ETV Bharat / entertainment

“முதலில் தனுஷ்.. இப்போது ஜி.வி...” கே.ராஜன் வைத்த முக்கிய வேண்டுகோள்! - K Rajan about Film stars Divorce

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 4:52 PM IST

Producer K Rajan: கன்னி படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், “தற்போது விவாகரத்து வழக்குகள் நீதிமன்றம் முழுவதும் நிரம்பி வழிகிறது. அந்த பண்பாடு சினிமாக்காரர்களால் வந்துவிடக் கூடாது என்பதே எனது வேதனை” என்று தெரிவித்தார்.

ஜிவி பிரகாஷ் குமார், சைந்தவி, தயாரிப்பாளர் கே.ராஜன் புகைப்படம்
ஜிவி பிரகாஷ் குமார், சைந்தவி, தயாரிப்பாளர் கே.ராஜன் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
மேடையில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சன் லைஃப் கிரியேஷன்ஸ் வழங்கும் கன்னி படத்தின் செய்தியாளர் சந்திப்பு, இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பேரரசு, “கூட இருப்பவர்கள் தான் குழி பறிப்பார்கள். கடந்த இரண்டு வருடங்களில் சிறிய பட்ஜெட் படங்களை வெற்றி பெற வைப்பது ஊடகங்கள் தான். கதாசிரியருக்கு முதல் தகுதி. அடுத்தவர் கதையை திருடக் கூடாது. அவர் கதை திருடன். வெளியே சொன்னால் அவன் பொய் சொல்லி விடுவானோ என்ற பயத்தில் வெளியே சொல்லாமல் இருக்கின்றனர். டிஸ்கஷன் என்பதோ போய் விட்டது. சித்த மருத்துவம் என்ற நல்ல விஷயங்களை மறந்துவிட்டோம்.

ஆங்கில மருந்துகள் அதிகரிக்க அதிகரிக்க சர்க்கரை அதிகரிக்கிறது. ஒரு குடும்பத்தில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது வீடுகளில் இயற்கை உணவுகள் சமைப்பது அதிகரித்துள்ளது. கரோனாவிற்கு பிறகு உயிர் பயத்தால் நாட்டு மருந்துகளின் அவசியம் தெரிகிறது. எனக்கு சிறுநீரக கல் இருந்தது. நாட்டு மருந்தால் தான் அதனை கரைத்தேன். நம் எல்லோருக்கும் முதல் தெய்வம் குலதெய்வம் தான் இருக்க வேண்டும்.

நாங்கள் சிலரைப் பற்றி பேசுவது சினிமா மீது உள்ள அக்கறை, தனிநபர் மீதுள்ள கோபம் அல்ல. எங்களை சாதிக் கட்சி தலைவர் ஆக்கி விடாதீர்கள்” என்று கூறினார். அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், “கரோனா நோய் வந்த பிறகு சித்த மருத்துவத்தின் மகத்துவம் தெரிந்தது. பக்கவிளைவு இல்லாதது. உடலுக்கு வலு சேர்ப்பது சித்த மருத்துவம். இன்னும் பத்து ஆண்டுகளில் சித்த மருத்துவம் பெரிய அளவில் உருவாகப் போகிறது.

முதல் போடும் முதலாளிக்கு துரோகம் செய்து தாம் மட்டுமே வாழ வேண்டும் என்று நினைக்கின்றனர். தமிழ் பண்பாடு கலாச்சாரம் என்றால் ஒருவருக்கு ஒருத்தி என்று வாழ்வது. சினிமாவில் பலர் அது போல காதலித்து வாழ்ந்து வருகின்றனர். தமிழக இளைஞர்கள் நடிகர்களை பின்தொடரர்கின்றனர். அதே போல் வாழ்க்கையையும் பின்பற்றினால் தமிழ் பண்பாடு, கலாச்சாரம் என்ன ஆவது? கடந்த மாதம் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து.

இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு நாங்கள் பிரிந்து போகிறோம் என்றால், அக்குழந்தைகளின் கதி என்ன? அவர்களின் ரசிகர்கள் இதனை பாலோ பண்ணிவிடக் கூடாது என்பது தான் என் வேதனை. இப்போது ஜிவி பிரகாஷ் குமார் - சைந்தவி. சைந்தவி நல்ல ஒழுக்கமான பெண். விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போவதில்லை.

தற்போது விவாகரத்து வழக்குகள் நீதிமன்றம் முழுவதும் நிரம்பி வழிகிறது. அந்த பண்பாடு சினிமாக்காரர்களால் வந்துவிடக் கூடாது என்பதே எனது வேதனை. கையெடுத்து கேட்டுக் கொள்கிறேன், கணவன், மனைவியாக தொடர்ந்து வாழுங்கள்” என்று பேசினார்.

இதையும் படிங்க: ஜிவி பிரகாஷ், சைந்தவி திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது... ரசிகர்கள் அதிர்ச்சி! - GV PRAKASH SAINDHAVI

மேடையில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சன் லைஃப் கிரியேஷன்ஸ் வழங்கும் கன்னி படத்தின் செய்தியாளர் சந்திப்பு, இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பேரரசு, “கூட இருப்பவர்கள் தான் குழி பறிப்பார்கள். கடந்த இரண்டு வருடங்களில் சிறிய பட்ஜெட் படங்களை வெற்றி பெற வைப்பது ஊடகங்கள் தான். கதாசிரியருக்கு முதல் தகுதி. அடுத்தவர் கதையை திருடக் கூடாது. அவர் கதை திருடன். வெளியே சொன்னால் அவன் பொய் சொல்லி விடுவானோ என்ற பயத்தில் வெளியே சொல்லாமல் இருக்கின்றனர். டிஸ்கஷன் என்பதோ போய் விட்டது. சித்த மருத்துவம் என்ற நல்ல விஷயங்களை மறந்துவிட்டோம்.

ஆங்கில மருந்துகள் அதிகரிக்க அதிகரிக்க சர்க்கரை அதிகரிக்கிறது. ஒரு குடும்பத்தில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது வீடுகளில் இயற்கை உணவுகள் சமைப்பது அதிகரித்துள்ளது. கரோனாவிற்கு பிறகு உயிர் பயத்தால் நாட்டு மருந்துகளின் அவசியம் தெரிகிறது. எனக்கு சிறுநீரக கல் இருந்தது. நாட்டு மருந்தால் தான் அதனை கரைத்தேன். நம் எல்லோருக்கும் முதல் தெய்வம் குலதெய்வம் தான் இருக்க வேண்டும்.

நாங்கள் சிலரைப் பற்றி பேசுவது சினிமா மீது உள்ள அக்கறை, தனிநபர் மீதுள்ள கோபம் அல்ல. எங்களை சாதிக் கட்சி தலைவர் ஆக்கி விடாதீர்கள்” என்று கூறினார். அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், “கரோனா நோய் வந்த பிறகு சித்த மருத்துவத்தின் மகத்துவம் தெரிந்தது. பக்கவிளைவு இல்லாதது. உடலுக்கு வலு சேர்ப்பது சித்த மருத்துவம். இன்னும் பத்து ஆண்டுகளில் சித்த மருத்துவம் பெரிய அளவில் உருவாகப் போகிறது.

முதல் போடும் முதலாளிக்கு துரோகம் செய்து தாம் மட்டுமே வாழ வேண்டும் என்று நினைக்கின்றனர். தமிழ் பண்பாடு கலாச்சாரம் என்றால் ஒருவருக்கு ஒருத்தி என்று வாழ்வது. சினிமாவில் பலர் அது போல காதலித்து வாழ்ந்து வருகின்றனர். தமிழக இளைஞர்கள் நடிகர்களை பின்தொடரர்கின்றனர். அதே போல் வாழ்க்கையையும் பின்பற்றினால் தமிழ் பண்பாடு, கலாச்சாரம் என்ன ஆவது? கடந்த மாதம் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து.

இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு நாங்கள் பிரிந்து போகிறோம் என்றால், அக்குழந்தைகளின் கதி என்ன? அவர்களின் ரசிகர்கள் இதனை பாலோ பண்ணிவிடக் கூடாது என்பது தான் என் வேதனை. இப்போது ஜிவி பிரகாஷ் குமார் - சைந்தவி. சைந்தவி நல்ல ஒழுக்கமான பெண். விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போவதில்லை.

தற்போது விவாகரத்து வழக்குகள் நீதிமன்றம் முழுவதும் நிரம்பி வழிகிறது. அந்த பண்பாடு சினிமாக்காரர்களால் வந்துவிடக் கூடாது என்பதே எனது வேதனை. கையெடுத்து கேட்டுக் கொள்கிறேன், கணவன், மனைவியாக தொடர்ந்து வாழுங்கள்” என்று பேசினார்.

இதையும் படிங்க: ஜிவி பிரகாஷ், சைந்தவி திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது... ரசிகர்கள் அதிர்ச்சி! - GV PRAKASH SAINDHAVI

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.