ETV Bharat / entertainment

"உண்மையான குரு டிவி விளம்பரம் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளமாட்டார்" - யாரை சொல்கிறார் செல்வராகவன்? - Selvaraghavan about meditation

author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 10, 2024, 6:20 PM IST

உண்மையான குருவை நீங்கள் தேடி போக வேண்டாம். அவரே உங்கள் முன் வருவார் என இயக்குநர் செல்வராகவன் வீடியோ மூலம் மகாவிஷ்ணுவை மறைமுகமாக உதாரணம்காட்டி ரசிகர்களுக்கு அட்வைஸ் கூறி உள்ளார்.

இயக்குநர் செல்வராகவன், கோப்புப்படம்
இயக்குநர் செல்வராகவன், கோப்புப்படம் (Credits - Selvaraghvan insta page and ETV Bharat Tamil Nadu)

சென்னை : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவரது படைப்புகள் அனைத்தும் காலம் கடந்தும் பேசப்படுபவை. இவர் சமீபத்தில் நடிகர் தனுஷ் இயக்கிய ராயன் படத்தில் நடித்திருந்தார்.

இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கருத்துக்கள் மற்றும் தத்துவங்கள் பேசி வீடியோ வெளியிடுவார். அந்தவகையில், தற்போது மகாவிஷ்ணு விவகாரம் பெரிதாகி உள்ள நிலையில், அவரை மறைமுகமாக உதாரணம் காட்டி ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

இதுகுறித்து செல்வராகவன் வெளியிட்டுள்ள வீடியோவில், "என்னங்க யாரோ ஒருத்தர், எதையோ உளறிக்கிட்டு நான் ஆன்மீக குரு என்று கண்டதை எல்லாம் பேசிக்கொண்டு இருந்தால் உடனே நீங்களும் ஒப்புக்கொள்வீர்களா? நூறு பேர் போய் முன்னாடி உட்காந்துட்டு கண்ணை மூடி விடுவீர்களா?. உண்மையான குருவை நீங்கள் தேடி போக வேண்டாம். அவரே உங்க முன்னாடி வருவார். உங்கள் சந்திப்பு தானாக நடக்கும். டிவியில் விளம்பரம் செய்து உங்களுக்கு நான் தியானம் சொல்லித் தருகிறேன் என்று உண்மையான குரு தன்னை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்.

என்னங்க நீங்க அவ்ளோ காய்ஞ்சு போயா கிடக்குறீங்க? தியானம் பண்ணறதுக்கு? தியானம் தான் உலகத்தில் சுலபமான விஷயம். உலகத்தில் உள்ள எல்லா கடவுள்களும் போதிக்கிறது கடவுள் உங்களுக்குள் இருக்கிறார் என்பதுதான். உலகத்தில் சுலபமான விஷயத்தை நமது ஈகோ உடனே ஒப்புக்கொள்ளுமா? அதுக்கு கஷ்டப்பட வேண்டும்.

இதையும் படிங்க: "விஜய்யின் அரசியல் வருகை பற்றி தவறாக பேசினேனா?" - நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம்! - mansoor about vijay political entry

புத்தர் சொன்ன டெக்னிக்தான். மூச்சு போகும் இடத்தில் உங்கள் நினைவுகளை வையுங்கள். நடுவில் வேறு சிந்தனை வந்தால் அதனை தவிர்க்க நினைக்காதீர்கள். அதுபாட்டுக்கு வரும் கொஞ்ச நேரம் இருக்கும். அப்புறம் போய்விடும்.

காலங்கள் போக, போக மற்ற சிந்தனைகள் அதுவாக நிற்க தொடங்கி விடும். புத்தர் இதனை தான் சொல்கிறார் தானாக நடக்கும். நீங்கள் நீச்சல் அடித்துக்கொண்டே இருந்தால் ஒருநாள் நீச்சல் வந்துவிடும். இதற்கு மாற்றுக்கருத்து இருந்தால் சொல்லுங்கள் நான் ஒப்புக்கொள்கிறேன்.

இதற்கு மாற்றுக்கருத்தே கிடையாது. தன்னை ஆன்மீகவாதி என்பவரை நம்பாமல் புத்தர் வழியில் தியானம் செய்யுங்கள் என மகாவிஷ்ணுவை மறைமுகமாக உதாரணம் காட்டி இயக்குநர் செல்வராகவன் வீடியோ வெளியிட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னை : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவரது படைப்புகள் அனைத்தும் காலம் கடந்தும் பேசப்படுபவை. இவர் சமீபத்தில் நடிகர் தனுஷ் இயக்கிய ராயன் படத்தில் நடித்திருந்தார்.

இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கருத்துக்கள் மற்றும் தத்துவங்கள் பேசி வீடியோ வெளியிடுவார். அந்தவகையில், தற்போது மகாவிஷ்ணு விவகாரம் பெரிதாகி உள்ள நிலையில், அவரை மறைமுகமாக உதாரணம் காட்டி ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

இதுகுறித்து செல்வராகவன் வெளியிட்டுள்ள வீடியோவில், "என்னங்க யாரோ ஒருத்தர், எதையோ உளறிக்கிட்டு நான் ஆன்மீக குரு என்று கண்டதை எல்லாம் பேசிக்கொண்டு இருந்தால் உடனே நீங்களும் ஒப்புக்கொள்வீர்களா? நூறு பேர் போய் முன்னாடி உட்காந்துட்டு கண்ணை மூடி விடுவீர்களா?. உண்மையான குருவை நீங்கள் தேடி போக வேண்டாம். அவரே உங்க முன்னாடி வருவார். உங்கள் சந்திப்பு தானாக நடக்கும். டிவியில் விளம்பரம் செய்து உங்களுக்கு நான் தியானம் சொல்லித் தருகிறேன் என்று உண்மையான குரு தன்னை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்.

என்னங்க நீங்க அவ்ளோ காய்ஞ்சு போயா கிடக்குறீங்க? தியானம் பண்ணறதுக்கு? தியானம் தான் உலகத்தில் சுலபமான விஷயம். உலகத்தில் உள்ள எல்லா கடவுள்களும் போதிக்கிறது கடவுள் உங்களுக்குள் இருக்கிறார் என்பதுதான். உலகத்தில் சுலபமான விஷயத்தை நமது ஈகோ உடனே ஒப்புக்கொள்ளுமா? அதுக்கு கஷ்டப்பட வேண்டும்.

இதையும் படிங்க: "விஜய்யின் அரசியல் வருகை பற்றி தவறாக பேசினேனா?" - நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம்! - mansoor about vijay political entry

புத்தர் சொன்ன டெக்னிக்தான். மூச்சு போகும் இடத்தில் உங்கள் நினைவுகளை வையுங்கள். நடுவில் வேறு சிந்தனை வந்தால் அதனை தவிர்க்க நினைக்காதீர்கள். அதுபாட்டுக்கு வரும் கொஞ்ச நேரம் இருக்கும். அப்புறம் போய்விடும்.

காலங்கள் போக, போக மற்ற சிந்தனைகள் அதுவாக நிற்க தொடங்கி விடும். புத்தர் இதனை தான் சொல்கிறார் தானாக நடக்கும். நீங்கள் நீச்சல் அடித்துக்கொண்டே இருந்தால் ஒருநாள் நீச்சல் வந்துவிடும். இதற்கு மாற்றுக்கருத்து இருந்தால் சொல்லுங்கள் நான் ஒப்புக்கொள்கிறேன்.

இதற்கு மாற்றுக்கருத்தே கிடையாது. தன்னை ஆன்மீகவாதி என்பவரை நம்பாமல் புத்தர் வழியில் தியானம் செய்யுங்கள் என மகாவிஷ்ணுவை மறைமுகமாக உதாரணம் காட்டி இயக்குநர் செல்வராகவன் வீடியோ வெளியிட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.