்பட போஸ்டருக்கு ஒரு டன் மலர்களை தூவினர்.

பின்னர் சரவெடி, அணுகுண்டு போன்ற வெடிகளை வெடித்து ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக வேட்டையன் திரைப்படத்தை கொண்டாடினர். தற்போது ரஜினிகாந்த் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு ஓய்வு எடுத்து வரும் நிலையில், அவர் பூரண நலமுடன் நீண்ட நாள் வாழ வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர். மேலும் பேசிய ரசிகர், “எங்கள் தலைவருக்கு வயதே ஆகாது. என்றும் என் தலைவர் இளமையாக இருப்பார். என் தலைவன் நன்றாக இருந்தால் தான் நாங்கள் நன்றாக இருப்போம்” என்றார்.

இதையும் படிங்க: 'வேட்டையன்' திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்து கொண்டாடிய தனுஷ், அனிருத்!

இதனைத்தொடர்ந்து பேசிய ரசிகர் ஒருவர், “ரஜினி இந்த வயதிலும் நமக்காக படம் நடிக்கிறார். விஜய், அஜித் படங்களை விட ரஜினி படத்திற்கு ஹைப் அதிகமாக உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரஜினி அனைவரையும் கவர்ந்துள்ளார். முதல் காட்சி மிகவும் பிரமாண்டமாக உள்ளது” என்றார். இதனிடையே ரசிகர் ஒருவர் தனது கையில் கற்பூரத்தை ஏந்தி ரஜினிகாந்தின் போஸ்டருக்கு காட்டி வழிபட்டார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

திருச்சி: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ’வேட்டையன்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், திருச்சியில் இன்று காலை வேட்டையன் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' பட வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடித்துள்ள 170வது திரைப்படம் 'வேட்டையன்’. இந்த படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குநர் ஞானவேல் இயக்கியுள்ளார். எனவே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

வேட்டையன் திரைப்படத்தில் என்கவுண்டர் செய்யும் காவல் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்துள்ளார். அதேபோல் 32 ஆண்டுகளுக்கு பிறகு, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ரஜின்காந்துடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மிக பிரமாண்டமாக ’வேட்டையன்’ திரைப்படம் இன்று வெளியானது.

திருச்சி வேட்டையன் ரிலீஸ் கொண்டாட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஜோடியாகவும், மலையாள நடிகர் பகத் பாசில், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, மற்றும் துசாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். திருச்சி எல்.ஏ திரையரங்கில் வேட்டையன் திரைப்பட வெளியீட்டை ரசிகர்கள் கொண்டாடினர்.

அப்போது திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றம் மாவட்ட துணை தலைவர் சுதர்சன் தலைமையில், மாவட்ட செயலாளர் கலீல் முன்னிலையில் ரஜினி ரசிகர்கள் வேட்டையன் திரைப்பட போஸ்டருக்கு ஒரு டன் மலர்களை தூவினர்.

பின்னர் சரவெடி, அணுகுண்டு போன்ற வெடிகளை வெடித்து ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக வேட்டையன் திரைப்படத்தை கொண்டாடினர். தற்போது ரஜினிகாந்த் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு ஓய்வு எடுத்து வரும் நிலையில், அவர் பூரண நலமுடன் நீண்ட நாள் வாழ வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர். மேலும் பேசிய ரசிகர், “எங்கள் தலைவருக்கு வயதே ஆகாது. என்றும் என் தலைவர் இளமையாக இருப்பார். என் தலைவன் நன்றாக இருந்தால் தான் நாங்கள் நன்றாக இருப்போம்” என்றார்.

இதையும் படிங்க: 'வேட்டையன்' திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்து கொண்டாடிய தனுஷ், அனிருத்!

இதனைத்தொடர்ந்து பேசிய ரசிகர் ஒருவர், “ரஜினி இந்த வயதிலும் நமக்காக படம் நடிக்கிறார். விஜய், அஜித் படங்களை விட ரஜினி படத்திற்கு ஹைப் அதிகமாக உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரஜினி அனைவரையும் கவர்ந்துள்ளார். முதல் காட்சி மிகவும் பிரமாண்டமாக உள்ளது” என்றார். இதனிடையே ரசிகர் ஒருவர் தனது கையில் கற்பூரத்தை ஏந்தி ரஜினிகாந்தின் போஸ்டருக்கு காட்டி வழிபட்டார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.