ETV Bharat / entertainment

சென்னையில் தனது தாயாருக்காகச் சாய் பாபா கோயில் கட்டியுள்ளாரா விஜய்? - vijay sai baba temple

Actor and Tamilaga Vetri Kazhagam Leader Vijay Build Sai Baba temple: நடிகர் விஜய் தனது தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சென்னை கொரட்டூரில் சாய் பாபா கோயில் கட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 12, 2024, 10:27 PM IST

சென்னையில் தனது தாயாருக்காக சாய் பாபா கோயில் கட்டியுள்ளாரா விஜய்
சென்னையில் தனது தாயாருக்காக சாய் பாபா கோயில் கட்டியுள்ளாரா விஜய்

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்நிலையில் அரசியலில் ஈடுபட உள்ளதாகக் கூறி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இதன் காரணமாக விஜய் இனி படங்களில் நடிக்கப் போவது இல்லை என்று அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் விஜய் தனது அம்மா ஷோபாவுக்காக சென்னையில் மிகப் பெரிய சாய்பாபா கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார் என்று தகவல் வெளியானது.

இந்த தகவல் குறித்து விசாரித்த போது, விஜய் கிறிஸ்தவர் என்றாலும் அம்மா மீது மிகவும் அன்பு கொண்டவர். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய நடிகர் விஜய் அதே கையோடு இந்த சாய்பாபா கோயிலைச் சென்னை கொரட்டூர் பகுதியில் கட்டியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து மும்பையில் இருக்கும் சீரடி சாய்பாபா கோயிலுக்குச் சென்று வருவது வழக்கமாகக் கொண்டுள்ளார் விஜய். அதன் பின்னணி குறித்துப் பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

சீரடியில் இருக்கும் கோயிலைப் போல் தான் அமைக்க விரும்பிய நிலையில், கொரட்டூர் பகுதியில் சாய்பாபா கோயிலைக் கட்டியுள்ளார். பின்னர் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அதில் தமிழக வெற்றிக் கழக ஆலோசகர் விஜய் ரசிகர் மன்ற மேலாளருமான புஸ்ஸி ஆனந்த், விஜய்யின் தாயார் ஷோபா மற்றும் விஜய் ஆகியோர் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தைச் சிறப்பாக நடத்தினர். அதற்கான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏற்கனவே விஜய்க்கு சொந்தமான உதயம் தியேட்டர் அருகில் இருக்கும் இடத்தில் தான் சாய்பாபா கோயில் அமைப்பதாக முன்பு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அங்கு மெட்ரோ ரயில் அமைக்கப்பட்டதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதை தொடர்ந்து கொரட்டூரில் இருக்கும் அவரது இடத்தில் சுமார் எட்டு கிரவுண்ட் நிலப்பரப்பில் சாய்பாபா கோயில் விஜய் மற்றும் அவரின் குடும்பத்தாரால் அமைக்கப்பட்டது.

அரசியலில் வெல்ல வேண்டும் என்ற வேண்டுதலின் காரணமாகத் தான் விஜய் இந்த கோயிலைக் கட்டியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் சமீபத்தில் அளித்த பேட்டியில் "நமது இடத்தில் சாய் பாபா கோயில் கட்ட வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டதன் பேரில், விஜய் இந்த கோயிலைக் கட்டியுள்ளார். வாராவாரம் வியாழக்கிழமை இந்த கோயிலுக்கு வந்து வழிபடுவேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் 'குரங்கு பெடல்' ஃபர்ஸ்ட் லுக் டீசர் எப்படி இருக்கு? - Kurangu Pedal Movie

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்நிலையில் அரசியலில் ஈடுபட உள்ளதாகக் கூறி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இதன் காரணமாக விஜய் இனி படங்களில் நடிக்கப் போவது இல்லை என்று அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் விஜய் தனது அம்மா ஷோபாவுக்காக சென்னையில் மிகப் பெரிய சாய்பாபா கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார் என்று தகவல் வெளியானது.

இந்த தகவல் குறித்து விசாரித்த போது, விஜய் கிறிஸ்தவர் என்றாலும் அம்மா மீது மிகவும் அன்பு கொண்டவர். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய நடிகர் விஜய் அதே கையோடு இந்த சாய்பாபா கோயிலைச் சென்னை கொரட்டூர் பகுதியில் கட்டியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து மும்பையில் இருக்கும் சீரடி சாய்பாபா கோயிலுக்குச் சென்று வருவது வழக்கமாகக் கொண்டுள்ளார் விஜய். அதன் பின்னணி குறித்துப் பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

சீரடியில் இருக்கும் கோயிலைப் போல் தான் அமைக்க விரும்பிய நிலையில், கொரட்டூர் பகுதியில் சாய்பாபா கோயிலைக் கட்டியுள்ளார். பின்னர் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அதில் தமிழக வெற்றிக் கழக ஆலோசகர் விஜய் ரசிகர் மன்ற மேலாளருமான புஸ்ஸி ஆனந்த், விஜய்யின் தாயார் ஷோபா மற்றும் விஜய் ஆகியோர் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தைச் சிறப்பாக நடத்தினர். அதற்கான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏற்கனவே விஜய்க்கு சொந்தமான உதயம் தியேட்டர் அருகில் இருக்கும் இடத்தில் தான் சாய்பாபா கோயில் அமைப்பதாக முன்பு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அங்கு மெட்ரோ ரயில் அமைக்கப்பட்டதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதை தொடர்ந்து கொரட்டூரில் இருக்கும் அவரது இடத்தில் சுமார் எட்டு கிரவுண்ட் நிலப்பரப்பில் சாய்பாபா கோயில் விஜய் மற்றும் அவரின் குடும்பத்தாரால் அமைக்கப்பட்டது.

அரசியலில் வெல்ல வேண்டும் என்ற வேண்டுதலின் காரணமாகத் தான் விஜய் இந்த கோயிலைக் கட்டியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் சமீபத்தில் அளித்த பேட்டியில் "நமது இடத்தில் சாய் பாபா கோயில் கட்ட வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டதன் பேரில், விஜய் இந்த கோயிலைக் கட்டியுள்ளார். வாராவாரம் வியாழக்கிழமை இந்த கோயிலுக்கு வந்து வழிபடுவேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் 'குரங்கு பெடல்' ஃபர்ஸ்ட் லுக் டீசர் எப்படி இருக்கு? - Kurangu Pedal Movie

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.